பயங்கரவாதத் தாக்குதல் குறித்து விசாரணை: வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளை இலக்கு வைத்துப் பயங்கரவாதத் தாக்குதல் நட்தப்படலாம் என்று கிடைத்திருக்கும் தகவல்கள் குறித்து விசாரணை நடத்தி வருவதாகப் பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் குறித்துச் சீராய்வு மனு ஒன்றைச் சமர்ப்பித்து கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேனவிடம் பொலிஸார் நேற்று தமது அறிக்கையினை முன்வைத்தனர். இந்தச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மூவரும் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக பொலிஸார் நீதிமன்றில் அறிவித்துள்ளனர். அந்த விசாரணைகளின் போது இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்திற்கிடமான ஏனைய நபர்கள் தொடர்பிலான தகவல்கள் தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான மேலதிக உண்மைகளை வெளிக்கொணரும் வகையில் சிறையில் உள்ள பல சந்தேக நபர்களை விசாரணை செய்வதற்கும் அவர்களின் வாக்குமூலங்களைப் பதிவு செய்வதற்கும் அனுமதிக்குமாறும் பொலிஸார் நீதிமன்றில்…
Category: Featured
ஈரான் மீதான தாக்குதலுக்குக் கண்டனம்
ஈரான் மீதான தாக்குதலுக்குக் கண்டனம்: ஈரானின் இராணுவத் தளங்களை இலக்குவைத்து இஸ்ரேல் இன்று நடத்திய விமானத் தாக்குதலுக்குப் பல நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. அதேநேரம், அமெரிக்காவும் பிரித்தானியாவும் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலை நியாயப்படுத்தியுள்ளன. தன்னைத் தற்காத்துக்கொள்ளும் உரிமை இஸ்ரேலுக்கு உள்ளது என்று அந்த நாடுகள் தெரிவித்துள்ளன. இஸ்ரேல் இன்று நடத்திய தாக்குதலில் சுமார் 20 இராணுவத் தளங்கள் இலக்கானதாகவும் இருவர் கொல்லப்பட்டதாகவும் ஈரானிய பாதுகாப்புப் படைத் தலைமையகம் தெரிவித்துள்ளது. எனினும், இஸ்ரேலின் தாக்குதலை முறியடித்துவிட்டதாகவும் ஈரான் படையினர் தெரிவித்துள்ளனர். இஸ்ரேலின் தாக்குதலையடுத்து ஈரான் வான்பரப்பின் பாதுகாப்பு முறைமை செயற்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன், ஈரான், ஈராக் விமான சேவைகள் அனைத்தும் இரத்துச்செய்யப்பட்டன. ஈரான் மீதான தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்து ஓமான், ஈராக், பாகிஸ்தான், மலேசியா, சவூதி ஆரேபியா, ஐக்கிய அரபு இராச்சியம் உள்ளிட்ட நாடுகள் அறிக்கை வெளியிட்டுள்ளன. இஸ்ரேலின் ஆத்திரமூட்டும்…
ஈஸ்டர் தாக்குதலுக்கு அரசியல் தொடர்பில்லை
ஈஸ்டர் தாக்குதலுக்கு அரசியல் தொடர்பில்லை: உயிர்த்த ஞாயிறு தாக்குதலை அரசியலுடன் தொடர்புபடுத்த வேண்டாம் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இந்த் சம்பவம் பற்றிய விசாரணை அறிக்கை பற்றித் தற்போது எழுந்திருக்கும் சர்ச்சையை அடுத்து ரணில் விக்கிரமசிங்க அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். சர்ச்சையை ஏற்படுத்திய உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான செய்திகள் ஜனாதிபதித் தேர்தலின் போது தமக்குக் கிடைத்ததாகவும், ஆனால் அந்தச் சம்பவத்தை அரசியலுடன் இணைக்கத் தயங்கியதன் காரணமாக அவற்றைப் பகிரங்கப்படுத்தவில்லை என்றும் முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேலும் குறிப்பிடுகையில்; “இலங்கையின் எட்டாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக நான் பதவியேற்ற பின்னர், கத்தோலிக்க ஆயர் பேரவையின் தலைவர் அருட்தந்தை ஹரோல்ட் அந்தோனி பெர்னாண்டோவின் வேண்டுகோளுக்கு இணங்க உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான ஆணைக்குழு அறிக்கைகளை அவரிடம் கையளித்தேன். அதன் பின்னர்,…
