பிரஜா சக்தி விழிப்புணரவு நிகழ்ச்சி இன்று நுவரெலியாவில் காலை 9.15 இற்கு நுவரெலியா நகர சினிசிட்டா மண்டபத்தில் நடைபெறுகிறது.
பிரஜா சக்தி தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் பிரஜா சக்தி பொதுச் செயலகம் மற்றும் கிராமப்புற மேம்பாடு, சமூகப் பாதுகாப்பு, சமூக வலுவூட்டல் அமைச்சகம் இணைந்து நடத்தும் நுவரெலியா மாவட்ட சமூக மேம்பாட்டு மன்றங்களின் தலைவர்கள், செயலாளர்களுக்குக் கல்வி கற்பிப்பதற்கான நிகழ்ச்சியாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் கிராமப்புற அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு, சமூக வலுவூட்டல் பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ, நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர், கல்வி, உயர்கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன, அரசியல் பிரதிநிதிகள், அரச அதிகாரிகள், கிராமப்புற பிரிவுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தலைவர்கள், செயலாளர்கள் எனப் பெருமளவானோர் கலந்து கொள்கின்றனர்.
மஸ்கெலியா நிருபர் செ. தி.பெருமாள்
