ஈரான் அணு நிலைகள் மீது அமெரிக்கா குண்டு வீச்சு நடத்தியுள்ளது. ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தி அணு நிலைகளை அழித்து உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குண்டு வீச்சு மூன்று இடங்களில் நடத்தப்பட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். அமெரிக்க விமானங்கள் பாதுகாப்பாக திரும்பியதாகத் தெரிவித்துள்ள டிரம்ப் படையினரை பாராட்டியுள்ளார்.
Author: Malaikuruvi
கொழும்பில் சர்வதேச யோகா தின நிகழ்ச்சிகள்
சர்வதேச யோகா தினத்தையொட்டி இன்று (21) இலங்கையின் பல பகுதிகளிலிருந்து வந்த சுமார் 1,000 யோகா ஆர்வலர்கள் கொழும்பு சுதந்திரச் சதுக்கத்தில் ஒன்றுகூடி, ஒருங்கிணைந்த யோகா மற்றும் தியான நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இந்த நிகழ்வை இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் மற்றும் சுவாமி விவேகானந்தா கலாசார நிலையம் (SVCC), இலங்கை சுகாதார அமைச்சு, இலங்கை பொது நிருவாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு இணைந்து ஏற்பாடு செய்தது. இந்த ஆண்டுக்கான யோகா தின கருப்பொருள் “Yoga for One Earth, One Health” என்பதாகும். இது மனிதனுக்கும் இயற்கைக்கும் இடையேயான சமநிலையை வலியுறுத்துகிறது. விழாவின் ஒரு பகுதியாக, யோகா அறிவை எளிதில் மக்களுக்கு வழங்கும் நோக்கில், யோகா பென்ட்ரைவ் மற்றும் ஹத யோக பிரதீபிகா நூலின் சிங்கள மொழிபெயர்ப்பு வெளியிடப்பட்டது.இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தலைமையிலான…
ஈரானில் சக்திவாய்ந்த நில நடுக்கம்
இஸ்ரேலுக்கும் ஈரானுக்குமிடையில் போர் நடந்து வரும் தறுவாயில் ஈரானில் சக்திவாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. இந்த நில நடுக்கம் றிக்டர் அளவில் 5.1 ஆகப் பதிவாகியுள்ளது. ஈரானின் செமினான் மாகாணத்திற்கு 37 கிலோ மீற்றர் தென் மேற்காகப் பத்துக் கிலோ மீற்றர் ஆழத்தில் இந்த நில நடுக்கம் ஏற்பட்டுள்ளதாக ஊடகங்கள் கூறுகின்றன. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விபரங்கள் பற்றிய தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. எனினும், இந்த நிலநடுக்கம் அணுவாயுதப் பரிசோதனையால் ஏற்பட்டதாக இருக்கலாம் என்று மேற்குலக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஈரான் அணுவாயுத நிலையங்களை நிலத்திற்குக் கீழ் அமைந்திருந்தாலும் சோதனை செய்ததால் ஏற்பட்ட நில நடுக்கமா என்பது உறுதிப்படுத்தப்படவில்லை.
ஏர் இந்தியா முன்பதிவில் விழ்ச்சி
ஏர் இந்தியாவின் முன்பதிவுகள் 20 சதவீதம் வரை குறைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தியா அகமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியாவின் போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானம், புறப்பட்ட சில வினாடிகளில் மருத்துவ கல்லூரி வளாகத்தில் உள்ள கட்டிடம் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தில் பயணம் செய்த 242 பயணிகளில் ஒருவரைத் தவிர மற்ற அனைவரும் உயிரிழந்தனர். மொத்தமாக 270-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். சர்வதேச முன்பதிவுகள் ஏறக்குறைய 18 சதவீதம் முதல் 22 சதவீதம் வரையும், உள்ளூர் பயணத்திற்கான முன்பதிவுகள் 10 சதவீதம் முதல் 12 சதவீதம் வரையும் குறைந்துள்ளது. அதேபோல் உள்ளூர் பயணத்திற்கான டிக்கெட் கட்டணமும் 8 சதவீதம் முதல் 12 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு பயணத்திற்கான கட்டணம் 10 முதல் 15 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல் முன்பதிவுகள்…
இன்று சர்வதேச யோகா தினம்
இன்று சர்வதேச யோகா தினம் அனுட்டிக்கப்படுகிறது. வேதாத்திரி மகரிஷி அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க இந்தியா மேற்கொண்ட முயற்சியால் ஐக்கிய நாடுகள் சபை இந்த நாளை (ஜூன் 21) யோகா தினமாக அறிவித்தது. இந்த நாள் உலகம் முழுவதும் இன்று அனுட்டிப்படுகிறது. இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம், கொழும்பு அறிவுத்திருக்கோவில், யாழ்ப்பாணம் அறிவுத் திருக்கோவில் ஆகியன இந்த நாளுக்கான நிகழ்ச்சிகளை நடத்துகின்றன. கொழும்பு அறிவித்திருக்கோவிலில் காலை 8.30 இற்கு யோகா தின நிகழ்ச்சிகள் ஆரம்பமாகின்றன. சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு ஆயுள்வேத மருத்துவமனைகளில் சர்வதேச யோகா தின நிகழ்ச்சிகள் நேற்று முன்தினம் காலை நடைபெற்றன. நாடு முழுவதிலுமுள்ள (ஒன்பது மாகாணங்களிலும்) 113 ஆயுள்வேத மருத்துவமனைகளில் நிகழ்ச்சிகள் காலை 8.30 முதல் 9.30 வரை நடைபெற்றன. சுகாதார அமைச்சின் ஆயுள்வேத மருத்துவப் பிரிவு சுவாமி விவேகானந்தர் கலாசார நிலையம், இந்திய உயர்ஸ்தானிகராலயம் ஆகியன…
யாழ் மாவட்ட நிரந்தர அரசாங்க அதிபராக பிரதீபன் நியமனம்
யாழ்ப்பாண மாவட்டத்தின் நிரந்தர அரசாங்க அதிபராக மருதலிங்கம் பிரதீபன் அமைச்சரவை அனுமதியின் பிரகாரம் நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கான நியமனக் கடிதம் இன்றைய தினம் (20) அமைச்சரவை செயலாளர் W. M. D. J. பெர்னாண்டோவினால் அமைச்சரவை அலுவலகத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது. ம.பிரதீபன் 2024 மார்ச் 09 ம் திகதி முதல் யாழ்ப்பாண மாவட்டத்தின் பதில் அரசாங்க அதிபராக கடமையாற்றி வந்தமை குறிப்பிடத்தக்கது.