நியாயமான விலையில் அரிசி விற்பனை
நியாயமான விலையில் அரிசி விற்பனை செய்ய அனைத்துத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார். அத்துடன் அரிசிக்கான நிர்ணய விலையில் எவ்வித மாற்றத்தையும் மேற்கொள்ள எதிர்பார்க்கவில்லை என ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். ஒழுங்கமைக்கப்பட்ட விவசாயத் திட்டத்தை உருவாக்கி விவசாயிகளுக்கு அதிக நன்மைகளைப் பெறுவதற்கான நீண்ட கால வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். அரிசி வியாபாரிகள், விவசாயத் திணைக்கள அதிகாரிகளுடன் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின்போது ஜனாதிபதி இதனை தெரிவித்தார். நியாயமான விலையில் அரிசி விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டதன் பின்னர் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாகவும் அதன் பின்னர் அரிசி விலையை மாற்றுவது நியாயமல்ல எனவும் அரிசி வியாபாரிகளிடம் ஜனாதிபதி குறிப்பிட்டார். விவசாயிகளிடம் இருந்து அரிசியை நியாயமான விலையில் பெற்றுக்கொள்வதற்கும் நுகர்வோருக்கு நியாயமான விலையில் அரிசியை வழங்குவதற்கும்…
கம்மன்பிலவின் அறிக்கையை அரசு நிராகரிப்பு
கம்மன்பிலவின் அறிக்கையை அரசு நிராகரிப்பு: பிவித்துரு கெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில நேற்று வெளியிட்ட உயிர்த்த ஞாயிறு தொடர்பான விசாரணை அறிககையை அரசாங்கம் நிராகரித்துள்ளது. ஓய்வுபெற்ற நீதிபதி ஏ. என். ஜே. டி. அல்விஸ் தலைமையிலான விசாரணைக் குழுவின் அறிக்கையை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில வெளியிட்டிருந்தார். இந்த அறிக்கையில் முற்று முழுதாக முன்னாள் பிரதிப் பொலிஸ் மாஅதிபர் ரவி ஜயவர்தன, குற்றப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராகக் கடமையாற்றி ஷானி அபேசேகர ஆகியோரை இலக்குவைத்துத் தயாரிக்கப்பட்டிருப்பதாக வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் தெரிவித்துள்ளார். இந்த இருவரும் தேசிய மக்கள் சக்தியின் ஓய்வுபெற்ற பொலிஸ் பேரவையில் இணைந்துகொண்டதன் பின்னரே விசாரணைக் குழு நியமிக்கப்பட்டதாக அமைச்சர் விஜித்த ஹேரத் கூறினார். கம்மன்பிலவின் அறிக்கையை அரசு நிராகரிப்பு செய்வதற்கான காரணத்தை விளக்கிய அமைச்சர், 2024 ஜூன் மாதம்…
நாளை முதல் மீண்டும் யாழ்தேவி
நாளை முதல் மீண்டும் யாழ்தேவி வடக்கு ரயில் மார்க்கத்தின் சேவையை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. றாளை திங்கட்கிழமை யாழ்தேவி ரயில் சேவையில் ஈடுபடுத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். வடக்கு ரயில் மார்க்கத்தின் திருத்தப் பணிகள் காரணமாக தற்போது மஹவ வரை மட்டுமே ரயில் சேவையில் ஈடுபடுகிறது. நாளை முதல் மீண்டும் யாழ்தேவி யாழ்ப்பாணத்திற்கான பயணத்தை ஆரம்பிப்பதையிட்டுப் பலரும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். வாகன வரிஅனுமதிப்பத்திரம் இலகுவாகப் பெறலாம்
ஹமாஸ் தலைவர் சின்வார் கொல்லப்படவில்லை
