சிவானந்த ராஜா சிஐடியில் முறைப்பாடு: கொட்டாஞ்சேனை மாணவியை சக மாணவர்கள் முன்னிலையில் அவமானப்படுத்தியதாகக் கூறப்படும் தனியார் கல்வி நிலைய உரிமையாளர் என். சிவானந்த ராஜா சிஐடியில் முறைப்பாடு செய்துள்ளார். தனக்கும் மாணவியின் தற்கொலைக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்றும் வேண்டுமென்றே சிலர் திட்டமிட்டுத் தம் பெயருக்கு அபகீர்த்தியை ஏற்படுத்துவதாகவும் சிவானந்த ராஜா தனது முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார். தனது பெயருக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில், ஒரு குழுவினர் வேண்டுமென்றே பிரசாரங்களை மேற்கொள்வதாகவும், அதற்கு உரிய விசாரணை நடத்தப்பட வேண்டுமெனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். உயிரிழந்த மாணவி உடல்நலக் குறைவுடன் வகுப்புக்களுக்கு வந்திருந்ததாகவும், மாணவியின் பெற்றோரை அழைத்து, அவர் உடல்நலம் தேறிய பின்னர் வகுப்புகளில் பங்கேற்குமாறு மட்டுமே அறிவுறுத்தியதாகவும் அவர் தெரிவித்தா தனது புகைப்படங்களைப் பயன்படுத்தி சமூக ஊடகங்களில் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்படுவதால் தான் மன உளைச்சலுக்கு ஆளாகியிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.…
Category: தற்போதைய செய்திகள்
கொட்டாஞ்சேனை ஆசிரியருக்கு கட்டாய விடுமுறை
கொட்டாஞ்சேனை ஆசிரியருக்கு கட்டாய விடுமுறை: கொட்டாஞ்செனையில் 16 வயது மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்துடன் தொடர்புடைய, கொழும்பு பம்பலப்பிட்டி ஆசிரியர் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ளார். மாணவியைத் துஷ்பிரயோம் செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள இந்த ஆசிரியர் கட்டாய லீவில் அனுப்பப்பட்டு விசாரணை நடைபெறுவதாகக் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. உயிரிழந்த மாணவிக்கு நீதிகோரி கொழும்புவில் நேற்று பெற்றோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
போர்ப் பதற்றத்தால் போட்டிகள் ஒத்திவைப்பு
போர்ப் பதற்றத்தால் போட்டிகள் ஒத்திவைப்பு: இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக தற்போது இடம்பெற்றுவரும் 2025 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டித் தொடர் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. இந்த கடினமான காலங்களில் இந்தியாவுடன் நிற்க இந்திய கிரிக்கெட் வாரியம் விரும்புவதாகவும், எனவே ஐபிஎல் போட்டி காலவரையின்றி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் பிசிசிஐ அதிகாரி ஒருவர் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக போர் பதற்றம் அதிகரித்துள்ளதால் ஐபிஎல் தொடரை நிறுத்தி வைப்பது குறித்து பிசிசிஐ ஆலோசனை கூட்டம் நடத்தியது. இந்தக் கூட்டத்தில் பிசிசிஐ தலைவர் உட்பட பல்வேறு அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் நாட்டில் நிலவும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு எஞ்சிய…
விமானப்படை கெலி விபத்தில் அறுவர் பலி
விமானப்படை கெலி விபத்தில் அறுவர் பலி யானதாக விமானப் படை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயிற்சி முடித்து வெளியேறும் வைபத்தில் பங்குபற்றிய பெல் 212 கெலிகொப்டர் மாதுறுஓயா ஆற்றில் வீழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்தச் சந்தர்ப்பத்தில் 12 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக முன்னர் அறிவிக்கப்பட்டது. எனினும், விமானப் படை வீரர்கள் உட்பட அறுவர் உயிரிழந்துவிட்டதாக விமானப் படைய வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் தெரிவிக்கப்ப்டுள்ளது. இந்தச் சம்பவம் இன்று காலை 6.45 அளவில் இடம்பெற்றுள்ளது. இன்று காலை 6.45 அளவில் இடம்பெற்ற இந்தச் சம்பவம் பற்றி முழுமையாக ஆய்வு நடத்த ஒன்பது பேர் கொண்ட குழுவொன்றை விமானப் படைத் தளபதி நியமித்துள்ளார்.
