அதிகாரத்தைக் கைப்பற்றவே ஈஸ்டர் தாக்குதல்

அதிகாரத்தைக் கைப்பற்றவே ஈஸ்டர் தாக்குதல்

அதிகாரத்தைக் கைப்பற்றவே ஈஸ்டர் தாக்குதல்: அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுவதற்காகவே 2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத்தில் தாக்குதல் நடந்ததாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்தார். பொலன்னறுவையில் இன்று(20) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார். கடந்த ஐந்தரை வருடங்களாக விசாரணைகள் என்ற போர்வையில் தாக்குதலுடன் தொடர்புடையவர்களின் தகவல்களை மறைக்கும் முயற்சிகளே மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டார். அதிகாரத்தைக் கைப்பற்றவே ஈஸ்டர் தாக்குதல் நடத்தப்பட்டதால்தான் 2019இல் ஆட்சிக்கு வந்த அரசாங்கத்திற்கோ அதைத் தொடர்ந்து வந்த அரசாங்கத்திற்கோ இந்தத் தாக்குதலுடன் தொடர்புடைய சூத்திரதாரிகளைச் சட்டத்தின் முன்கொண்டுவருவதற்கான நோக்கம் இருக்கவில்லை. தாம் ஆட்சிக்கு வந்து 6 மாதங்களே ஆகியுள்ள போதிலும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய மற்றும் பொறுப்புக்கூறவேண்டியவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு அவசியமான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்தார். உயிர்த்த ஞாயிறு…

மக்களின் காணிகளை நாம் விடுவிப்போம்!

மக்களின் காணிகளை நாம் விடுவிப்போம்!

மக்களின் காணிகளை நாம் விடுவிப்போம்!: ” பாதுகாப்பு காரணங்களுக்காக மக்களின் காணிகள் கையகப்படுத்தப்பட்டன. தற்போது போர் இல்லை. எனவே, பாதுகாப்பு என்ற போர்வையில் மக்களின் காணிகளை அரசாங்கம் கையகப்படுத்தி வைத்திருக்க முடியாது. விடுவிக்ககூடிய அனைத்து காணிகளையும் நாம் விடுவிப்போம்.” – என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். ‘மீண்டும் போர் மூளும் என்ற எதிர்பார்ப்பில் நாம் வேலை செய்யவில்லை. போர் ஏற்படுவதை தடுப்பதற்காகவே நாம் செயற்படுவோம். அதுதான் அரசாங்கத்துக்குரிய பொறுப்பாகும். யாழ்ப்பாணத்தை மீண்டும் இயல்பு நிலைக்கு நாம் கொண்டுவருவோம். காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினை உள்ளது. உங்களுடைய பிள்ளைகளை அரசாங்கத்திடம் ஒப்படைத்திருந்தால், பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்திருந்தால், இராணுவ முகாமில் ஒப்படைத்திருந்தால், அந்த பிள்ளைக்கு என்ன நடந்தது என்பதை தேடிபார்க்க வேண்டும். அது பொறுப்புள்ள அரசாங்கத்தின்…

ளெரடி என்பதில் பெருமை – ராமலிங்கம்

ளெரடி என்பதில் பெருமை - ராமலிங்கம்

ளெரடி என்பதில் பெருமை – ராமலிங்கம்: மக்களுக்காக தன்னை அர்ப்பணித்து செயற்படுவதுதான் ரௌடித்தனம் எனில், தானும் ரௌடி என்பதில் மகிழ்ச்சி அடைவதாக கடற்றொழில் மற்றும் நீரியல், கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் தெரிவித்தார். ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் யாழில் இன்று (17.04.2025) நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு அமைச்சர் ராமலிங்கம் உரையாற்றினார். இந்நிகழ்வில், தேசிய மக்கள் சக்தியின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான க.இளங்குமரன், ஜெ.ரஜீவன், ஸ்ரீ பவானந்தராஜா, யாழ்.மாநகர சபையின் வேட்பாளர் சு.கபிலன் மற்றும் அமைப்பாளர்கள், வேட்பாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர். அவர் மேலும் உரையாற்றுகையில் தெரிவித்ததாவது, “கடந்த காலங்களில் இலஞ்ச, ஊழல், மோசடிகளில் ஈடுபட்ட நபர்களுக்கு எதிராக சட்டம் செயற்படும். அவர்களின் முகவரி மகசின் சிறைச்சாலையென மாறுவது உறுதியாகும். முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முதலமைச்சர்களும் கம்பி எண்ணி வருகின்றனர்.அதேபோல படுகொலைகளில் ஈடுபட்டவர்கள்,…

