விமானப்படை கெலி விபத்தில் அறுவர் பலி

விமானப்படை கெலி விபத்தில் அறுவர் பலி

விமானப்படை கெலி விபத்தில் அறுவர் பலி யானதாக விமானப் படை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயிற்சி முடித்து வெளியேறும் வைபத்தில் பங்குபற்றிய பெல் 212 கெலிகொப்டர் மாதுறுஓயா ஆற்றில் வீழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்தச் சந்தர்ப்பத்தில் 12 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக முன்னர் அறிவிக்கப்பட்டது. எனினும், விமானப் படை வீரர்கள் உட்பட அறுவர் உயிரிழந்துவிட்டதாக விமானப் படைய வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் தெரிவிக்கப்ப்டுள்ளது. இந்தச் சம்பவம் இன்று காலை 6.45 அளவில் இடம்பெற்றுள்ளது. இன்று காலை 6.45 அளவில் இடம்பெற்ற இந்தச் சம்பவம் பற்றி முழுமையாக ஆய்வு நடத்த ஒன்பது பேர் கொண்ட குழுவொன்றை விமானப் படைத் தளபதி நியமித்துள்ளார்.

நாடு முழுவதும் 62வீதம் வாக்குப்பதிவு

நாடு முழுவதும் 62வீதம் வாக்குப்பதிவு

நாடு முழுவதும் 62வீதம் வாக்குப்பதிவு இடம்பெற்றிருப்பதாகத் தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 07 மணிக்கு ஆரம்பமாகி மாலை 4:00 மணிக்கு நிறைவடைந்தது. இதற்கமைய, தேர்தல் மாவட்டங்கல் பலவற்றில் மாலை 04 மணி வரையலான வாக்குப்பதிவு வீதம் 60 % ஐ தாண்டியுள்ளது. 4 மணி வரை பதிவான வாக்குப்பதிவு வீதம் பின்வருமாறு, மன்னார் – 70%திருகோணமலை – 67%பொலன்னறுவை – 64%அநுராதபுரம் – 64%காலி – 63%திகாமடுல்ல – 63% மாத்தளை – 62%மட்டக்களப்பு – 61% மொனராகலை – 61%களுத்துறை – 61%வவுனியா – 60%பதுளை – 60%நுவரெலியா – 60%முல்லைத்தீவு – 60% இரத்தினபுரி- 60%கிளிநொச்சி – 60%கேகாலை – 58% மாத்தறை- 58%புத்தளம் – 55% கொழும்பு- 52% நாடு முழுவதும் 62வீதம்…

இரத்தினபுரி மாவட்டத்தில் அமைதியான வாக்களிப்பு

இரத்தினபுரி மாவட்டத்தில் அமைதியான வாக்களிப்பு

இரத்தினபுரி மாவட்டத்தில் அமைதியான வாக்களிப்பு: 2025 உள்ளூராட்சி மன்ற தேர்தல் இரத்தினபுரி மாவட்டத்தில் காலை 7.00 மணிக்கு ஆரம்பமாகியது . 689 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்பு மாலை நான்கு மணிவரை நடைபெற்றது. வட்டார மூலம் 258 உறுப்பினர்களும் இரட்டை தொகுதி மூலம் 165 உறுப்பினர்களும் தெரிவு செய்யப்படவுள்ளனர். இரத்தினபுரி மாவட்டத்தில் 932850 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர்.சகல வாக்களிப்பு நிலையங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. இதேவேளை, இறக்குவானை தேர்தல் தொகுதியில் இறக்குவானை நகர் பரிசுத்த யோவான் தமிழ் தேசிய கல்லூரியில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வாக்களிப்பு காலை ஏழு மணிமுதல் சுறுசுறுப்பாக நடைபெற்றது. மக்கள் வரிசையாக நின்று விறுவிறுப்பாக வாக்களிப்பில் ஈடுபட்டனர். வாக்கெடுப்பு நிறைவுற்றதையடுத்து வாக்குகளை எண்ணும் பணிகள் தற்போது ஆரம்பமாகியுள்ளன. எம். சந்திரகுமார், இறக்குவானை

நுவரெலியாவில் 60வீத வாக்குப் பதிவு

நுவரெலியாவில் 60வீத வாக்குப் பதிவு

நுவரெலியாவில் 60வீத வாக்குப் பதிவு: உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று (6) காலை 7 மணிக்கு ஆரம்பமாகி மாலை 4 மணியுடன் நிறைவுபெற்றது. நுவரெலியா மாவட்டத்தில் வாக்களிப்பு மாலை 04.00 மணி வரை சுமூகமாக இடம் பெற்றதாகவும் 60% சதவீதமான வாக்குகள் அளிக்கப்பட்டதாகவும் மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரி / மாவட்ட செயலாளர் திருமதி. துசாரி தென்னகோன் தெரிவித்துள்ளார். நுவரெலியா மாவட்டத்தில் இன்று (6) நண்பகல் 12 மணி வரையான காலப்பகுதியில் 32% சத வீத வாக்கு பதிவு இடம்பெற்றுள்ளதாக துசாரி தென்னகோன் தெரிவித்துள்ளார். இதேவேளை, பிற்பகல் 2 மணி வரையான காலப்பகுதியில் நுவரெலியா மாவட்டத்தில் 53% சத வீத வாக்கு பதிவு இடம்பெற்றுள்ளது. க. கிருஷாந்தன்

ஏவுகணைத் தாக்குதலுக்குத் தயாராகும் இந்தியா!

ஏவுகணைத் தாக்குதலுக்குத் தயாராகும் இந்தியா!