நாடு முழுவதும் 62வீதம் வாக்குப்பதிவு
நாடு முழுவதும் 62வீதம் வாக்குப்பதிவு இடம்பெற்றிருப்பதாகத் தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 07 மணிக்கு ஆரம்பமாகி மாலை 4:00 மணிக்கு நிறைவடைந்தது. இதற்கமைய, தேர்தல் மாவட்டங்கல் பலவற்றில் மாலை 04 மணி வரையலான வாக்குப்பதிவு வீதம் 60 % ஐ தாண்டியுள்ளது. 4 மணி வரை பதிவான வாக்குப்பதிவு வீதம் பின்வருமாறு, மன்னார் – 70%திருகோணமலை – 67%பொலன்னறுவை – 64%அநுராதபுரம் – 64%காலி – 63%திகாமடுல்ல – 63% மாத்தளை – 62%மட்டக்களப்பு – 61% மொனராகலை – 61%களுத்துறை – 61%வவுனியா – 60%பதுளை – 60%நுவரெலியா – 60%முல்லைத்தீவு – 60% இரத்தினபுரி- 60%கிளிநொச்சி – 60%கேகாலை – 58% மாத்தறை- 58%புத்தளம் – 55% கொழும்பு- 52% நாடு முழுவதும் 62வீதம்…
நுவரெலியாவில் 60வீத வாக்குப் பதிவு
நுவரெலியாவில் 60வீத வாக்குப் பதிவு: உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று (6) காலை 7 மணிக்கு ஆரம்பமாகி மாலை 4 மணியுடன் நிறைவுபெற்றது. நுவரெலியா மாவட்டத்தில் வாக்களிப்பு மாலை 04.00 மணி வரை சுமூகமாக இடம் பெற்றதாகவும் 60% சதவீதமான வாக்குகள் அளிக்கப்பட்டதாகவும் மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரி / மாவட்ட செயலாளர் திருமதி. துசாரி தென்னகோன் தெரிவித்துள்ளார். நுவரெலியா மாவட்டத்தில் இன்று (6) நண்பகல் 12 மணி வரையான காலப்பகுதியில் 32% சத வீத வாக்கு பதிவு இடம்பெற்றுள்ளதாக துசாரி தென்னகோன் தெரிவித்துள்ளார். இதேவேளை, பிற்பகல் 2 மணி வரையான காலப்பகுதியில் நுவரெலியா மாவட்டத்தில் 53% சத வீத வாக்கு பதிவு இடம்பெற்றுள்ளது. க. கிருஷாந்தன்
ஏவுகணைத் தாக்குதலுக்குத் தயாராகும் இந்தியா!
ஏவுகணைத் தாக்குதலுக்குத் தயாராகும் இந்தியா!: பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் தொடர்புடையோருக்கு கற்பனைக்கும் எட்டாத அளவுக்கு தண்டனை வழங்கப் படும் என்று பிரதமர் நரேந்திர மோடி பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து மத்திய பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் கூறியதாவது: பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்படும் தீவிரவாத முகாம்கள் மீது ஏவுகணை தாக்குதல் நடத்த இந்திய ராணுவம் திட்டமிட்டு உள்ளது. கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் 18-ம் திகதி காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டம், உரியில் உள்ள ராணுவ முகாம் மீது பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதைத் தொடர்ந்து 2016-ம் ஆண்டு செப்டம்பர் 28-ம் திகதி இந்திய இந்திய கமாண்டோ படை வீரர்கள் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள் தரைவழியாக நுழைந்து தீவிரவாத முகாம்களை அழித்தனர். இதில் ஏராளமான தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி 14-ம்…
காஷ்மிர் தாக்குதலுக்கு உலகத் தலைவர்கள் கண்டனம்
காஷ்மிர் தாக்குதலுக்கு உலகத் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 26 பேர் உயிரிழந்தனர். காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல் சம்பவம் நடந்ததை தொடர்ந்து பிரதமர் மோடி சவுதி பயணத்தை முடித்துக்கொண்டு அவசரமாக டெல்லி வந்தடைந்தார். பயங்கரவாதிகளின் இந்த கொடூர தாக்குதலுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப், துணை அதிபர் ஜெ.டி. வான்ஸ், ரஷிய அதிபர் புடின், இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி, இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் உள்ளிட்ட பல உலக தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளளனர்.
இந்தியாவில் பயங்கரவாதத் தாக்குதலில் 26பேர் பலி
இந்தியாவில் பயங்கரவாதத் தாக்குதலில் 26பேர் பலியானதாகப் பிந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. ஜம்மு-காஷ்மிர் மாநிலத்தில் உள்ள சுற்றுலாத் தளமொன்றில் பிரிவினைவாதக் குழுவினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் 26பேர் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டவர்களின் வௌிநாட்டவர்கள் இருவரும் இந்திய கடற்படை வீரர் ஒருவரும் அடங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மைய காலத்தில் நடத்தப்பட்ட மிக மோசமான தாக்குதலாக இன்றைய தாக்குதல் கருதப்படுகிறது. சம்பவத்தைக் கேள்வியுற்ற பிரதமர் ஶ்ரீ நரேந்திர மோடி தனது சவூதி அரேபிய விஜயத்தை சுருக்கிக் கொண்டு நாடு திரும்புகிறார். இதனிடையே உள்துறை அமைச்சர் அமித் ஷா ஶ்ரீநகர் சென்றிருக்கிறார்.
பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் காலமானார்
பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் காலமானார் என்று வத்திக்கான் அறிவித்துள்ளது. தமது 88 ஆவது வயதில் பாப்பரசர் காலமானதாக காணொளி அறிக்கையொன்றின் ஊடாக வத்திகான் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. சுகவீனம் காரணமாக அண்மையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த பாப்பரசர் பிரான்சிஸ், குணமடைந்து வெளியேறிய நிலையில் ஓய்வில் இருந்தார். இந்நிலையில், இன்று அவர் காலமானாதாக அறிவிக்கப்பட்டுள்ளது. லத்தீன் அமெரிக்காவைச் சேர்ந்த முதலாவது பாப்பரசரான அவர் 12 ஆண்டுகள் இறைசேவையில் இருந்தார்.