காலியில் குடும்பத்தவர்கள்மீது குண்டர்கள் தாக்குதல்

காலியில் குடும்பத்தவர்கள்மீது குண்டர்கள் தாக்குதல்

காலியில் குடும்பத்தவர்கள்மீது குண்டர்கள் தாக்குதல் நடத்திய சம்பவமொன்று நேற்றிரவு ஓட்டலொன்றில் இடம்பெற்றுள்ளது. உணவு முன்பதிவு செய்துவிட்டு காத்திருந்த குழுவினர் கொடூரமாக தாக்கப்பட்ட இந்தச் சம்பவம் குறித்து காலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட குடும்ப உறுப்பினர்கள் கொழும்பிலிருந்து காலிக்கு விடுமுறைக்காகச் சென்று இரவு உணவிற்கு இந்த ஹோட்டலுக்குச் சென்றிருந்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்தது. இந்தக் குழு நேற்று (16) இரவு உணவை முன்பதிவு செய்து, சுமார் 30 நிமிடங்களுக்குப் பிறகு, உணவு தீர்ந்துவிட்டதாக ஹோட்டல் பொறுப்பாளர் கூறியுள்ளார். அப்போது அங்கிருந்தவர்கள், “உணவு இல்லை என்று தெரிவிக்க 30 நிமிடங்கள் ஆனதா?” என்று கேள்வி கேட்டுள்ளனர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில் ஹோட்டல் ஊழியர்கள் உணவுக்காகக் காத்திருந்தவர்கள்மீது குண்டர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். ஹோட்டலில் சுமார் 30 பேர் தங்களைத்…

கண்டியில் 49 பாடசாலைகளுக்கு விடுமுறை

கண்டியில் 49 பாடசாலைகளுக்கு விடுமறை

கண்டியில் 49 பாடசாலைகளுக்கு விடுமுறை: கண்டி நகரத்தைச் சுற்றியுள்ள 49 பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை வழங்குவது குறித்து மத்திய மாகாண கல்விச் செயலாளர் மாதுபானி பியசேன விசேட அறிக்கையொன்றை வௌியிட்டுள்ளார். அதற்கமைய, ஏப்ரல் 21 தொடக்கம் ஏப்ரல் 25 வரையான காலப்பகுதியில் 49 பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படுவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 18 முதல் 27 வரையான காலப்பகுதியில் விசேட தலதா கண்காட்சி இடம்பெறவுள்ளதால் இவ்வாறு பாடசாலைகள் மூடப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மூடப்படவுள்ள பாடசாலை விபரங்களை கீழே காணலாம் கண்டி வலயம் குருதெணிய மகா வித்தியாலயம் வித்தியா லோக மகா வித்தியாலயம் தென்னெகும்புர தர்மராஜ வித்தியாலயம் டீ.எஸ்.சேனாநாயக்க மகா வித்தியாலயம் மஹாஓயா மகளிர் வித்தியாலயம் பெரவட்ஸ் வித்தியாலயம் அம்பிடிய சித்தார்த வித்தியாலயம் தம்பவெல கனிஷ்ட வித்தியாலயம் கோதமீ மகளிர் வித்தியாலயம் ஶ்ரீ ராஹூல தேசிய பாடசாலை புனித…

17ஆம் திகதி கடும் வெப்பம்!

17ஆம் திகதி கடும் வெப்பம்!

