பஸ் விபத்தில் 21பேர் உயிரிழப்பு

பஸ் விபத்தில் 21பேர் உயிரிழப்பு

பஸ் விபத்தில் 21பேர் உயிரிழப்பு: கொத்மலை ரம்பொடை கெரண்டிஎல்ல பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது. இவ்விபத்து குறித்து சபாநாயகர் மற்றும் போக்குவரத்து பிரதி அமைச்சர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். கதிர்காமத்திலிருந்து குருநாகல் நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்துக் சபைக்கு சொந்தமான பஸ் ஒன்று, நுவரெலியா – கம்பளை பிரதான வீதியில் கொத்மலை ரம்பொட கெரண்டிஎல்ல பகுதியில் சுமார் 100 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்தவர்களில் 21 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்தநிலையில், உயிரிழந்த 21 பேரின் உடல்களும் கொத்மலை பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன. உயிரிழந்தவர்களில் 5 பெண்கள் மற்றும் 12 ஆண்கள் உள்ளடங்குவதாகவும், பஸ் சாரதியும் விபத்தில் உயிரிழந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து இன்று அதிகாலை 4:30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இந்த பஸ்ஸில் சுமார்…

விமானப்படை கெலி விபத்தில் அறுவர் பலி

விமானப்படை கெலி விபத்தில் அறுவர் பலி

விமானப்படை கெலி விபத்தில் அறுவர் பலி யானதாக விமானப் படை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயிற்சி முடித்து வெளியேறும் வைபத்தில் பங்குபற்றிய பெல் 212 கெலிகொப்டர் மாதுறுஓயா ஆற்றில் வீழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்தச் சந்தர்ப்பத்தில் 12 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக முன்னர் அறிவிக்கப்பட்டது. எனினும், விமானப் படை வீரர்கள் உட்பட அறுவர் உயிரிழந்துவிட்டதாக விமானப் படைய வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் தெரிவிக்கப்ப்டுள்ளது. இந்தச் சம்பவம் இன்று காலை 6.45 அளவில் இடம்பெற்றுள்ளது. இன்று காலை 6.45 அளவில் இடம்பெற்ற இந்தச் சம்பவம் பற்றி முழுமையாக ஆய்வு நடத்த ஒன்பது பேர் கொண்ட குழுவொன்றை விமானப் படைத் தளபதி நியமித்துள்ளார்.

இந்தியாவில் பயங்கரவாதத் தாக்குதலில் 26பேர் பலி

இந்தியாவில் பயங்கரவாதத் தாக்குதலில் 26பேர் பலி

இந்தியாவில் பயங்கரவாதத் தாக்குதலில் 26பேர் பலியானதாகப் பிந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. ஜம்மு-காஷ்மிர் மாநிலத்தில் உள்ள சுற்றுலாத் தளமொன்றில் பிரிவினைவாதக் குழுவினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் 26பேர் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டவர்களின் வௌிநாட்டவர்கள் இருவரும் இந்திய கடற்படை வீரர் ஒருவரும் அடங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மைய காலத்தில் நடத்தப்பட்ட மிக மோசமான தாக்குதலாக இன்றைய தாக்குதல் கருதப்படுகிறது. சம்பவத்தைக் கேள்வியுற்ற பிரதமர் ஶ்ரீ நரேந்திர மோடி தனது சவூதி அரேபிய விஜயத்தை சுருக்கிக் கொண்டு நாடு திரும்புகிறார். இதனிடையே உள்துறை அமைச்சர் அமித் ஷா ஶ்ரீநகர் சென்றிருக்கிறார்.

மக்களின் காணிகளை நாம் விடுவிப்போம்!

மக்களின் காணிகளை நாம் விடுவிப்போம்!