வெளிநாட்டு நேரடி முதலீடு அதிகரிப்பு
2024 ஆம் வருடத்தின் முதல் காலாண்டுடன் ஒப்பிடுகையில், 2025 ஆம் வருடத்தின் முதல் காலாண்டில் வெளிநாட்டு நேரடி முதலீட்டை 96 மில்லியன் டொலர்களால் அதிகரிக்க இலங்கை முதலீட்டுச் சபைக்கு முடிந்துள்ளது. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று (20) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற இலங்கை முதலீட்டு சபையின் முன்னேற்ற மீளாய்வின் போதே இது பற்றி தெரிவிக்கப்பட்டது. மேலும், 2024 ஆம் வருடத்தின் முதல் காலாண்டுடன் ஒப்பிடுகையில், 2025 ஆம் வருடத்தின் முதல் காலாண்டில், உள்நாட்டு முதலீடுகள் 21 மில்லியன் டொலர்களாலும், ஏற்றுமதி வருமானம் 176 மில்லியன் டொலர்களாலும் அதிகரித்துள்ளது. 2025 ஆம் ஆண்டின் இது வரை, இலங்கைக்கு 4669 மில்லியன் டொலர் பெறுமதியான வெளிநாட்டு முதலீடுகளுக்கான யோசனைகளை பெற்றுக்கொள்ள முடிந்துள்ளதாகவும் முதலீட்டு சபையின் அதிகாரிகள் இங்கு சுட்டிக்காட்டினர். இலங்கைக்கு முதலீடுகளை ஈர்ப்பதில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், சவால்கள்…
முதலாவது இன்னிங்ஸை நிறைவுசெய்தது இலங்கை அணி
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளிக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் தற்சமயம் காலி மைதானத்தில் இடம்பெற்று வருகிறது. போட்டியில் தமது முதலாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி சற்றுமுன்னர் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 485 ஓட்டங்களை பெற்றுள்ளது. துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்பில் Pathum Nissanka அதிகபடியாக 187 ஓட்டங்களையும், Kamindu Mendis 87 ஓட்டங்களையும், Dinesh Chandimal 54 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். பந்து வீச்சில் பங்காளாதேஷ் அணி சார்பில் Nayeem Hasan 05 விக்கெட்டுக்களையும், Hasan Mahmud 03 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர். முன்னதாக பங்காளாதேஷ் அணி தமது முதலாவது இன்னிங்ஸில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 495 ஓட்டங்களை பெற்றது. இதன்படி 10 ஓட்டங்கள் முன்னிலையில் பங்காளாதேஷ் அணி இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பாடவுள்ளது.
கெஹலியவின் மகளுக்கு நீதிமன்றம் பிணை
கெஹலியவின் மகளுக்கு நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகள் சமித்ரி ஜெயனிகா ரம்புக்வெல்ல, பிணை நிபந்தனைகளை பூர்த்தி செய்த பின்னர் இன்று (20) விடுவிக்கப்பட்டார். நிதிமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் விசாரணை தொடர்பில் வாக்குமூலம் அளிப்பதற்காக கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையான போது கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார். எனினும் நேற்றைய தினம் பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்ட போது பிணை நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யாமையின் காரணமாக விளக்கமறியலில் வைக்கப்பட்ட நிலையில் இன்று பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கொடூரமான ஆக்கிரமிப்புச் செயல் – வடகொரியா
ஈரான் மீதான இஸ்ரேலின் சமீபத்திய வான்வழித் தாக்குதலை “கொடூரமான ஆக்கிரமிப்புச் செயல்” என்று வட கொரியா கண்டித்துள்ளது. இது மேற்கு ஆசியாவில் மிகப் பெரிய போரை ஏற்படுத்தும் அபாயம் இருப்பதாகவும் வடகொரியா எச்சரித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. அமெரிக்கா மற்றும் மேற்கு நாடுகளின் ஆதரவுடன் செயல்படும் இஸ்ரேல், மேற்கு ஆசியாவில் அமைதியை சீர்குலைக்கும் ‘புற்றுநோய் போன்ற நாடு’ என்று வடகொரிய அரசு நடத்தும் செய்தி நிறுவனமான கேசிஎன்ஏ (KCNA) வெளியிட்ட அறிக்கையை மேற்கோள் காட்டியுள்ள யோன்ஹாப் நாளிதழின் செய்தியில் வெளியிட்டுள்ளது. ‘ஈரானுக்கு எதிரான இஸ்ரேலின் ராணுவத் தாக்குதல் குறித்து கடுமையான கவலைகளை எழுப்பினார். மேற்கு ஆசியாவில் முழுமையான போரின் அபாயத்தை இஸ்ரேல் எழுப்பியதற்காக கண்டனம் தெரிவித்தார். ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதல் ஒரு நாட்டின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை மீறுவதாகவும், இது “மனிதகுலத்துக்கு எதிரான மன்னிக்க…