அமெரிக்க பொருள்களுக்கு கனடா வரிவிதிப்பு!

அமெரிக்க பொருள்களுக்குக் கனடா வரிவிதிப்பு

அமெரிக்க பொருள்களுக்கு கனடா வரிவிதிப்பு: கனடாவுக்கு அமெரிக்கா வரி விதிப்பதாக இருந்தால், அமெரிக்க பொருள்களுக்கு 25% வரி விதிக்கப்படும் என்று அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார். அமெரிக்காவின் வர்த்தக நடவடிக்கைக்கு கனடா பதிலடி கொடுக்கும் வகையில் 155 பில்லியன் கனேடிய டொலர் மதிப்பிலான அமெரிக்க இறக்குமதி பொருள்களுக்கு 25 சதவிகிதம் வரி விதிக்கப்படும் என்று அறிவித்துள்ளார். முதல் சுற்றாக 30 பில்லியன் கனேடிய டொலர் மதிப்புள்ள அமெரிக்க பொருள்களுக்கு வரி விதிப்பானது செவ்வாய்கிழமை முதல் அமுல்படுத்தப்படும். அதைத் தொடர்ந்து மூன்று வாரங்களில் 125 பில்லியன் கனேடிய டொலர் மதிப்புள்ள பொருள்கள் மீது இந்த புதிய வரி விதிப்பு அமுல்படுத்தப்படும் என்று தெரிவித்தார். “நிச்சையமாக நாங்கள் அதிகரிக்க நினைக்கவில்லை. ஆனால் நாங்கள் கனடாவுக்காகவும் கனடா மக்களின் வேலைவாய்ப்புக்காகவும் துணை நிற்கிறோம்” என்று…

பாராளுமன்றத் தேர்தலில் ஜேவிபி பெருவெற்றி!

பாராளுமன்றத் தேர்தலில் ஜேவிபி பெருவெற்றி!

பாராளுமன்றத் தேர்தலில் ஜேவிபி பெருவெற்றி!: நடந்து முடிந்த பாராளுமன்ற பொதுத் தேர்தலில் மக்கள் விடுதலை முன்னணி (ஜேவிபி) தலைமையிலான தேசிய மக்கள் சக்தி 159 உறுப்பினர்களைப் பெற்று பெருவெற்றியடைந்துள்ளது. மக்களின் 68 இலட்சத்து 63186 வாக்குகள் மூலம் 141 உறுப்பினர்களையும் தேசியப் பட்டியல் மூலம் 18 உறுப்பினர்களையும் பெற்றுக்கொண்டுள்ளது. இதில் 12 பேர் பெண்களாவர். அதில் தமிழர்கள் மூவரும் அடங்குகின்றனர். சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி 19 இலட்சத்து 68716 வாக்குகளைப் பெற்று 35 உறுப்பினர்களையும் தேசியப் பட்டியல் ஊடாக ஐந்து உறுப்பினர்களையும் பெற்றுக்கொண்டுள்ளது. ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான புதிய ஜனநாயக முன்னணி, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகியன தலா மூன்று உறுப்பினர்களைப் பெற்றுக்கொண்டுள்ளன. இலங்கை தமிழரசுக் கட்சி எட்டு உறுப்பினர்களைப் பெற்றுக்கொண்டுள்ளது. பாராளுமன்றத் தேர்தலில் ஜேவிபி பெருவெற்றி அடைந்திருக்கும் சூழலில் முன்னாள் அமைச்சர்கள்,…

வடக்கில் மக்களின் சுதந்திரம் நிலைநாட்டப்படும்

பாப்பரசர் மறைவுக்கு ஜனாதிபதி இரங்கல்:

வடக்கில் மக்களின் சுதந்திரம் நிலைநாட்டப்படும் என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இன்று யாழ்ப்பாணத்தில் தெரிவித்தார். தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் இராணுவத்தினரின் வசம் உள்ள நிலங்கள் விடுவிக்கப்படும் எனவும் ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்க யாழ்ப்பாணத்தில் உறுதியளித்துள்ளார். யாழ்ப்பாணம் பாஷையூரில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் ஜனாதிபதி உரையாற்றினார். வடபகுதி தமிழர்கள் உண்மையான சுதந்திரத்தை அனுபவிப்பதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். பல வருடங்களாக மூடப்பட்டிருந்த வீதி சமீபத்தில் திறக்கப்பட்டுள்ளது, தனியார் நிலங்கள் கட்டம் கட்டம் விடுவிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். வடக்கில் மக்களின் சுதந்திரம் நிலைநாட்டப்படும் என்பதை உறுதிசெய்வதற்கான நடவடிக்கைகளைப் பாதுகாப்புத் தரப்பினருடன் பேசி மேற்கொள்வதாகத் தெரிவித்த ஜனாதிபதி, வட மாகாத்திற்கே உரிய கைத்தொழிற்துறைகளை மேம்படுத்த நடவடிக்கை எடுப்பதாகவும் கூறினார். வடபகுதி மீனவர்கள் தமது கடல் பிராந்தியத்தில் சுதந்திரமாக மீன்பிடிப்பதற்கான உரிமை…

