மக்களின் காணிகளை நாம் விடுவிப்போம்!

மக்களின் காணிகளை நாம் விடுவிப்போம்!

மக்களின் காணிகளை நாம் விடுவிப்போம்!: ” பாதுகாப்பு காரணங்களுக்காக மக்களின் காணிகள் கையகப்படுத்தப்பட்டன. தற்போது போர் இல்லை. எனவே, பாதுகாப்பு என்ற போர்வையில் மக்களின் காணிகளை அரசாங்கம் கையகப்படுத்தி வைத்திருக்க முடியாது. விடுவிக்ககூடிய அனைத்து காணிகளையும் நாம் விடுவிப்போம்.” – என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். ‘மீண்டும் போர் மூளும் என்ற எதிர்பார்ப்பில் நாம் வேலை செய்யவில்லை. போர் ஏற்படுவதை தடுப்பதற்காகவே நாம் செயற்படுவோம். அதுதான் அரசாங்கத்துக்குரிய பொறுப்பாகும். யாழ்ப்பாணத்தை மீண்டும் இயல்பு நிலைக்கு நாம் கொண்டுவருவோம். காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினை உள்ளது. உங்களுடைய பிள்ளைகளை அரசாங்கத்திடம் ஒப்படைத்திருந்தால், பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்திருந்தால், இராணுவ முகாமில் ஒப்படைத்திருந்தால், அந்த பிள்ளைக்கு என்ன நடந்தது என்பதை தேடிபார்க்க வேண்டும். அது பொறுப்புள்ள அரசாங்கத்தின்…

வடக்கில் மக்களின் சுதந்திரம் நிலைநாட்டப்படும்

பாப்பரசர் மறைவுக்கு ஜனாதிபதி இரங்கல்:

வடக்கில் மக்களின் சுதந்திரம் நிலைநாட்டப்படும் என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இன்று யாழ்ப்பாணத்தில் தெரிவித்தார். தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் இராணுவத்தினரின் வசம் உள்ள நிலங்கள் விடுவிக்கப்படும் எனவும் ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்க யாழ்ப்பாணத்தில் உறுதியளித்துள்ளார். யாழ்ப்பாணம் பாஷையூரில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் ஜனாதிபதி உரையாற்றினார். வடபகுதி தமிழர்கள் உண்மையான சுதந்திரத்தை அனுபவிப்பதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். பல வருடங்களாக மூடப்பட்டிருந்த வீதி சமீபத்தில் திறக்கப்பட்டுள்ளது, தனியார் நிலங்கள் கட்டம் கட்டம் விடுவிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். வடக்கில் மக்களின் சுதந்திரம் நிலைநாட்டப்படும் என்பதை உறுதிசெய்வதற்கான நடவடிக்கைகளைப் பாதுகாப்புத் தரப்பினருடன் பேசி மேற்கொள்வதாகத் தெரிவித்த ஜனாதிபதி, வட மாகாத்திற்கே உரிய கைத்தொழிற்துறைகளை மேம்படுத்த நடவடிக்கை எடுப்பதாகவும் கூறினார். வடபகுதி மீனவர்கள் தமது கடல் பிராந்தியத்தில் சுதந்திரமாக மீன்பிடிப்பதற்கான உரிமை…

பலாலி-அச்சுவேலி வீதி திறந்துவைப்பு

பலாலி-அச்சுவேலி விதி திறந்துவைப்பு

பலாலி-அச்சுவேலி வீதி திறந்துவைப்பு: யாழ்ப்பாணம் பலாலி – அச்சுவேலி பிரதான வீதி ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் பணிப்புரையின் கீழ் சுமார் 34 வருடங்களுக்கு பின்னர் இன்று (01) திறந்து வைக்கப்பட்டது. முப்பது வருடகால யுத்தம் காரணமாக இந்த பிரதான வீதி மூடப்பட்டது. யுத்தம் நிறைவடைந்து 15 வருடங்களுக்கு மேலாகியும் இதுவரை இந்த வீதி பொது மக்களின் பாவனைக்காக திறக்கப்படவில்லை. பலாலி-அச்சுவேலி வீதி திறந்துவைப்பு இன்று வைபவரீதியாக நடைபெபற்றது. இந்த வீதியை திறப்பது தொடர்பில் வடமாகாண மக்கள் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வந்தனர். கடந்த ஒக்டோபர் 22 ஆம் திகதி ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் ஆளுநர்களுக்குமிடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகனும் இது தொடர்பில் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த வீதியை திறப்பது தொடர்பிலுள்ள பாதுகாப்பு நிலைமைகள் குறித்து ஆராய்ந்து தேவையான நடவடிக்கை எடுக்குமாறு…

ஒற்றையாட்சியை நிராகரிக்கும் ஒரே அணி

ஒற்றறையாட்சியை நிராகரிக்கும் ஒரே கட்சி

ஒற்றையாட்சியை நிராகரிக்கும் ஒரே அணி: தமிழ் தேசிய மக்கள் முன்னணி மாத்திரமே ஒற்றையாட்சியை நிராகரிக்கும் ஒரே கட்சி என்று அக்கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். முன்னணியின் வன்னி மாவட்ட வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் ஞாயிற்றுக்கிழமை (27) மாலை 4.30 அளவில் மன்னார் நகரசபை மண்டபத்தில் இடம்பெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த திரு. கஜேந்திரகுமார் பொன்னம்பலம், ஒற்றையாட்சியை நிராகரிக்கும் ஒரே அணி தமது கட்சி மாத்திரமே என்றும் இதுபற்றி வேறு எந்த ஒரு கட்சியும் உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கவில்லை என்றும் குறிப்பிட்டார். நாட்டில் இடம்பெற்ற யுத்தம் முடிவடைந்து 15 வருடங்கள் கடக்கின்றன. இந்தப் 15 வருடங்களில் எமது மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். வடக்கு கிழக்கில் பாதிக்கப்பட்ட மக்கள் நாளாந்தம் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இவர்களின் ஒரு போராட்டத்திலாவது ஜே.வி.பி கலந்து கொண்டுள்ளதா?.வடக்கு கிழக்கில் காணாமல்…

நாளை முதல் மீண்டும் யாழ்தேவி

ரயில்வே தொழினுட்ப வல்லுநர்கள் வேலைநிறுத்தம்

நாளை முதல் மீண்டும் யாழ்தேவி வடக்கு ரயில் மார்க்கத்தின் சேவையை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. றாளை திங்கட்கிழமை யாழ்தேவி ரயில் சேவையில் ஈடுபடுத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். வடக்கு ரயில் மார்க்கத்தின் திருத்தப் பணிகள் காரணமாக தற்போது மஹவ வரை மட்டுமே ரயில் சேவையில் ஈடுபடுகிறது. நாளை முதல் மீண்டும் யாழ்தேவி யாழ்ப்பாணத்திற்கான பயணத்தை ஆரம்பிப்பதையிட்டுப் பலரும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். வாகன வரிஅனுமதிப்பத்திரம் இலகுவாகப் பெறலாம்