நுவரெலியா மாவட்ட சமாதான பேரவை மற்றும் மஸ்கெலியா சுகாதார அத்தியட்சகர் காரியாலயம் இணைந்து சாமிமலை நகரில் விழிப்புணர்வு செயல் அமர்வு நடைபெற்றது.
இந் நிகழ்வு இன்று சனிக்கிழமை காலை 10 30 க்கு சாமிமலை நகரில் உள்ள ஆலய மண்டபத்தில் நுவரெலியா மாவட்ட சமாதான பேரவையின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளர் திருமதி இரேஷா உதேனி தலைமையில் இடம்பெற்றது.
நிகழ்வில் மஸ்கெலியா சுகாதார அதிகாரி பிரிவில் உள்ள சாமிமலை பகுதியில் உள்ள பொது சுகாதார அதிகாரிகள் மற்றும் அப் பகுதியில் உள்ள பொது சுகாதார மருத்துவ தாதியர்கள் கலந்து கொண்டனர்.
சுமார் 200 க்கு மேற்பட்ட இளைஞர் யுவதிகள் கலந்து கொண்டனர்.
மிகவும் சிறப்பான முறையில் இளைஞர் யுவதிகளுக்கு சிறு பராயத்தில் திருமணம் செய்து படும் துன்பங்களை பற்றி விரிவாக எடுத்து கூறினார்கள்.
பள்ளி பருவத்தில் நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் மலையக பகுதியில் புறந்தள்ளப்பட்ட மக்களாக வாழ்ந்து வரும் பெருந்தோட்ட தொழிலாளர்கள் பிள்ளைகளுக்கு மிகவும் அவதானமாக எளிதாக விளங்க கூடிய வகையில் வளவாளர்கலாக கலந்து கொண்ட சாமிமலை பகுதியில் உள்ள பொது சுகாதார அதிகாரிகள் மற்றும் பொது சுகாதார மருத்துவ தாதியர்கள் எடுத்து கூறினார்கள்.
செ. தி. பெருமாள். மஸ்கெலியா நிருபர்