17ஆம் திகதி கடும் வெப்பம்!: நாட்டின் பல பகுதிகளில் ஏப்ரல் 17ஆம் திகதி வியாழக்கிழமை வெப்பநிலை அவதானம் செலுத்த வேண்டிய அளவில் மேலும் அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு, வடமத்திய, வடமேல், சப்ரகமுவ தென், கிழக்கு ஆகிய மாகாணங்களிலும் இரத்தினபுரி, மொனராகல ஆகிய மாவட்டங்களிலும் மனித உடலுக்கு உணரும் அளவில் வெப்பநிலை அதிகரிக்கக் கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழ்நிலையில், கடுமையான வெளிப்புற செயல்பாடுகளை மட்டுப்படுத்தவும் போதுமான அளவு தண்ணீர் குடிக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது. மலையக மக்களின் மொழி தமிழா?

சிங்கப்பூர் பாராளுமன்றம் இன்று கலைப்பு

சிங்கப்பூர் பாராளுமன்றம் இன்று கலைப்பு

சிங்கப்பூர் பாராளுமன்றம் இன்று கலைப்பு: சிங்கப்பூர் பாராளுமன்றம் இன்று(15) கலைக்கப்பட்டதாக சிங்கப்பூர் அரச வர்த்தமானி அறிவித்துள்ளது. சிங்கப்பூரில் எதிர்வரும் மே மாதம் மூன்றாம் திகதி பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளதை கருத்தில் கொண்டு இன்று பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஏப்ரல் 23 ஆம் திகதி வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரின் பிரதமர் லோரன்ஸ் வோங்கு இம் முறை முதல் தடவையாக பொதுத் தேர்தலில் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

தேர்தலுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்

தேர்தலுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்:

தேர்தலுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்: கொழும்பு மாநகர சபை உட்பட 18 உள்ளூராட்சி நிறுவனங்களுக்காக எதிர்வரும் மே மாதம் 6 ஆம் திகதி தேர்தலை நடத்துவதற்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை உத்தரவை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று நீக்கி உத்தரவிட்டது. அந்த உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு சமர்ப்பிக்கப்பட்டு நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்களை மீண்டும் ஏற்றுக்கொள்ள உத்தரவு பிறப்பித்து நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது. சட்ட மாஅதிபரால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணையை பரிசீலித்த பின்னர், மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் பதில் தலைவர் மொஹமட் லபார் தாஹிர் மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் குழாம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

புனித நோன்பு இன்று ஆரம்பம்

இலங்கை முஸ்லிம்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை (02) புனித றமழான் நோன்பை ஆரம்பித்துள்ளனர். நேற்று சனிக்கிழமை தலைப் பிறை தென்படாததால், இன்று றமழான் நோன்பு தொடங்குவதாகக் கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.

அமெரிக்க பொருள்களுக்கு கனடா வரிவிதிப்பு!

அமெரிக்க பொருள்களுக்குக் கனடா வரிவிதிப்பு

அமெரிக்க பொருள்களுக்கு கனடா வரிவிதிப்பு: கனடாவுக்கு அமெரிக்கா வரி விதிப்பதாக இருந்தால், அமெரிக்க பொருள்களுக்கு 25% வரி விதிக்கப்படும் என்று அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார். அமெரிக்காவின் வர்த்தக நடவடிக்கைக்கு கனடா பதிலடி கொடுக்கும் வகையில் 155 பில்லியன் கனேடிய டொலர் மதிப்பிலான அமெரிக்க இறக்குமதி பொருள்களுக்கு 25 சதவிகிதம் வரி விதிக்கப்படும் என்று அறிவித்துள்ளார். முதல் சுற்றாக 30 பில்லியன் கனேடிய டொலர் மதிப்புள்ள அமெரிக்க பொருள்களுக்கு வரி விதிப்பானது செவ்வாய்கிழமை முதல் அமுல்படுத்தப்படும். அதைத் தொடர்ந்து மூன்று வாரங்களில் 125 பில்லியன் கனேடிய டொலர் மதிப்புள்ள பொருள்கள் மீது இந்த புதிய வரி விதிப்பு அமுல்படுத்தப்படும் என்று தெரிவித்தார். “நிச்சையமாக நாங்கள் அதிகரிக்க நினைக்கவில்லை. ஆனால் நாங்கள் கனடாவுக்காகவும் கனடா மக்களின் வேலைவாய்ப்புக்காகவும் துணை நிற்கிறோம்” என்று…