நடிகர் டில்லி கணேஷ் காலமானார்

நடிகர் டில்லி கணேஷ் காலமானார்: வயது முதிர்வினால் ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக நடிகர் டெல்லி கணேஷ் (80) இன்று காலமானார். சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் அவரது உயிர் பிரிந்ததாக உறவினர்கள் அறிவித்துள்ளனர். டெல்லி கணேஷின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. டெல்லி கணேஷின் மறைவுக்கு திரைத்துறையை சேர்ந்த பலரும் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நாடக நடிகராக இருந்து தமிழ் திரையுலகில் வில்லன் நகைச்சுவை, மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் டெல்லி கணேஷ் கோலோச்சியுள்ளார். டப்பிங் கலைஞராகவும் சிறந்து விளங்கி வந்தார். தூத்துக்குடியில் பிறந்த இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார். டெல்லி கணேஷ் 1976-ல் திரைத்துறைக்கு வந்தார். இவர் தக்ஷிண பாரத நாடக சபா (DBNS) எனப்படும் ‘டெல்லி’ நாடகக் குழுவில் ஒரு உறுப்பினராக இருந்தார்.…

மகிந்தவின் சிறப்புரிமை எதுவும் நீக்கப்படவில்லை

மகிந்தவின் சிறப்புரிமைகள் எதுவும் நீக்கப்படவில்லை

மகிந்தவின் சிறப்புரிமை எதுவும் நீக்கப்படவில்லை: முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகள் பொய்யானவை என்று ஜனாதிபதி அலுவலகம் அறிவித்துள்ளது. அந்தச் செய்திகள் அனைத்தும் பொய்யானவை என்றும் 1986 ஆம் ஆண்டின் 4 ஆம் இலக்க ஜனாதிபதிகளின் உரிமைச் சட்டத்தின் பிரகாரம் ஜனாதிபதி அலுவலகம் பின்வரும் சலுகைகளை அவருக்கு வழங்கியுள்ளதாகவும் ஜனாதிபதி அலுவலகம் தெரிவிக்கின்றது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஓய்வு பெற்ற ஜனாதிபதி ஒருவரின் ஓய்வூதியத்துக்கும், கொழும்பு 07, விஜேராம மாவத்தையில் உள்ள உத்தியோகபூர்வ இல்லத்திற்கும் செயலக கொடுப்பனவுக்கும் உரித்துடையவர். அத்துடன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு 03 வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன. Mercedes Benz -600 maybatch (B/P) car 2008, Toyota Land Cruiser – 2017, Mercedes Benz – G63 AMG 4*4 2850 jeep 2013…

ஒற்றையாட்சியை நிராகரிக்கும் ஒரே அணி

ஒற்றறையாட்சியை நிராகரிக்கும் ஒரே கட்சி

ஒற்றையாட்சியை நிராகரிக்கும் ஒரே அணி: தமிழ் தேசிய மக்கள் முன்னணி மாத்திரமே ஒற்றையாட்சியை நிராகரிக்கும் ஒரே கட்சி என்று அக்கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். முன்னணியின் வன்னி மாவட்ட வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் ஞாயிற்றுக்கிழமை (27) மாலை 4.30 அளவில் மன்னார் நகரசபை மண்டபத்தில் இடம்பெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த திரு. கஜேந்திரகுமார் பொன்னம்பலம், ஒற்றையாட்சியை நிராகரிக்கும் ஒரே அணி தமது கட்சி மாத்திரமே என்றும் இதுபற்றி வேறு எந்த ஒரு கட்சியும் உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கவில்லை என்றும் குறிப்பிட்டார். நாட்டில் இடம்பெற்ற யுத்தம் முடிவடைந்து 15 வருடங்கள் கடக்கின்றன. இந்தப் 15 வருடங்களில் எமது மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். வடக்கு கிழக்கில் பாதிக்கப்பட்ட மக்கள் நாளாந்தம் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இவர்களின் ஒரு போராட்டத்திலாவது ஜே.வி.பி கலந்து கொண்டுள்ளதா?.வடக்கு கிழக்கில் காணாமல்…

யானறிந்த கவிஞர் ஆங்கரை பைரவி!

