இன்றும் மழை பெய்ய வாய்ப்பு

இன்று 100 மில்லிமீற்றர் மழை!

நாட்டின் சில பகுதிகளில் இன்றும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. மேல், சப்பிரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி , மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும். சில இடங்களில் சுமார் 50 மில்லிமீற்றர் வரையிலான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அனுராதபுரம், மாத்தளை ஆகிய மாவட்டங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும். ஊவா, கிழக்கு மாகாணங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமெனவும் வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. மத்திய மலைநாட்டின் மேற்குப் பகுதிகள், வடக்கு, வடமத்திய, வடமேல் மாகாணங்கள் திருகோணமலை, ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் அவ்வப்போது மணிக்கு 30-40 கிலோமீற்றர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும். இடியுடன் கூடிய மழையுடன் தற்காலிகமாக பலத்த காற்று, மின்னல் தாக்கத்தால் ஏற்படும் ஆபத்துகளைக்…

சுபான்ஷு சுக்லா விண்வெளிப் பயணம் ஆரம்பம்

சுபான்ஷு சுக்லா விண்வெளிப் பயணம் ஆரம்பம்

சுபான்ஷு சுக்லா விண்வெளிப் பயணம் ஆரம்பம் உற்சாகமாக நடைபெற்றது. விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா, இந்திய வரலாற்றில் விண்வெளிக்குச் செல்லும் இரண்டாவது நபராவார். அவர், புதன்கிழமை (ஜூன் 25) அமெரிக்காவின் ஃபுளோரிடா மாநிலத்தில் இருக்கும் கென்னடி விண்வெளி நிலையத்திலிருந்து ஸ்பேஸ்எக்ஸ் ஃபேல்கன் 9 விண்கலத்தில் விண்வெளிக்குப் புறப்பட்டார். அவரின் சாதனையை இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத் தலைநகர் லக்னோவில் மக்கள் விமரிசையாகக் கொண்டாடினர். சுபான்ஷு சுக்லா லக்னோவில் பிறந்து உத்தரப் பிரதேசத்தின் அல்காஞ்ச் நகரின் சிட்டி மான்டிசோரி பள்ளியில் கல்வி பயின்றவர். அவர் ஈடுபட்டுள்ள ஏக்சியொம் 4 விண்வெளிப் பயணத்தின்போது விண்கலம் வெற்றிகரமாகப் பாய்ச்சப்பட்டது நேரடியாக ஒளிபரப்பானதைக் கண்டு மக்கள் கொண்டாட்டத்தில் திளைத்தனர். குழுத் தலைவர் கேப்டன் சுக்லாவுக்கு முன்பு, 1984ஆம் ஆண்டில்தான் மற்றோர் இந்தியரான ராக்கே‌ஷ் சுக்லா விண்வெளிக்குச் சென்றார். மேலும், அனைத்துலக விண்வெளி நிலையத்துக்குப்…

காற்றில் பறந்தது டிரம்பின் பேச்சு: ஈரான் இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்

காற்றில் பறந்தது டிரம்பின் பேச்சு

காற்றில் பறந்தது டிரம்பின் பேச்சு என்பதைப்போல ஈரானும் இஸ்ரேலும் மீண்டும் தாக்குதல் நடத்துகின்றன. இஸ்ரேலும் ஈரானும் போர் நிறுத்தம் செய்ய இணக்கம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்திருந்தார். அவரது அறிவிப்பை இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாஹு, ஈரானிய வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அரோக்கி ஆகியோர் உறுதிப்படுத்தியிருந்தனர். எனினும், போர் நிறுத்தத்தை மீறி இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருவதாக இஸ்ரேல் தெரிவித்திருக்கிறது. அதனால், ஈரான் மீது முழு அளவில் தாக்குதல் நடத்துமாறு தமது படைகளுக்குத் தளபதி உத்தரவிட்டுள்ளார். எனினும், இந்தத் தகவலை ஈரான் மறுத்துள்ளது. இஸ்ரேல்தான் முதலில் தாக்குதலைத் தொடங்கியதாகவும் அதன்படி பதில் தாக்குதலை நடத்துவதாகவும் ஈரான் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

