துப்பாக்கிச்சூடுபட்ட பிரியசாத் ஆபத்தான நிலையில்

பிரியசாத் படுகொலை:மூவர் கைது

துப்பாக்கிச்சூடுபட்ட பிரியசாத் ஆபத்தான நிலையில் இருப்பதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். டான் பிரியசாத் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்படவில்லை எனப் பொலிஸார் அறிவித்துள்ளனர். கொலன்னாவ, சாலமுல்ல பகுதியிலுள்ள வீடொன்றில் இருந்த சந்தர்ப்பத்தில் அரசியல் செயற்பாட்டாளரான டேன் பிரியசாத்தை இலக்கு வைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் காயமடைந்த அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான டேன் பிரியசாத் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகத் தெரிவித்திருந்த பொலிஸார், பிரியசாத் சாகவில்லை என்றும் ஆபத்தான கட்டத்தில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் பயங்கரவாதத் தாக்குதலில் 26பேர் பலி

இந்தியாவில் பயங்கரவாதத் தாக்குதலில் 26பேர் பலி

இந்தியாவில் பயங்கரவாதத் தாக்குதலில் 26பேர் பலியானதாகப் பிந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. ஜம்மு-காஷ்மிர் மாநிலத்தில் உள்ள சுற்றுலாத் தளமொன்றில் பிரிவினைவாதக் குழுவினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் 26பேர் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டவர்களின் வௌிநாட்டவர்கள் இருவரும் இந்திய கடற்படை வீரர் ஒருவரும் அடங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மைய காலத்தில் நடத்தப்பட்ட மிக மோசமான தாக்குதலாக இன்றைய தாக்குதல் கருதப்படுகிறது. சம்பவத்தைக் கேள்வியுற்ற பிரதமர் ஶ்ரீ நரேந்திர மோடி தனது சவூதி அரேபிய விஜயத்தை சுருக்கிக் கொண்டு நாடு திரும்புகிறார். இதனிடையே உள்துறை அமைச்சர் அமித் ஷா ஶ்ரீநகர் சென்றிருக்கிறார்.

சென்னையில் மூவருக்கு கொரோனா வைரஸ்!

சென்னையில் மூவருக்கு கொரோனா வைரஸ்!

சென்னையில் மூவருக்கு கொரோனா வைரஸ்!: கொரோனா வைரஸ் தொற்று தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக கட்டுக்குள் உள்ளது. இருப்பினும் கொரோனா வைரஸ் தீவிரத்தை, பொது சுகாதாரத்துறை தொடர்ந்து கண்காணித்து வருவதாக தமிழக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. காய்ச்சல், சளி, இருமல் உள்ளிட்டவற்றால் பாதிக்கப்படுபவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் நேற்று 32 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில், சென்னையைச் சேர்ந்த, 2 ஆண்கள், ஒரு பெண் என 3 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து அவர்கள் வைத்தியசாலையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது 3 பேரும் நலமுடன் உள்ளனர் என்றும் கொரோனா தொற்று பரவும் வகையிலான பாதிப்பு இல்லை என்றும் பொது சுகாதாரத்துறை பிரிவு தெரிவித்து உள்ளது.

காணி நிலம் வேண்டும் தேமசக்தி!

காணி நிலம் வேண்டும் தேமசக்தி!

காணி நிலம் வேண்டும் தேமசக்தி!: மலையக தமிழ் மக்கள் மீது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு உண்மைகவே அக்கறை இருந்தால் 10 பேர்ச்சஸ் காணியை உடன் வழங்க வேண்டும்.” – என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார். ஹட்டனில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். காணி நிலம் வேண்டும் பரா சக்தி காணி நிலம் வேண்டும் என்று பாரதியார் பாடியதைப்போன்று திகாம்பரம் மேலும் கூறியவை வருமாறு, ‘அனைத்து உள்ளுராட்சி சபைகளையும் கைப்பற்றுவதற்கு அரசாங்கம் முயற்சிக்கின்றது. ஆனால் எதிரணியில் இருந்தபோது தாம் செய்வதாகக் கூறிய விடயங்களை ஆட்சிக்கு வந்த பிறகு தேசிய மக்கள் சக்தி செய்யவில்லை. வழங்கப்பட்ட வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படவில்லை. மலையகத் தமிழர்கள் மற்றும் தோட்டத் தொழிலாளர்கள் மீது…

பஸ் விபத்தில் 22 இராணுவத்தினர் காயம்

பஸ் விபத்தில் 22 இராணுவத்தினர் காயம்

பஸ் விபத்தில் 22 இராணுவத்தினர் காயம்: நிட்டம்புவ – கிரிந்திவெல வீதியில் இன்று (21) இடம்பெற்ற விபத்தில் 22 இராணுவ வீரர்கள் படுகாயமடைந்துள்ளனர். நிட்டம்புவவிலிருந்து கிரிந்திவெல பகுதிக்கு இராணுவத்தினரை ஏற்றிச் சென்ற பஸ் வண்டி எதிரே வந்த லொறி ஒன்றுடன் விபத்து நேர்ந்ததாகப் பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் பஸ் சாரதி உள்பட 22பேர் காயமடைந்து வத்துப்பிட்டிவல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுள் 20பேர் சிகிச்சை பெற்று வெளியேறியதாவும் இராணுவ சாரதியும் மற்றொரு வீரரும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