யானறிந்த கவிஞர் ஆங்கரை பைரவி

யானறிந்த கவிஞர் ஆங்கரை பைரவி! அது என்ன ஆங்கரை?அச்சிற்றூரைப் பற்றி யோசித்தேன்பளிச்சிட்டது எனக்குள் ஒரு பதில் ஆணலை பெண்ணலை போன்றுஆண்+கரை = ஆங்கரை என்றும்அதற்குத் துணையாக அமைந்த பெண் பெயர்தான் “பைரவி.” அர்த்தநாரியாகிய அந்தச் சிவனும் பார்வதியும் ஒன்றாகி அமைந்ததால் “ஆங்கரை பைரவி” எனும் அதியற்புத அதிர்வலைகளைக் கொண்ட திருநாமம் இக் கதாநாயகனுக்கு இயல்பாய் அமைந்து விட்டது. யானறிந்த கவிஞர் ஆங்கரை பைரவி பற்றி இப்போது புரிந்திருக்கும். பிட்டுக்கு மண் சுமந்தவர் இறைவனார் சிவன் தமிழ்கூறு நல்லுலகில் தன் பெயர் நன்முறையில் நிலைக்கப் பாடுபட்டவர் (நாளும் பாடுபடுபவர்) நம்ம “ஆங்கரை பைரவி” அவர்கள். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இவரெழுதி வாசித்துக் கடக்க முடியாமல் என்னை மூர்ச்சையாகிக் கீழே விழச் செய்தது இவரின் “பின்னிருக்கையில் ஒரு போதிமரம்.” எனும் தலைப்பிலான சிறுகதைத் தொகுப்பு நூல். இப்பொழுதுக் “காஞ்சுருட்டான்”…

காத்தான்குடி பாத்திமா பிரதமரிடம் மகஜர்

காத்தான்குடி மாணவி

காத்தான்குடியிலிருந்து கொழும்புக்கு சைக்கிளில் பயணம் செய்த 14 வயதுடைய பாத்திமா நடா என்ற மாணவி இன்று (14) முற்பகல் பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவிடம் மகஜர் ஒன்றை கையளித்துள்ளார். சிறுவரகளும் இளைஞர்களும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ள போதைப்பொருள் நெருக்கடிக்கு எதிராகவும் சிறுவர் துஷ்பிரயோகத்தை தடுப்பதற்கு உடனடி நடவடிக்கைகள் எடுக்குமாறும் கோரி மாணவி இந்த மகஜரை கையளித்துள்ளார். தாமரைக் கோபுரத்திலிருந்து வீழ்ந்த மாணவி மரணம்!

ஈபிடிபி கொழும்புவிலும் தனித்துப் போட்டி

ஈபிடிபி கொழும்புவிலும் தனித்துப் போட்டி

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈபிடிபி) கொழும்பு மாவட்டத்திலும் தனித்துப் போட்டியிடுகிறது. கொழும்பு மாவட்ட தமிழர் மகா சபையின் தலைவரும் மேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான எஸ். இராஜேந்திரன் தலைமையில் கொழும்புவில் ஈபிடிபி போட்டியிடுகிறது. இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முன்னாள் தலைவரின் பிரத்தியேகச் செயலாளர் வீரசிங்கம் ஜெய்சங்கர், பௌத்த பிக்குகள் உள்ளிட்ட குழுவினர் கொழும்புவில் ஈபிடிபி சார்பில் போட்டியிடுகின்றனர். முன்னாள் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈபிடிபி) பொதுத் தேர்தலில் இரண்டு பௌத்த பிக்குகளை களமிறக்கியுள்ளதோடு, பௌத்த பிக்கு ஒருவரின் பெயரை முன்னிறுத்திய முதல் தமிழ் கட்சி என்ற வரலாற்று சாதனைப் படைத்துள்ளது. கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்த வணக்கத்திற்குரிய கிரிப்பன்னாரே விஜித தேரர், வணக்கத்திற்குரிய உடவளவே ஜினசிறி தேரர் ஆகியோரே இவ்வாறு ஈபிடிபியைப்…