மக்களின் காணிகளை நாம் விடுவிப்போம்!: ” பாதுகாப்பு காரணங்களுக்காக மக்களின் காணிகள் கையகப்படுத்தப்பட்டன. தற்போது போர் இல்லை. எனவே, பாதுகாப்பு என்ற போர்வையில் மக்களின் காணிகளை அரசாங்கம் கையகப்படுத்தி வைத்திருக்க முடியாது. விடுவிக்ககூடிய அனைத்து காணிகளையும் நாம் விடுவிப்போம்.” – என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். ‘மீண்டும் போர் மூளும் என்ற எதிர்பார்ப்பில் நாம் வேலை செய்யவில்லை. போர் ஏற்படுவதை தடுப்பதற்காகவே நாம் செயற்படுவோம். அதுதான் அரசாங்கத்துக்குரிய பொறுப்பாகும். யாழ்ப்பாணத்தை மீண்டும் இயல்பு நிலைக்கு நாம் கொண்டுவருவோம். காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினை உள்ளது. உங்களுடைய பிள்ளைகளை அரசாங்கத்திடம் ஒப்படைத்திருந்தால், பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்திருந்தால், இராணுவ முகாமில் ஒப்படைத்திருந்தால், அந்த பிள்ளைக்கு என்ன நடந்தது என்பதை தேடிபார்க்க வேண்டும். அது பொறுப்புள்ள அரசாங்கத்தின்…

பாலுக்கு வற் வரி விலக்களிப்பு

பாலுக்கு வற் வரி விலக்களிப்பு

பாலுக்கு வற் வரி விலக்களிப்பு: பெறுமதி சேர் வரி (VAT) திருத்தச் சட்டமூலத்தின் படி, உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் திரவப் பால், தயிர் ஆகியவை வற் வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதற்கமைய, ஏப்ரல் 11 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் திரவ பால் மற்றும் தயிர் மீதான வெட் வரி நீக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது. பாலுக்கு வற் வரி விலக்களிப்பு தொடர்பாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவுப்புக்கு அமைவாக, புதிய பால் குறைந்தபட்சம் நூற்றுக்கு 50 சதவீதம் இருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. வெட் வரி திருத்த சட்டமூலம் ஏப்ரல் 9 ஆம் திகதி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன ஏப்ரல் 11 ஆம் திகதி கையெழுத்திட்டு ஒப்புதல் அளித்தார். அதன்படி, சட்டம் குறித்த…

அதானி திட்டம் இலங்கைக்கு நட்டம்?

அதானி திட்டம்

மனோ கணேசன் எம்பீ அரசிடம் கேள்வி அதானி கிரீன் எனர்ஜி-ஸ்ரீலங்கா மீள் சக்தி பெருந்திட்டம், இலங்கைக்கு மட்டும் மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டமல்ல. அது மேலதிக மின்சக்தியை இந்திய மின் சுற்றுக்கு ஏற்றுமதி செய்யும் நோக்கத்தை கொண்ட திட்டமாகும். அதற்காக இலங்கை-இந்திய மின் சுற்றுகள் இணக்கப்பட இருந்தன. இந்த பெருந்திட்ட மின் உற்பத்தி கட்டமைப்பு மற்றும் இந்திய சுற்றுடனான தொடர்பு இணைப்பு ஆகியவற்றை அமைக்கும் மற்றும் பராமரிக்கும், பாரிய பொறுப்புகளை அதானி கிரீன் எனர்ஜி நிறுவனம்தான் ஏற்று இருந்தது என்பதை மறவாதீர்கள். அதுதான் முழு திட்டம். அதை புரிந்துகொள்ள இன்றைய இலங்கை அரசு தவறி விட்ட என்று தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். அதானியை நீங்கள் வெளியேற்றவில்லை. அதானி கிரீன் எனர்ஜி நிறுவனம்தான் உங்களை விட்டு வெளியேறி விட்டது. இது…

புனித நோன்பு இன்று ஆரம்பம்

இலங்கை முஸ்லிம்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை (02) புனித றமழான் நோன்பை ஆரம்பித்துள்ளனர். நேற்று சனிக்கிழமை தலைப் பிறை தென்படாததால், இன்று றமழான் நோன்பு தொடங்குவதாகக் கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.

பாராளுமன்றத் தேர்தலில் ஜேவிபி பெருவெற்றி!

பாராளுமன்றத் தேர்தலில் ஜேவிபி பெருவெற்றி!