ஹமாஸ் தலைவர் சின்வார் கொல்லப்படவில்லை என்று அவ்வமைப்பினர் தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டு அக்டோபர் ஏழாந்திகதி இஸ்ரேலில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்டவர் எனக் கருதப்படும் ஹமாஸ் தலைவர் சின்வார், காஸாவில் இஸ்ரேலியப் படைகளால் கொல்லப்பட்டதாக அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் காட்ஸ் உறுதி செய்துள்ளார். ஆனால், இது தவறான செய்தி என்றும், தங்கள் தலைவர் உயிருடன் இருப்பதாகவும் ஹமாஸ் படையினர் தெரிவித்துள்ளனர். இஸ்ரேலிய எல்லைக்குள் நுழைந்து பலஸ்தீன நாட்டை சேர்ந்தச் ஹமாஸ் படையினர் நடத்திய தாக்குதலில் ஏராளமானோர் கொல்லப்பட்டனர். பலர் பணயக் கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக ஹமாஸ் மீது போரை தொடங்கியது இஸ்ரேல். இருதரப்பிலும் மாறி மாறி தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில் தங்கள் இராணுவம் நடத்திய அதிரடித் தாக்குதலில் மூன்று முக்கியமான தலைகள் கொல்லப்பட்டு உள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்பு படை…
ஐந்துமில்லியன் டொலர் இலஞ்சம் தந்தார்கள்
தான் பிரதமராக இருந்தபோது தனக்கு ஐந்துமில்லியன் டொலர் இலஞ்சம் தந்தார்கள் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். தனது அரசாங்கத்திலிருந்த கனிஷ்ட அமைச்சர் ஒருவரின் கணவர் சிங்கப்பூர் வர்த்தகர் ஒருவருடன் ஐந்து மில்லியன் டொலர் இலஞ்சம் பாராளுமன்றத்திற்குக் கொண்டு வந்து தனது மேசையின் மீது வைத்ததாகவும் தான் அதனை மறுத்துவிட்டதாகவும் சந்திரிகா தெரிவித்துள்ளார். உடனடியாகப் பணத்தை எடுத்துக்கொண்டு போகுமாறும் “உம்மை நான் கைது செய்திருக்க வேண்டும் “என்றும் எச்சரித்து அனுப்பியதாகவும் முன்னாள் ஜனாதிபதி கூறியுள்ளார். கொழும்பில் நடைபெற்ற பட்டயக்கணக்காளர்களின் 45ஆவது தேசிய மாநாட்டில் கலந்துகொண்டு சந்திரிகா உரையாற்றினார். ஒரு செயற்றிட்டம் ஒன்றைப் பெறுவதற்காகத் தனக்கு ஐந்து மில்லியன் டொலர் இலஞ்சம் கொடுக்க முயற்சிக்கப்பட்டதாகக் கூறிய சந்திரிகா, முடிந்தவரை கொள்ளையடியுங்கள், ஆனால், சிக்கிக்கொள்ள வேண்டாம் என்று தனது எம்பிமாருக்கு அறிவுரை கூறிய ஒரு ஜனாதிபதியும் நமது…
ஈபிடிபி கொழும்புவிலும் தனித்துப் போட்டி
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈபிடிபி) கொழும்பு மாவட்டத்திலும் தனித்துப் போட்டியிடுகிறது. கொழும்பு மாவட்ட தமிழர் மகா சபையின் தலைவரும் மேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான எஸ். இராஜேந்திரன் தலைமையில் கொழும்புவில் ஈபிடிபி போட்டியிடுகிறது. இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முன்னாள் தலைவரின் பிரத்தியேகச் செயலாளர் வீரசிங்கம் ஜெய்சங்கர், பௌத்த பிக்குகள் உள்ளிட்ட குழுவினர் கொழும்புவில் ஈபிடிபி சார்பில் போட்டியிடுகின்றனர். முன்னாள் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈபிடிபி) பொதுத் தேர்தலில் இரண்டு பௌத்த பிக்குகளை களமிறக்கியுள்ளதோடு, பௌத்த பிக்கு ஒருவரின் பெயரை முன்னிறுத்திய முதல் தமிழ் கட்சி என்ற வரலாற்று சாதனைப் படைத்துள்ளது. கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்த வணக்கத்திற்குரிய கிரிப்பன்னாரே விஜித தேரர், வணக்கத்திற்குரிய உடவளவே ஜினசிறி தேரர் ஆகியோரே இவ்வாறு ஈபிடிபியைப்…
பதில் பொலிஸ் மாஅதிபருக்கு அங்கீகாரம்
பதில் பொலிஸ் மா அதிபராக சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் பிரியந்த வீரசூரியவை நியத்தமைக்கு அரசியலமைப்புப் பேரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. புதிய ஜனாதிபதி நியமிக்கப்பட்டதன் பின்னர் முதன்முறையாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் அரசியலமைப்பு பேரவை இன்று (08) கூடியபோதே அது இடம்பெற்றுள்ளது. பதில் பொலிஸ் மா அதிபர் ஒருவர் 14 நாட்களுக்கு மேல் பதவியில் இருந்தால் அரசியலமைப்பு சபையின் அனுமதி பெறப்பட வேண்டும். அந்த வகையில் ஜனாதிபதி அநுரகுமார நியமித்த பதில் பொலிஸ் மாஅதிபரை அரசியலமைப்புப் பேரவை அங்கீகரித்துள்ளது.