ஏர் இந்தியா முன்பதிவில் விழ்ச்சி

ஏர் இந்தியா முன்பதிவில் விழ்ச்சி

ஏர் இந்தியாவின் முன்பதிவுகள் 20 சதவீதம் வரை குறைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தியா அகமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியாவின் போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானம், புறப்பட்ட சில வினாடிகளில் மருத்துவ கல்லூரி வளாகத்தில் உள்ள கட்டிடம் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தில் பயணம் செய்த 242 பயணிகளில் ஒருவரைத் தவிர மற்ற அனைவரும் உயிரிழந்தனர். மொத்தமாக 270-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். சர்வதேச முன்பதிவுகள் ஏறக்குறைய 18 சதவீதம் முதல் 22 சதவீதம் வரையும், உள்ளூர் பயணத்திற்கான முன்பதிவுகள் 10 சதவீதம் முதல் 12 சதவீதம் வரையும் குறைந்துள்ளது. அதேபோல் உள்ளூர் பயணத்திற்கான டிக்கெட் கட்டணமும் 8 சதவீதம் முதல் 12 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு பயணத்திற்கான கட்டணம் 10 முதல் 15 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல் முன்பதிவுகள்…

யாழ் மாவட்ட நிரந்தர அரசாங்க அதிபராக பிரதீபன் நியமனம்

யாழ் மாவட்ட நிரந்தர அரசாங்க அதிபராக பிரதீபன் நியமனம்

யாழ்ப்பாண மாவட்டத்தின் நிரந்தர அரசாங்க அதிபராக மருதலிங்கம் பிரதீபன் அமைச்சரவை அனுமதியின் பிரகாரம் நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கான நியமனக் கடிதம் இன்றைய தினம் (20) அமைச்சரவை செயலாளர் W. M. D. J. பெர்னாண்டோவினால் அமைச்சரவை அலுவலகத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது. ம.பிரதீபன் 2024 மார்ச் 09 ம் திகதி முதல் யாழ்ப்பாண மாவட்டத்தின் பதில் அரசாங்க அதிபராக கடமையாற்றி வந்தமை குறிப்பிடத்தக்கது.

பலாங்கொடை பிரதேச சபைத் தலைவர் இராஜினாமா

பலாங்கொடை பிரதேச சபைத் தலைவர் இராஜினாமா

பலாங்கொடை பிரதேச சபைத் தலைவர் இராஜினாமா செய்துள்ளார். தேசிய மக்கள் சக்தியின் சார்பில் தெரிவான இவர், பதவியேற்ற ஒரு மாதத்திற்கும் குறைவான காலப்பகுதியில் பதவியை இராஜினாமா செய்துள்ளார். பிரதேச சபைத் தலைவர் டி. ரஞ்சித் உதயகுமார தனிப்பட்ட காரணங்களுக்காகப் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். அவரது வெற்றிடத்திற்குத் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினராகவும் தலைவராகவும் ஆரியதாச கம எத்திகே நியமிக்கப்பட்டுள்ளார். இவர் சபரகமுவ மாகாண சபையின் முன்னாள் உறுப்பினராவார்.

கெஹலிய இறக்கியது மருந்தே அல்ல

கெஹலிய இறக்கியது மருந்தே அல்ல

கெஹலிய இறக்கியது மருந்தே அல்ல என்று ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது. சர்ச்சைக்குரிய ‘தரமற்ற இம்யூனோகுளோபுலின் தடுப்பூசி’ (Antibody Vaccines) தொடர்பான விசாரணையில், அவற்றில் மனித உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பாரிய வகை பக்றீரியா மற்றும் உப்பு இருந்தமை ஜெர்மனியில் நடத்தப்பட்ட ஆய்வக பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக, பிரதி சொலிசிட்டர் ஜெனரல் லக்மினி கிரிஹாகம நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட சுகாதார அமைச்சின் உயர் அதிகாரிகள் பலர் சந்தேகநபர்களாக பெயரிடப்பட்டுள்ள, தரமற்ற இம்யூனோகுளோபுலின் தடுப்பூசி மருந்துகளை இறக்குமதி செய்த வழக்கு நேற்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது இந்தத் தகவல் வெளியிடப்பட்டது. சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் லக்மினி கிரிஹாகம, உலக சுகாதார அமைப்புடன் இணைந்த ஜெர்மன் ஆராய்ச்சி நிறுவனத்திடமிருந்து பெறப்பட்ட அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரானிலிருந்து 110 இந்திய மாணவர்கள் மீட்பு

