ஈரான் மீதான தாக்குதலுக்குக் கண்டனம்

ஈரான் மீதான தாக்குதலுக்குக் கண்டனம்

ஈரான் மீதான தாக்குதலுக்குக் கண்டனம்: ஈரானின் இராணுவத் தளங்களை இலக்குவைத்து இஸ்ரேல் இன்று நடத்திய விமானத் தாக்குதலுக்குப் பல நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. அதேநேரம், அமெரிக்காவும் பிரித்தானியாவும் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலை நியாயப்படுத்தியுள்ளன. தன்னைத் தற்காத்துக்கொள்ளும் உரிமை இஸ்ரேலுக்கு உள்ளது என்று அந்த நாடுகள் தெரிவித்துள்ளன. இஸ்ரேல் இன்று நடத்திய தாக்குதலில் சுமார் 20 இராணுவத் தளங்கள் இலக்கானதாகவும் இருவர் கொல்லப்பட்டதாகவும் ஈரானிய பாதுகாப்புப் படைத் தலைமையகம் தெரிவித்துள்ளது. எனினும், இஸ்ரேலின் தாக்குதலை முறியடித்துவிட்டதாகவும் ஈரான் படையினர் தெரிவித்துள்ளனர். இஸ்ரேலின் தாக்குதலையடுத்து ஈரான் வான்பரப்பின் பாதுகாப்பு முறைமை செயற்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன், ஈரான், ஈராக் விமான சேவைகள் அனைத்தும் இரத்துச்செய்யப்பட்டன. ஈரான் மீதான தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்து ஓமான், ஈராக், பாகிஸ்தான், மலேசியா, சவூதி ஆரேபியா, ஐக்கிய அரபு இராச்சியம் உள்ளிட்ட நாடுகள் அறிக்கை வெளியிட்டுள்ளன. இஸ்ரேலின் ஆத்திரமூட்டும்…

எல்பிட்டி பிரதேச சபைத் தேர்தல்

எல்பிட்டி பிரதேச சபைத் தேர்தல்

எல்பிட்டி பிரதேச சபைத் தேர்தல் இன்று நடைபெறுகிறது. காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுத் தலைவர் ஆர். எம். ஏ.எல்.ரத்நாயக்க குறிப்பிட்டார். 29 உறுப்பினர்களை தெரிவுசெய்வதற்காக அங்கீகரிக்கப்பட்ட 08 அரசியல் கட்சிகளும் சுயேச்சைக் குழு ஒன்றும் போட்டியிடும் எல்பிட்டி உள்ளூராட்சி மன்றத் தேர்தல் இன்று (26) காலை 7.00 மணிக்கு ஆரம்பமானது. இந்த தேர்தலில் 48 வாக்களிப்பு நிலையங்களில் வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இதில் வாக்களிக்க 55,643 வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளனர். ஈஸ்டர் தாக்குதலுக்கு அரசியல் தொடர்பில்லை

விஸ்டாரா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

விஸ்டாரா விமானத்திற்குவெடிகுண்டு மிரட்டல்

விஸ்டாரா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: இந்தியாவின் மும்பையிலிருந்து கொழும்பு வந்த விஸ்டாரா விமானத்திற்கு இன்று மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனால், கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டது. இந்தியாவின் மும்பையில் இருந்து கட்டுநாயக்க நோக்கி பயணித்து கொண்டிருந்த இந்திய விஸ்டாரா விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக தொலைபேசியில் அழைப்பு விடுக்கப்பட்டதையடுத்து, விமானம் விசேட சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விஸ்டாரா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் இதற்கு முன்பும் விடுக்கப்பட்டு அந்த விமானமும் கட்டுநாயக்காவில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. இன்றும் தொலைபேசியில் மிரிட்டல் விடுக்கப்பட்டது. இதனையடுத்துத் தேவையான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டதாக விமான நிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. Airbus A-320 ரக இந்த விமானத்தில் 108 பயணிகளும் 8 விமானப்…

