ஈஸ்ரர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி

ஜனாதிபதி அநுர

நீர்கொழும்பு தேவாலயத்தில் ஜனாதிபதி உறுதி ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணையைத் துரிதப்படுத்தி பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி நிலைநாட்டப்படும் என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க உறுதியளித்துள்ளார். ஈஸ்டர் தாக்குதலில் காயமடைந்தவர்களோடும் உயிரிழந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களோடும் இன்று (06) நீர்க்கொழும்பு, கட்டுவாபிட்டி புனித செபஸ்தியன் தேவாலயத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இந்த உறுதிமொழீயை வழங்கினார் இன்று காலை கட்டுவாபிட்டி தேவாலயத்திற்குச் சென்றிருந்த ஜனாதிபதி, ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்காக அமைக்கப்பட்டிருக்கும் நினைவுத் தூபிக்கு மலர் அஞ்சலி செலுத்தினார். ஜனாதிபதியின் வருகையை நினைவூட்டும் வகையில் நினைவுச் சின்னம் ஒன்றும் இதன்போது வழங்கப்பட்டது. பின்னர் ஈஸ்டர் தாக்குலில் பாதிக்கப்பட்டவர்கள், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் ஆகியோருடன் ஜனாதிபதி கலந்துரையாடலில் ஈடுபட்டார். அப்போது நேரடியாக ஜனாதிபதியிடம் அவர்கள் பிரச்சினைகளை எடுத்துக் கூறினர். இந்நாட்டில் அண்மைய காலத்தின் மிக மோசமாக அழிவு 2019 ஏப்ரல் 21…

முறைப்பாடுகளை 2நாளில் விசாரிக்க பணிப்புரை

2நாளில் விசாரிக்க பணிப்புரை

முறைப்பாடுகளை 2நாளில் விசாரிக்க பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது பொதுமக்களால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அனைத்து சிறு முறைப்பாடுகளை 2 நாளில் விசாரிக்க பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் காலங்களில் பொலிஸ் நிலையங்களில் பதிவுசெய்யப்படும் முறைப்பாடுகளை அன்றைய தினமே விசாரணை ஆரம்பிக்கப்பட்டு 48 மணித்தியாலங்களுக்குள் நிறைவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பதில் பொலிஸ்மா அதிபர் பணிப்புரை விடுத்துள்ளார். பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ இதனைத் தெரிவித்துள்ளார். பதில் பொலிஸ் மாஅதிபருக்கு அங்கீகாரம்

வெங்காயம், கிழங்கு வரி அதிகரிப்பு

இறக்குமதி செய்யப்படும் 1 கிலோ உருளை கிழங்கின் வரி 10 ரூபாவினாலும், 1 கிலோ பெரிய வெங்காயம் 20 ரூபாவினாலும் அதிகரிக்கவுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

இந்தியாவின் பரிசாக 22 ரயில் இயந்திரங்கள்

இந்தியா இலங்கைக்கு 22 ரயில் இயந்திரங்களைப் பரிசாக வழங்கவுள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்பிரமணியம் ஜெய்சங்கர் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவைச் சந்தித்தபோது தெரிவித்துள்ளார். 61.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கி காங்கேசந்துறை துறைமுகத்தை நவீனமயமாக்குவதற்கு இந்தியா முன்வந்துள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் மேற்கொள்ளப்படவுள்ள முதலீடுகள் மற்றும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பிலும் ஜனாதிபதியிடம் இந்திய வெளிவிவகார அமைச்சர் இதன்போது கலந்துரையாடியுள்ளார்.

மக்களின் ஆணையுடன் புதிய அரசியலமைப்பு

மக்களின் ஆணையுடன் நாட்டில் புதிய அரசியலமைப்பு ஒன்றை உருவாக்குவதே தமது நோக்கமாகும் என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க மகா சங்கத்தினரிடம் உறுதியளித்துள்ளார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (05) வெள்ளவத்தை, அமரபுர பீடத்திற்கு சென்று இலங்கை அமரபுர பீடத்தின் பதில் மகாநாயக்க தேரர் வண. கரகொட உயன்கொட மைத்திரிமூர்த்தி தேரரை சந்தித்து ஆசி பெற்றுக்கொண்டார். ஜனாதிபதி தற்போதைய அரசியல், பொருளாதார நிலைமைகளை எடுத்துக்கூறும் விதமாக மகா சங்கத்தினருடன் கலந்துரையாடினார். அதன்போது நாட்டின் வளங்களைக் கொண்டு உச்சகட்ட பலன்களை அடைந்து வலுவான நாட்டை கட்டியெழுப்ப வேண்டுமென வலியுறுத்திய மகாநாயக்க தேரர்கள், அதனால் இலங்கை உலகில் சுயாதீன நாடாக எழுந்து நிற்க முடியும் என்றும் தெரிவித்தனர். பாராளுமன்ற தேர்தல் ஒன்று அறிவிக்கப்பட்டிருக்கும் தருணத்தில் அரசியல் ரீதியான அமைதிக் காலம் நிலவுவதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, செய்ய வேண்டியுள்ள பல்வேறு பணிகளை தேர்தலில்…