வலுவடையும் டிரம்புக்கு எதிரான போராட்டம்

வலுவடையும் டிரம்புக்கு எதிரான போராட்டம்

வலுவடையும் டிரம்புக்கு எதிரான போராட்டம்: அமெரிக்க அதிபராக டிரம்ப் பொறுப்பேற்ற பின் பல்வேறு அதிரடி மாற்றங்களை அறிவித்து வருகிறார். அதில் வெளிநாட்டவர் வலுக்கட்டாய வெளியேற்றம், அரசு ஊழியர்கள் பணிநீக்கம், கல்வி நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டு வந்த நிதியுதவி நிறுத்தம் ஆகியவை மக்களிடம் கோபத்தை ஏற்படுத்தின இவரது இந்த நடவடிக்கை ஜனநாயகத்துக்கு எதிராக இருப்பதாகக் கூறி நாடு முழுவதும் மக்கள் போராட்டத்தில் குதித்தனர். இந்நிலையில், நியூயார்க், வாஷிங்டன் ஆகிய நகரங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் பேரணியாக சென்றனர். அப்போது அதிபர் டிரம்புக்கு எதிரான பதாகைகளை ஏந்திக் கொண்டு சென்ற அவர்கள் வெள்ளை மாளிகையையும் முற்றுகையிட முயன்றனர். இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது. எனவே அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்

சாமர சம்பத்துக்கு விளக்கமறியல் நீடிப்பு

சாமர சம்பத்துக்கு விளக்கமறியல் நீடிப்பு

சாமர சம்பத்துக்கு விளக்கமறியல் நீடிப்பு: பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான சாமர சம்பத் தசநாயக்கவை எதிர்வரும் மே 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. பதுளை நீதவான் நீதிமன்றம் இன்று (21) இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது

பாப்பரசர் மறைவுக்கு ஜனாதிபதி இரங்கல்:

பாப்பரசர் மறைவுக்கு ஜனாதிபதி இரங்கல்:

பாப்பரசர் மறைவுக்கு ஜனாதிபதி இரங்கல்: பாப்பரசர் பிரான்சிஸின் மறைவுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார். தனது அதிகாரப்பூர்வ X கணக்கில் இரங்கலை பதிவிட்ட ஜனாதிபதி, இலங்கை மக்கள் சார்பாக பாப்பரசருக்கு தனது மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார். அமைதி, இரக்கம் மற்றும் மனிதநேயத்திற்காக அவரின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு உலகில் ஓர் அழியாத அடையாளத்தை ஏற்படுத்தியுள்ளது என்று ஜனாதிபதியின் X கணக்கில் குறிப்பிடப்பட்டுள்ளது அவரது கருணை, நீதி, மதங்களுக்கு இடையேயான நல்லிணக்கம் ஆகியவற்றின் மரபு எதிர்கால சந்ததியினருக்கு ஒரு முன்மாதிரியாக அமையும் என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் காலமானார்

பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் காலமானார்

பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் காலமானார் என்று வத்திக்கான் அறிவித்துள்ளது. தமது 88 ஆவது வயதில் பாப்பரசர் காலமானதாக காணொளி அறிக்கையொன்றின் ஊடாக வத்திகான் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. சுகவீனம் காரணமாக அண்மையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த பாப்பரசர் பிரான்சிஸ், குணமடைந்து வெளியேறிய நிலையில் ஓய்வில் இருந்தார். இந்நிலையில், இன்று அவர் காலமானாதாக அறிவிக்கப்பட்டுள்ளது. லத்தீன் அமெரிக்காவைச் சேர்ந்த முதலாவது பாப்பரசரான அவர் 12 ஆண்டுகள் இறைசேவையில் இருந்தார்.

அதிகாரத்தைக் கைப்பற்றவே ஈஸ்டர் தாக்குதல்

அதிகாரத்தைக் கைப்பற்றவே ஈஸ்டர் தாக்குதல்

அதிகாரத்தைக் கைப்பற்றவே ஈஸ்டர் தாக்குதல்: அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுவதற்காகவே 2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத்தில் தாக்குதல் நடந்ததாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்தார். பொலன்னறுவையில் இன்று(20) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார். கடந்த ஐந்தரை வருடங்களாக விசாரணைகள் என்ற போர்வையில் தாக்குதலுடன் தொடர்புடையவர்களின் தகவல்களை மறைக்கும் முயற்சிகளே மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டார். அதிகாரத்தைக் கைப்பற்றவே ஈஸ்டர் தாக்குதல் நடத்தப்பட்டதால்தான் 2019இல் ஆட்சிக்கு வந்த அரசாங்கத்திற்கோ அதைத் தொடர்ந்து வந்த அரசாங்கத்திற்கோ இந்தத் தாக்குதலுடன் தொடர்புடைய சூத்திரதாரிகளைச் சட்டத்தின் முன்கொண்டுவருவதற்கான நோக்கம் இருக்கவில்லை. தாம் ஆட்சிக்கு வந்து 6 மாதங்களே ஆகியுள்ள போதிலும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய மற்றும் பொறுப்புக்கூறவேண்டியவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு அவசியமான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்தார். உயிர்த்த ஞாயிறு…