தாக்குதல் நடத்தவிருந்த இருவர் கைது

தாக்குதல் நடத்தவிருந்த இருவர் கைது

தாக்குதல் நடத்தவிருந்த இருவர் கைது: அறுகம்பேயில் இஸ்ரேல் பிரஜைகள் மீது தாக்குதல் நடத்தவிருந்ததாகச் சந்தேகிக்கப்படும் இருவரைக் கைதுசெய்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவினர் சந்தேக நபர்கள் இருவரைக் கைதுசெய்துள்ளதாகப் பொலிஸார் கூறினர். இஸ்ரேல் பிரஜைகள் மீது அறுகம்பேயில் தாக்குதல் நடத்தப்படவிருப்பதாக இந்தியப் புலனாய்வுப் பிரிவினர் தகவல் வழங்கியிருந்தனர். இதனையடுத்துப் புலனாய்வுப் பிரிவினர் உஷார்படுத்தப்பட்டு விசாரணைகள் நடைபெற்று வந்தன. அதன் விளைவாகவே தாக்குதல் நடத்தவிருந்த இருவர் கைது செய்யப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர். அமெரிக்கத் தூதரகம் தமது பிரஜைகளுக்கு எச்சரிக்கை விடுக்கும முன்பே இலங்கை நடவடிக்கையில் இறங்கியிருந்ததாகத் தெரிவித்த பொலிஸார், கைதுசெய்யப்பட்டவர்கள் இலங்கையர்கள் என்றும் அதில் ஒருவர் ஈராக்கைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிட்டுள்ளனர். அறுகம்பேயில் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருப்போர் பற்றிப் பெயர் விபரங்களுடன் முழுமையான தகவல்களை இந்தியப் புலனாய்வுப் பிரிவினர் வழங்கியிருப்பதாகவும் மேலும் தெரியவருகிறது. மலைக்குருவி

அறுகம்பே செல்லாதீரென அமெரிக்கா எச்சரிக்கை

அறுகம்பே செல்லாதீரென அமெரிக்கா எச்சரிக்கை

அறுகம்பே செல்லாதீரென அமெரிக்கா எச்சரிக்கை: இலங்கையின் முக்கிய சுற்றுலாத் தளமாக விளங்கும் அறுகம்பே பகுதிக்கு மறு அறிவித்தல் வரை செல்ல வேண்டாம் என்று தமது பிரஜைகளுக்கு அமெரிக்கா கடுமையாக எச்சரிக்கை செய்துள்ளது. அறுகம்பே பகுதியில் வெளிநாட்டுப் பயணிகளை இலக்குவைத்துப் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படலாம் என்று நம்பகமான தகவல் கிடைத்திருப்பதால் அறுகம்பே செல்லாதீரென அமெரிக்கா எச்சரிக்கை செய்வதாகக் கொழும்புவில் உள்ள அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளதாக டெய்லிமரர் செய்தி வெளியிட்டுள்ளது. பின்னர் இந்தத் தகவலைப் பொலிஸாரும் உறுதிப்படுத்தியுள்ளனர். சுற்றுவட்டாரங்கள் குறித்து எந்நேரமும் அவதானமாக இருக்குமாறும் பாதுகாப்பற்ற இடங்களிலிருந்து உடனே வெளியேறிவிடுமாறும் தூதரகம் எச்சரித்துள்ளது. அவசரத் தேவைகளின்போது 119 என்ற பொலிஸ் அவசர இலகத்திற்கு அறிவிக்குமாறு தமது பிரஜைகளுக்கு அறிவுறுத்தியிருக்கும் அமெரிக்கத் தூதரகம், உள்ளுர் செய்திகளை அறிந்துகொள்ள தொடர்பாடல் கருவிகளை உரிய முறையில் பயன்படுத்துமாறும் கேட்டுக்கொண்டுள்ளது. வெடிகுண்டு மிரட்டலால் பயணிகள் பீதி!