இலங்கை-இந்திய வெளிவிவகார அமைச்சர்கள் சந்திப்பு

இந்திய வெளிவிவகார அமைச்சர்கள்

உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெயசங்கர் இன்று (04) வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தை வெளிவிவகார அமைச்சில் சந்தித்தார். புதிய ஜனாதிபதி நியமிக்கப்பட்டதன் பின்னர் இலங்கைக்கு விஜயம் செய்யும் முதலாவது இராஜதந்திரி இவர்.

அபிவிருத்திப் பணிகளுக்கு நிதியுதவி வழங்க எக்ஸிம் வங்கி இணக்கம் தெரிவிப்பு

அபிவிருத்திக்கு உதவ எக்ஸிம் வங்கி

கொரியா எக்ஸிம் வங்கியின் அதிகாரிகள் இன்று (03) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவை சந்தித்தனர். அதன்போது இலங்கையின் அபிவிருத்திப் பணிகளுக்கு நிதியுதவி வழங்கத் தயார் என்று இணக்கம் தெரிவித்துள்ளனர். இலங்கையின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்ததால் அபிவிருத்தித் திட்டங்களுக்கு கொரிய எக்ஸிம் வங்கி வழங்கிய நிதியுதவி 2022-2024 ஆம் ஆண்டுகளில் இடைநிறுத்தப்பட்டது. அந்த அபிவிருத்தித் திட்டங்களை மீண்டும் செயல்படுத்துவதற்கு சலுகைக் கடன் உதவி வழங்க எதிர்காலத்தில் நடவடிக்கை எடுப்பதாக கொரிய எக்ஸிம் வங்கியின் பிரதிநிதிகள் ஜனாதிபதியின் செயலாளரிடம் தெரிவித்தனர். எதிர்காலத்தில் இலங்கை அரசாங்கத்தின் பொருளாதார ரீதியில் பயனுள்ள வேலைத்திட்டங்களுக்கு நிதியுதவி வழங்குவதற்கு தாங்கள் எதிர்பார்ப்பதாக கொரிய எக்ஸிம் வங்கி பிரதிநிதிகள் வலியுறுத்தினர்.

இதுவரை 86 சுயேச்சைக் குழுக்கள் கட்டுப்பணம்

டிஜிற்றல் திரையால் பிரசாரம் செய்ய முடியாது

எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடவென இதுவரை 86 சுயேச்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் கூடுதலான சுயேச்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளன. இங்கு 28 குழுக்கள் கட்டுப் பணம் செலுத்தியுள்ளதா ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இனி அரசியல் பழிவாங்கல் இல்லை – ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க

ஜனாதிபதி அநுர

v வினைத்திறன்மிக்க மக்கள்நல அரச சேவையை உருவாக்க தம்மை அர்ப்பணிக்கும் அரச ஊழியர்களுக்காக தாம் துணை நிற்பதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். குடிமக்களுக்காக பாடுபடும் அரச அதிகாரிகள் அரசியல் பழிவாங்கல்களுக்கு முகம் கொடுக்கும் நிலை இதுவரை காலமும் இருந்தபோதும் அந்த சம்பிரதாயம் இனிமேலும் நடக்காது எனவும் ஜனாதிபதி தெரிவித்தார். விவசாயம், காணி, கால்நடை, நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சராக இன்று (03) காலை கடமைகளைப் பொறுப்பேற்ற பின்னர் அமைச்சின் அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார். விவசாய அமைச்சின் தற்போதைய நிலைமை மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, அமைச்சின் செயலாளர்கள் மற்றும் அமைச்சின் உயர் அதிகாரிகளுடன் விரிவாக கலந்துரையாடினார்.