முட்டையின் விலையில் மீண்டும் விழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது முட்டைக்கான கேள்வி குறைவடைந்துள்ளமையினால், முட்டை விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி 23 ரூபாய் முதல் 29 ரூபாய் வரை முட்டை விற்பனை செய்யப்படுவதாக வர்த்தகர்கள் கூறுகிறார்கள். புத்தாண்டு காலத்தில் 47 ரூபாய் முதல் 50 ரூபாய் வரையில் முட்டை விற்பனை செய்யப்பட்டது.
Category: வணிகம்
காஸ் தட்டுப்பாடு ஓரிருநாளில் நீங்கும்
காஸ் தட்டுப்பாடு ஓரிருநாளில் நீங்கும்: விநியோகத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சினை காரணமாக லாஃப்ஸ் எரிவாயு நிறுவனத்தின் பல பகுதிகளிலும் தற்போது தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக லாஃப்ஸ் எரிவாயு நிறுவனத்தின் தலைவர் டபிள்யூ.கே.எச்.வேகபிட்டிய தெரிவித்துள்ளார். மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் நிலைமை காரணமாக லாஃப்ஸ் நிறுவனத்தினால் இறக்குமதி செய்யப்பட்ட எரிவாயு கையிருப்பு நாட்டுக்கு வருவதில் ஏற்பட்ட தாமதம் மற்றும் லாஃப்ஸ் நிறுவனத்தின் பிரதான முனையம் வெள்ளத்தில் மூழ்கியமை இதற்கு காரணமாக அமைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும், லாஃப்ஸ் நிறுவனத்தினால் இறக்குமதி செய்யப்பட்ட எரிவாயு கையிருப்புடன் வந்த சரக்குக் கப்பல் நேற்று (28) ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. எனவே, காஸ் தட்டுப்பாடு ஓரிருநாளில் நீங்கும் என்று திரு. வேகப்பிட்டிய தெரிவித்துள்ளார். இதன்படி, எதிர்வரும் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குள் நாடளாவிய ரீதியில் எரிவாயு கையிருப்பு விநியோகிக்கப்படும் என லாஃப்ஸ் எரிவாயு நிறுவனத்தின்…
நியாயமான விலையில் அரிசி விற்பனை
நியாயமான விலையில் அரிசி விற்பனை செய்ய அனைத்துத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார். அத்துடன் அரிசிக்கான நிர்ணய விலையில் எவ்வித மாற்றத்தையும் மேற்கொள்ள எதிர்பார்க்கவில்லை என ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். ஒழுங்கமைக்கப்பட்ட விவசாயத் திட்டத்தை உருவாக்கி விவசாயிகளுக்கு அதிக நன்மைகளைப் பெறுவதற்கான நீண்ட கால வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். அரிசி வியாபாரிகள், விவசாயத் திணைக்கள அதிகாரிகளுடன் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின்போது ஜனாதிபதி இதனை தெரிவித்தார். நியாயமான விலையில் அரிசி விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டதன் பின்னர் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாகவும் அதன் பின்னர் அரிசி விலையை மாற்றுவது நியாயமல்ல எனவும் அரிசி வியாபாரிகளிடம் ஜனாதிபதி குறிப்பிட்டார். விவசாயிகளிடம் இருந்து அரிசியை நியாயமான விலையில் பெற்றுக்கொள்வதற்கும் நுகர்வோருக்கு நியாயமான விலையில் அரிசியை வழங்குவதற்கும்…
பொருளாதாரத்தை என்னால்தான் மீட்க முடியும்!
பொருளாதாரத்தை என்னால்தான் மீட்க முடியும்! என்றும் வேறு எவருக்கும் அது சாத்தியமில்லை என்றும் ஐக்கிய மக்கள் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். பொருளாதாரத்தை என்னால்தான் மீட்க முடியும்! என்பதோடு மக்களுக்கு நிவாரணங்களை வழங்கி பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்யும் திட்டத்தை ஐக்கிய மக்கள் சக்தி கொண்டுள்ளது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். அதற்கான தீர்மானங்களை எடுக்கக்கூடிய குழுவொன்று தமது கட்சிக்குள் இருப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுடன் பயணிக்க எமக்கு எவ்வித பிரச்சினைகளும் இல்லை. எம்மிடம் கீழ்த்தரமான அரசியல் இல்லை என்றும் தெரிவித்துள்ளார். தேங்காய் விலை நாளுக்குநாள் அதிகரிப்பு தேங்காய் விலை நாளுக்குநாள் அதிகரிப்பு
இந்திய கடற்படைக் கப்பல் இலங்கைக்கு
இந்திய கடற்படைக் கப்பல் இலங்கைக்கு: இந்திய கடற்படைக்குச் சொந்தமான “INS Kalpeni” என்ற கப்பல் நேற்று (19) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. கடலோரக் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளின் முதன்மையாக விளங்கும் இந்திய கடற்படைக் கப்பல் இலங்கைக்கு வருகை தந்துள்ளது. அதன் சேவை 2010 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 14 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. இந்த கப்பலானது பல்வேறு தொழில்நுட்ப கருவிகளைக் நாட்டுக்கு கொண்டுவந்துள்ளதுடன், இந்த பொருட்கள் இலங்கை கடற்படையிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
வெடிகுண்டு மிரட்டலால் பயணிகள் பீதி!