பாராளுமன்றத் தேர்தலில் ஜேவிபி பெருவெற்றி!: நடந்து முடிந்த பாராளுமன்ற பொதுத் தேர்தலில் மக்கள் விடுதலை முன்னணி (ஜேவிபி) தலைமையிலான தேசிய மக்கள் சக்தி 159 உறுப்பினர்களைப் பெற்று பெருவெற்றியடைந்துள்ளது. மக்களின் 68 இலட்சத்து 63186 வாக்குகள் மூலம் 141 உறுப்பினர்களையும் தேசியப் பட்டியல் மூலம் 18 உறுப்பினர்களையும் பெற்றுக்கொண்டுள்ளது. இதில் 12 பேர் பெண்களாவர். அதில் தமிழர்கள் மூவரும் அடங்குகின்றனர். சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி 19 இலட்சத்து 68716 வாக்குகளைப் பெற்று 35 உறுப்பினர்களையும் தேசியப் பட்டியல் ஊடாக ஐந்து உறுப்பினர்களையும் பெற்றுக்கொண்டுள்ளது. ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான புதிய ஜனநாயக முன்னணி, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகியன தலா மூன்று உறுப்பினர்களைப் பெற்றுக்கொண்டுள்ளன. இலங்கை தமிழரசுக் கட்சி எட்டு உறுப்பினர்களைப் பெற்றுக்கொண்டுள்ளது. பாராளுமன்றத் தேர்தலில் ஜேவிபி பெருவெற்றி அடைந்திருக்கும் சூழலில் முன்னாள் அமைச்சர்கள்,…

வடக்கில் மக்களின் சுதந்திரம் நிலைநாட்டப்படும்

பாப்பரசர் மறைவுக்கு ஜனாதிபதி இரங்கல்:

வடக்கில் மக்களின் சுதந்திரம் நிலைநாட்டப்படும் என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இன்று யாழ்ப்பாணத்தில் தெரிவித்தார். தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் இராணுவத்தினரின் வசம் உள்ள நிலங்கள் விடுவிக்கப்படும் எனவும் ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்க யாழ்ப்பாணத்தில் உறுதியளித்துள்ளார். யாழ்ப்பாணம் பாஷையூரில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் ஜனாதிபதி உரையாற்றினார். வடபகுதி தமிழர்கள் உண்மையான சுதந்திரத்தை அனுபவிப்பதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். பல வருடங்களாக மூடப்பட்டிருந்த வீதி சமீபத்தில் திறக்கப்பட்டுள்ளது, தனியார் நிலங்கள் கட்டம் கட்டம் விடுவிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். வடக்கில் மக்களின் சுதந்திரம் நிலைநாட்டப்படும் என்பதை உறுதிசெய்வதற்கான நடவடிக்கைகளைப் பாதுகாப்புத் தரப்பினருடன் பேசி மேற்கொள்வதாகத் தெரிவித்த ஜனாதிபதி, வட மாகாத்திற்கே உரிய கைத்தொழிற்துறைகளை மேம்படுத்த நடவடிக்கை எடுப்பதாகவும் கூறினார். வடபகுதி மீனவர்கள் தமது கடல் பிராந்தியத்தில் சுதந்திரமாக மீன்பிடிப்பதற்கான உரிமை…

இந்திய நீர்மூழ்கிக் கப்பல் இலங்கைக்கு

இந்திய நீர்மூழ்கிக் கப்பல் இலங்கைக்கு

இந்திய நீர்மூழ்கிக் கப்பல் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. இன்று (10) காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த ‘INS Vela’ நீர்மூழ்கிக் கப்பலை இலங்கை கடற்படையினர் வரவேற்றதாக கடற்படை தெரிவித்துள்ளது. இந்தியக் கடற்படையின் 67.5 மீட்டர் நீளம் கொண்ட இந்த நீர்மூழ்கிக் கப்பலில் 53 பணியாளர்கள் உள்ளனர். ‘INS Vela’ என்ற நீர்மூழ்கிக் கப்பல் வரும் 13ஆம் தேதி தீவில் இருந்து புறப்பட உள்ளது. இந்திய நீர்மூழ்கிக் கப்பல் இலங்கைக்கு வந்திருக்கும் காலகட்டத்தில், இரு நாட்டு கடற்படைகளுக்கு இடையேயான நட்புறவை மேம்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பல நிகழ்ச்சிகளில் அதன் ஊழியர்கள் பங்கேற்க உள்ளனர். இந்திய கடற்படையினர் குழு நாட்டின் முக்கிய இடங்களை பார்வையிடுவதற்காக பல பகுதிகளுக்குச் செல்லவும் திட்டமிட்டுள்ளதாக கடற்படை மேலும் தெரிவித்துள்ளது. பலாலி-அச்சுவேலி வீதி திறந்துவைப்பு