ஈரானிலிருந்து 110 இந்திய மாணவர்கள் மீட்பு

ஈரானிலிருந்து 110 இந்திய மாணவர்கள் மீட்பு நடவடிக்கை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் ஈரானில் இருந்து பேருந்துகள் மூலம் அர்மேனியா நாட்டின் தலைநகர் யெரெவானுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர் என்றும் பின்னர் அங்கிருந்து விமானம் மூலம் அமெரிக்கா வழியாக இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டனர் என்றும் ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மீட்பு விமானம் வியாழக்கிழமையன்று (ஜூன் 19) அதிகாலை டெல்லி வந்தடைந்தது. மாணவர்களைக் கண்டதும் அவர்களின் பெற்றோர் நிம்மதிப் பெருமூச்சுடனும் கண்ணீருடனும் வரவேற்றனர். மீட்கப்பட்டவர்களில் 90 மாணவர்கள் காஷ்மீரைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஈரானில் உள்ள மற்ற மாணவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகளை அங்குள்ள இந்திய தூதரகம் மேற்கொண்டு வருவதாக இந்திய வெளியுறவு அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன.கடந்த ஒரு வாரமாக இஸ்‌ரேல், ஈரான் இடையே கடும் மோதல் நடந்து வருகிறது. இருதரப்பிலும் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், மத்திய…

நடிகர் மோகன்லால் பாராளுமன்றம் வருகை

நடிகர் மோகன்லால் பாராளுமன்றம் வருகை

திரைப்பட படப்பிடிப்பிற்காக தற்போது இலங்கை வந்துள்ள நடிகர் மோகன்லால் நேற்று (19) பாராளுமன்றம் வருகை தந்தார். பிரதி சபாநாயகர் (வைத்தியர்) ரிஸ்வி சாலியின் அழைப்பிற்கு அமைய வருகை தந்த, பிரபல நடிகர் மோகன்லால் உள்ளிட்ட குழுவினர் சபாநாயகரின் கலரியில் இருந்து பாராளுமன்ற அமர்வை பார்வையிட்டனர். இந்த விஜயத்தின் போது, ​​அவர் பிரதமர் (கலாநிதி) ஹரிணி அமரசூரிய, சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன மற்றும் பிரதி சபாநாயகர் (வைத்தியர்) ரிஸ்வி சாலி ஆகியோரை சந்தித்துக் கலந்துரையாடினார். பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீரவும் இதன்போது கலந்துகொண்டார்

தூத்துக்குடி-கொழும்பு சரக்குக் கப்பல்

தூத்துக்குடி-கொழும்பு சரக்குக் கப்பல்

தூத்துக்குடி-கொழும்பு சரக்குக் கப்பல் போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் இருந்து கொழும்புக்கு தினசரி சரக்கு படகு போக்குவரத்துக்கு மத்திய கப்பல் போக்குவரத்து இயக்குநரகம் அனுமதி அளித்துள்ளது. வ.உ.சிதம்பரனாா் துறைமுக ஆணையத்தின் பழைய துறைமுகத்தில் இருந்து சரக்குகளை ஏற்றிச் செல்ல சுமாா் 25 படகுகள் இயக்கப்படுகின்றன. இதில், சுமாா் 250 முதல் 400 டன்களுக்கு மேல் சரக்குகளை ஏற்றிச் செல்லும் வகையில் படகுகள் உள்ளன. இந்த பாரம்பரிய படகு தொழிலை நம்பி தூத்துக்குடியில் சுமாா் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் பயனடைந்து வருகின்றனா். தூத்துக்குடியில் இருந்து இலங்கை, மாலத்தீவு, லட்சத்தீவுக்கு காய்கறிகள், கட்டுமான பொருள்கள் உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் படகு மூலம் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. இலங்கையில் இருந்து பழைய இரும்பு பொருள்கள், பழைய காகிதங்கள் கொண்டு வரப்படுகின்றன. பொதுவாக படகு போக்குவரத்து கடல் வானிலையைக்…