ஏவுகணைத் தாக்குதலுக்குத் தயாராகும் இந்தியா!: பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் தொடர்புடையோருக்கு கற்பனைக்கும் எட்டாத அளவுக்கு தண்டனை வழங்கப் படும் என்று பிரதமர் நரேந்திர மோடி பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து மத்திய பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் கூறியதாவது: பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்படும் தீவிரவாத முகாம்கள் மீது ஏவுகணை தாக்குதல் நடத்த இந்திய ராணுவம் திட்டமிட்டு உள்ளது. கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் 18-ம் திகதி காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டம், உரியில் உள்ள ராணுவ முகாம் மீது பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதைத் தொடர்ந்து 2016-ம் ஆண்டு செப்டம்பர் 28-ம் திகதி இந்திய இந்திய கமாண்டோ படை வீரர்கள் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள் தரைவழியாக நுழைந்து தீவிரவாத முகாம்களை அழித்தனர். இதில் ஏராளமான தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி 14-ம்…

இன்று 100 மில்லிமீற்றர் மழை!

இன்று 100 மில்லிமீற்றர் மழை!

இன்று 100 மில்லிமீற்றர் மழை!: நாட்டின் பல பகுதிகளில் 100 மில்லிமீற்றர் வரையான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மேல், சப்ரகமுவ,வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடனான மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகிறது. நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் மழைக்கு வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை மத்திய, ஊவா மாகாணங்களிலும் மட்டக்களப்பு, அம்பாறை, பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களிலும் 75 மில்லிமீற்றருக்கும் அதிகரித்த மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மக்களுக்கு சேவையாற்ற எதிர்க்கட்சியாலும் முடியும்

மக்களுக்கு சேவையாற்ற எதிர்க்கட்சியாலும் முடியும் என்று இரத்தினபுரி பிரதேச சபைத் தேர்தலில் ஹப்புகஸ்தன்னை வட்டாரத்தில் பொதுஜன ஐக்கிய முன்னணியின் கதிரைச் சின்னத்தில் போட்டியிடும் கே. பாபு கண்ணன் தெரிவித்தார். பிரதேச மக்களுக்கு சேவையாற்ற ஆளும் கட்சியே உள்ளூராட்சி மன்றங்களிலும் ஆட்சிக்கு வர வேண்டும் என்ற கூற்றை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் பாபு கண்ணன் கூறினார். ஹப்புகஸ்தன்னையில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும்போது பாபு கண்ணன் இவ்வாறு கூறினார். இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் சார்பில் பொதுஜன ஐககிய முன்னணியில் ஹப்புகஸ்தன்னை வட்டாரத்தில் போட்டியிடும் பாபு கண்ணன் மேலும் உரையாற்றுகையில்: நான் போட்டியிடும் வட்டாரத்தில் ஆளும் கட்சிவெற்றி பெற்றால் மாத்திரமே மக்களுக்கு சேவையாற்ற முடியும் என்று சிலர் பொய்ப்பிரசாரம் செய்கிறார்கள். மக்களுக்குச் சேவையாற்ற பிரதேச சபைகளில் ஆளுங்கட்சியால் மாத்திரமல்ல. எதிர்க் கட்சியாலும் சிறந்த சேவையாற்ற முடியும். எல்லா உறுப்பினர்களுக்கும்…

முட்டையின் விலையில் மீண்டும் விழ்ச்சி

முட்டையின் விலையில் மீண்டும் விழ்ச்சி

முட்டையின் விலையில் மீண்டும் விழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது முட்டைக்கான கேள்வி குறைவடைந்துள்ளமையினால், முட்டை விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி 23 ரூபாய் முதல் 29 ரூபாய் வரை முட்டை விற்பனை செய்யப்படுவதாக வர்த்தகர்கள் கூறுகிறார்கள். புத்தாண்டு காலத்தில் 47 ரூபாய் முதல் 50 ரூபாய் வரையில் முட்டை விற்பனை செய்யப்பட்டது.

காஷ்மிர் தாக்குதலுக்கு உலகத் தலைவர்கள் கண்டனம்

காஷ்மிர் தாக்குதலுக்கு உலகத் தலைவர்கள் கண்டனம்

காஷ்மிர் தாக்குதலுக்கு உலகத் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 26 பேர் உயிரிழந்தனர். காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல் சம்பவம் நடந்ததை தொடர்ந்து பிரதமர் மோடி சவுதி பயணத்தை முடித்துக்கொண்டு அவசரமாக டெல்லி வந்தடைந்தார். பயங்கரவாதிகளின் இந்த கொடூர தாக்குதலுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப், துணை அதிபர் ஜெ.டி. வான்ஸ், ரஷிய அதிபர் புடின், இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி, இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் உள்ளிட்ட பல உலக தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளளனர்.

பிரியசாத் படுகொலை:மூவர் கைது

பிரியசாத் படுகொலை:மூவர் கைது

பிரியசாத் படுகொலை:மூவர் கைது: சமூக ஆர்வலரும் கொலன்னாவை நகரசபை வேட்பாளருமான டான் பிரியசாத்தின் கொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் மூவரைப் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். தகவல் வழங்கியதாக சந்தேகத்தின் பேரில் மூவர் கைதுசெய்யப்பட்டதாகப் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்திருக்கிறார. டான் பிரியசாத் தனது உறவினர் வீட்டில் நடைபாதையில் இருவருடன் விருந்து உண்டுகொண்டிருந்த போது, ​​அந்த இடத்திற்குள் நுழைந்த துப்பாக்கிதாரிகள் சுட்டுவிட்டுத் தப்பி ஓடிவிட்டதாகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.