வெடிகுண்டு மிரட்டலால் பயணிகள் பீதி! : இந்திய விமானங்களுக்குத் தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படுவதால் பயணிகள் மத்தியில் விமானப் பயணம் செய்வதில் பீதி ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. நேற்று மாலை வரை சுமார் இருபது விமானங்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. விஸ்டாரா விமான நிறுவனத்துக்குச் சொந்தமான ஒரு விமானம் வெடிகுண்டு மிரட்டலால் பயணிகள் பீதி அடைவதற்கு முன்னதாகக் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. இந்த விமானம் தரையிறக்கப்படுவதற்குப் பத்து நிமிடங்களுக்கு முன்னர் விமானிக்கு அநாமதேய தொலைபேசி அழைப்பு மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனால், சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பிற்கும் அறிவிக்கப்பட்டுப் பாதுகாப்பாக விமானம் தரையிறக்கப்பட்டது. பயணிகள் உடனடியாக வெளியேற்றப்பட்டுக் கடும் சோதனை நடத்தப்பட்டது. குண்டு செயலிழக்கும் பிரிவினரும் விரைந்து வந்து தேடுதல் நடத்தியபோதிலும் குண்டு எதுவும் அகப்படவில்லை. அந்த விமானத்தில் 96 பயணிகளும் விமானச் சிப்பந்திகளும்…
வாகன வரிஅனுமதிப்பத்திரம் இலகுவாகப் பெறலாம்
வாகன வருமானவரி அனுமதிப்பத்திரம் இலகுவாகப்பெற வழிசெய்யுமாறு அமைச்சர் விஜித்த ஹேரத் அதிகாரிகளுக்குப் பணிப்பு விடுத்துள்ளார். வாகன வருமானவரி அனுமதிப்பத்திரங்களைப் பெற்றுக்கொள்வதில் மேல் மாகாணத்தை ஏனைய மாகாணங்களுடன் இணைக்குமாறு அமைச்சர் விஜித ஹேரத் உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனைத் தெரிவித்துள்ளது. வாகன வரிஅனுமதிப்பத்திரம் இலகுவாகப் பெற்றுக்கொள்வதில் மக்கள் எதிர்நோக்கும் பிரதான பிரச்சினை மாகாணங்களுக்கிடையிலான தொடர்பின்மை எனவும், அது நடைமுறைப்படுத்தப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருந்த போதும் மிகவும் அத்தியாவசியமான மாகாணமான மேல் மாகாணத்திற்கு இது இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை எனவும் குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. வாகன வரிஅனுமதிப்பத்திரம் பெறுவது குறித்து மக்களிடம் இருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக அமைச்சு தெரிவித்துள்ளது. , மேல் மாகாணத்தை ஏனைய மாகாணங்களுடன் இணைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளுக்கு உரிய திணைக்களங்களுக்கு…
தேங்காய் விலை நாளுக்குநாள் அதிகரிப்பு
தேங்காய் விலை நாளுக்குநாள் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. சந்தையில் தற்போது தேங்காய்க்குப் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவால் மக்களுடன் தாமும் பாதிக்கப்படுவதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். சந்தையில் அதன் விலை உயர்ந்துள்ளதுடன், சில பகுதிகளில் 150 ரூபாய்க்கும் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. விலை குறைவதற்கான எந்த அறிகுறியும் தற்போது காணப்படவில்லை என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். கடவுச்சீட்டு வழங்கும் பணிகள் வழமைக்கு
ஐந்துமில்லியன் டொலர் இலஞ்சம் தந்தார்கள்
தான் பிரதமராக இருந்தபோது தனக்கு ஐந்துமில்லியன் டொலர் இலஞ்சம் தந்தார்கள் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். தனது அரசாங்கத்திலிருந்த கனிஷ்ட அமைச்சர் ஒருவரின் கணவர் சிங்கப்பூர் வர்த்தகர் ஒருவருடன் ஐந்து மில்லியன் டொலர் இலஞ்சம் பாராளுமன்றத்திற்குக் கொண்டு வந்து தனது மேசையின் மீது வைத்ததாகவும் தான் அதனை மறுத்துவிட்டதாகவும் சந்திரிகா தெரிவித்துள்ளார். உடனடியாகப் பணத்தை எடுத்துக்கொண்டு போகுமாறும் “உம்மை நான் கைது செய்திருக்க வேண்டும் “என்றும் எச்சரித்து அனுப்பியதாகவும் முன்னாள் ஜனாதிபதி கூறியுள்ளார். கொழும்பில் நடைபெற்ற பட்டயக்கணக்காளர்களின் 45ஆவது தேசிய மாநாட்டில் கலந்துகொண்டு சந்திரிகா உரையாற்றினார். ஒரு செயற்றிட்டம் ஒன்றைப் பெறுவதற்காகத் தனக்கு ஐந்து மில்லியன் டொலர் இலஞ்சம் கொடுக்க முயற்சிக்கப்பட்டதாகக் கூறிய சந்திரிகா, முடிந்தவரை கொள்ளையடியுங்கள், ஆனால், சிக்கிக்கொள்ள வேண்டாம் என்று தனது எம்பிமாருக்கு அறிவுரை கூறிய ஒரு ஜனாதிபதியும் நமது…
கடவுச்சீட்டு வழங்கும் பணிகள் வழமைக்கு
கடவுச்சீட்டு வழங்கும் பணிகள் எதிர்வரும் திங்கட்கிழமை (21) முதல் வழமை போன்று ஆரம்பிக்கப்படும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (15) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் இதனைத் தெரிவித்தார். கடந்த 11ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இது தொடர்பில் கலந்துரையாடி முடிவு எடுக்கப்பட்டதாக அமைச்சர் தெரிவித்தார். விமான சாகசத்தைப் பார்க்க வந்தவர் உயிரிழப்பு