இந்திய நீர்மூழ்கிக் கப்பல் இலங்கைக்கு

இந்திய நீர்மூழ்கிக் கப்பல் இலங்கைக்கு

இந்திய நீர்மூழ்கிக் கப்பல் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. இன்று (10) காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த ‘INS Vela’ நீர்மூழ்கிக் கப்பலை இலங்கை கடற்படையினர் வரவேற்றதாக கடற்படை தெரிவித்துள்ளது. இந்தியக் கடற்படையின் 67.5 மீட்டர் நீளம் கொண்ட இந்த நீர்மூழ்கிக் கப்பலில் 53 பணியாளர்கள் உள்ளனர். ‘INS Vela’ என்ற நீர்மூழ்கிக் கப்பல் வரும் 13ஆம் தேதி தீவில் இருந்து புறப்பட உள்ளது. இந்திய நீர்மூழ்கிக் கப்பல் இலங்கைக்கு வந்திருக்கும் காலகட்டத்தில், இரு நாட்டு கடற்படைகளுக்கு இடையேயான நட்புறவை மேம்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பல நிகழ்ச்சிகளில் அதன் ஊழியர்கள் பங்கேற்க உள்ளனர். இந்திய கடற்படையினர் குழு நாட்டின் முக்கிய இடங்களை பார்வையிடுவதற்காக பல பகுதிகளுக்குச் செல்லவும் திட்டமிட்டுள்ளதாக கடற்படை மேலும் தெரிவித்துள்ளது. பலாலி-அச்சுவேலி வீதி திறந்துவைப்பு

மகிந்தவின் சிறப்புரிமை எதுவும் நீக்கப்படவில்லை

மகிந்தவின் சிறப்புரிமைகள் எதுவும் நீக்கப்படவில்லை

மகிந்தவின் சிறப்புரிமை எதுவும் நீக்கப்படவில்லை: முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் பொய்யானவை என்று ஜனாதிபதி அலுவலகம் அறிவித்துள்ளது. அந்தச் செய்திகள் அனைத்தும் பொய்யானவை என்றும் 1986 ஆம் ஆண்டின் 4 ஆம் இலக்க ஜனாதிபதிகளின் உரிமைச் சட்டத்தின் பிரகாரம் ஜனாதிபதி அலுவலகம் பின்வரும் சலுகைகளை அவருக்கு வழங்கியுள்ளதாகவும் ஜனாதிபதி அலுவலகம் தெரிவிக்கின்றது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஓய்வு பெற்ற ஜனாதிபதி ஒருவரின் ஓய்வூதியத்துக்கும், கொழும்பு 07, விஜேராம மாவத்தையில் உள்ள உத்தியோகபூர்வ இல்லத்திற்கும் செயலக கொடுப்பனவுக்கும் உரித்துடையவர். அத்துடன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு 03 வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன. Mercedes Benz -600 maybatch (B/P) car 2008, Toyota Land Cruiser – 2017, Mercedes Benz – G63 AMG 4*4 2850 jeep 2013…

வடக்கு காசாவில் 93பேர் படுகொலை!

வடக்கு காசாவில் 93பேர் படுகொலை!

வடக்கு காசாவில் 93பேர் படுகொலை!, இஸ்ரேல் படையினர் வடக்கு காசா பகுதியில் உள்ள பெய்ட் லஹியா நகரில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 93 பேர் கொல்லப்பட்டனர். உயிரிழந்தவர்களில் குழந்தைகளும் உள்ளடங்குவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஐந்து மாடி குடியிருப்பு கட்டடத்தை குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கட்டட இடிபாடுகளில் பல உடல்கள் சிக்கியுள்ளதாக உதவிக் குழுக்கள் தெரிவிக்கின்றன. சுகாதார திணைக்கள ஊழியர்கள் மருந்துப் பற்றாக்குறையினால் நோயாளர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன. ஈரான் மீதான தாக்குதலுக்குக் கண்டனம்

பயங்கரவாதத் தாக்குதல் குறித்து விசாரணை

பயங்கரவாதத் தாக்குதல் குறித்து விசாரணை

பயங்கரவாதத் தாக்குதல் குறித்து விசாரணை: வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளை இலக்கு வைத்துப் பயங்கரவாதத் தாக்குதல் நட்தப்படலாம் என்று கிடைத்திருக்கும் தகவல்கள் குறித்து விசாரணை நடத்தி வருவதாகப் பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் குறித்துச் சீராய்வு மனு ஒன்றைச் சமர்ப்பித்து கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேனவிடம் பொலிஸார் நேற்று தமது அறிக்கையினை முன்வைத்தனர். இந்தச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மூவரும் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக பொலிஸார் நீதிமன்றில் அறிவித்துள்ளனர். அந்த விசாரணைகளின் போது இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்திற்கிடமான ஏனைய நபர்கள் தொடர்பிலான தகவல்கள் தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான மேலதிக உண்மைகளை வெளிக்கொணரும் வகையில் சிறையில் உள்ள பல சந்தேக நபர்களை விசாரணை செய்வதற்கும் அவர்களின் வாக்குமூலங்களைப் பதிவு செய்வதற்கும் அனுமதிக்குமாறும் பொலிஸார் நீதிமன்றில்…

அடுத்தாண்டு மாகாண சபைத் தேர்தல்

அடுத்தாண்டு மாகாண சபைத் தேர்தல்

அடுத்தாண்டு மாகாண சபைத் தேர்தல்: நடைபெறவுள்ள பாராளுமன்றப் பொதுத் தேர்தலைத் தொடர்ந்து மாகாண சபைத் தேர்தலையும் அதனைத் தொடர்ந்து உள்ளூராட்சிமன்றத் தேர்தலையும் நடத்த நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். பெரும்பாலும் இந்தத் தேர்தல்கள் அடுத்தாண்டு நடைபெறும் என்று ஜனாதிபதி தெரிவித்தார். இரத்தினபுரியில் இன்று நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய ஜனாதிபதி, மாகாண சபைத் தேர்தலையும் உள்ளூராட்சி மன்றத்தேர்தலையும் நடத்தி, மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாகக் குறிப்பிட்டார். மாகாண சபைத் தேர்தலும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலும் இடைநிறுத்தப்பட்டு நீண்டகாலமாகியும் அதனை நடத்துவதற்கு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்று அரசியல் கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன. மலைக்குருவி

எல்பிட்டி பிரதேசசபை ஜேவிபி வசமானது!

எல்பிட்டி பிரதேச சபை ஜேவிபி வசமானது

எல்பிட்டி பிரதேசசபை ஜேவிபி வசமானது!: காலி மாவட்டத்தின் எல்பிட்டி பிரதேச சபைத் தேர்தலில் ஜேவிபி தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அமோக வெற்றியீட்டியுள்ளது. நேற்று (26) நடைபெற்ற எல்பிட்டி பிரதேச சபைத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ முடிவுகள் நேற்று இரவு வெளியாகின. அதன்படி, எல்பிட்டி பிரதேசசபை ஜேவிபி வசமானது! விபரம் வருமாறு:- தேசிய மக்கள் சக்தி – 17,295 வாக்குகள் – உறுப்பினர்கள் 15 ஐக்கிய மக்கள் சக்தி 7,924 வாக்குகள் – உறுப்பினர்கள் 06 ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 3,957 வாக்குகள் – உறுப்பினர்கள் 03 பொதுஜன எக்சத் பெரமுன – 2,612 வாக்குகள் – உறுப்பினர்கள் 02 சுயேச்சைக்குழு 1 – 2,568 வாக்குகள் – உறுப்பினர்கள் 02 பொதுஜன ஐக்கிய சுதந்திர முன்னணி – 1,350 வாக்குகள் – உறுப்பினர்கள் 01 தேசிய…

ஈரான் மீதான தாக்குதலுக்குக் கண்டனம்

ஈரான் மீதான தாக்குதலுக்குக் கண்டனம்

ஈரான் மீதான தாக்குதலுக்குக் கண்டனம்: ஈரானின் இராணுவத் தளங்களை இலக்குவைத்து இஸ்ரேல் இன்று நடத்திய விமானத் தாக்குதலுக்குப் பல நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. அதேநேரம், அமெரிக்காவும் பிரித்தானியாவும் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலை நியாயப்படுத்தியுள்ளன. தன்னைத் தற்காத்துக்கொள்ளும் உரிமை இஸ்ரேலுக்கு உள்ளது என்று அந்த நாடுகள் தெரிவித்துள்ளன. இஸ்ரேல் இன்று நடத்திய தாக்குதலில் சுமார் 20 இராணுவத் தளங்கள் இலக்கானதாகவும் இருவர் கொல்லப்பட்டதாகவும் ஈரானிய பாதுகாப்புப் படைத் தலைமையகம் தெரிவித்துள்ளது. எனினும், இஸ்ரேலின் தாக்குதலை முறியடித்துவிட்டதாகவும் ஈரான் படையினர் தெரிவித்துள்ளனர். இஸ்ரேலின் தாக்குதலையடுத்து ஈரான் வான்பரப்பின் பாதுகாப்பு முறைமை செயற்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன், ஈரான், ஈராக் விமான சேவைகள் அனைத்தும் இரத்துச்செய்யப்பட்டன. ஈரான் மீதான தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்து ஓமான், ஈராக், பாகிஸ்தான், மலேசியா, சவூதி ஆரேபியா, ஐக்கிய அரபு இராச்சியம் உள்ளிட்ட நாடுகள் அறிக்கை வெளியிட்டுள்ளன. இஸ்ரேலின் ஆத்திரமூட்டும்…