துபாய் பொது மன்னிப்புக்காலம் நிறைவு

துபாய் பொது மன்னிப்புக்காலம் நிறைவு

துபாய் பொது மன்னிப்புக்காலம் நிறைவு: ஐக்கிய அரபு அமீரகத்தால் அறிவிக்கப்பட்ட பொதுமன்னிப்பு காலம் 2024 ஆம் ஆண்டு ஒக்டோபர் 31 ஆம் திகதியுடன் முடிவடைவதாக டுபாயில் உள்ள இலங்கை துணைத் தூதரகம் அறிவித்துள்ளது. எனவே ஐக்கிய அரபு அமீரகம் வௌியிடும் வெளியேறும் சான்றிதழை வழங்குவதற்கு சில காலம் தேவை என்பதால் செல்லுபடியாகும் விசா இல்லாத அல்லது விசா இல்லாத இலங்கையர்கள் இம்மாதம் 25ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் இலங்கைக்கு பயணிக்க விரும்பும் தற்காலிக பயண ஆவணத்திற்கு (TTD) வந்து விண்ணப்பிக்குமாறு இதன் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. துபாய் பொது மன்னிப்புக்காலம் நிறைவு அடையவிருப்பதால், இந்தப் பொது மன்னிப்புக் காலத்தில், உதவி தேவைப்படும் இலங்கையர்களுக்கு சேவைகளை வழங்குவதற்கு துணைத் தூதரகம் உறுதியாக உள்ளதாக அறிவித்துள்ளது. ஐக்கிய அரபு இராச்சியத்தில் செல்லுபடியாகும் வீசா இன்றி தங்கியுள்ள இலங்கையர்கள், பொது மன்னிப்புக்…

கம்மன்பிலவின் அறிக்கையை அரசு நிராகரிப்பு

கம்மன்பிலவின் அறிக்கையை அரசு நிராகரிப்பு

கம்மன்பிலவின் அறிக்கையை அரசு நிராகரிப்பு: பிவித்துரு கெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில நேற்று வெளியிட்ட உயிர்த்த ஞாயிறு தொடர்பான விசாரணை அறிககையை அரசாங்கம் நிராகரித்துள்ளது. ஓய்வுபெற்ற நீதிபதி ஏ. என். ஜே. டி. அல்விஸ் தலைமையிலான விசாரணைக் குழுவின் அறிக்கையை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில வெளியிட்டிருந்தார். இந்த அறிக்கையில் முற்று முழுதாக முன்னாள் பிரதிப் பொலிஸ் மாஅதிபர் ரவி ஜயவர்தன, குற்றப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராகக் கடமையாற்றி ஷானி அபேசேகர ஆகியோரை இலக்குவைத்துத் தயாரிக்கப்பட்டிருப்பதாக வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் தெரிவித்துள்ளார். இந்த இருவரும் தேசிய மக்கள் சக்தியின் ஓய்வுபெற்ற பொலிஸ் பேரவையில் இணைந்துகொண்டதன் பின்னரே விசாரணைக் குழு நியமிக்கப்பட்டதாக அமைச்சர் விஜித்த ஹேரத் கூறினார். கம்மன்பிலவின் அறிக்கையை அரசு நிராகரிப்பு செய்வதற்கான காரணத்தை விளக்கிய அமைச்சர், 2024 ஜூன் மாதம்…

கடவுச்சீட்டு விநியோகம் வழமைக்குத் திரும்பியது

கடவுச்சீட்டு விநியோகம் வழமைக்குத் திரும்பியது

கடவுச்சீட்டு விநியோகம் வழமைக்குத் திரும்பியது: புதிய கடவுச்சீட்டுகளை வழங்கும் பணி நேற்று முதல் வழமைக்குத் திரும்பியுள்ளது. இனிமேல் எந்தவிதத் தட்டுப்பாடும் ஏற்படுவதற்கு வழியில்லை எனக் குடிவரவு, குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பல மாதங்களாக நிலவிய கடவுச்சீட்டு விநியோக பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்கவு திணைக்களம் தெரிவித்துள்ளது. கடவுச்சீட்டு விநியோகம் வழமைக்குத் திரும்பியது என்பதோடு புதிய கடவுச்சீட்டு 48 பக்கங்களைக் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை முன்பதிவு செய்யப்பட்டுள்ள 75,000 கடவுச்சீட்டுகள் விரைவில் விநியோகிக்கப்படும் எனவும், மீண்டும் கடவுச்சீட்டு தட்டுப்பாடு ஏற்படுவதற்கு இடமளிக்கப் போவதில்லை என்றும் அரசாங்கம் அறிவித்துள்ளது. கடவுச்சீட்டு வழங்கும் பணிகள் வழமைக்கு

வெடிகுண்டு மிரட்டலால் பயணிகள் பீதி!

விஸ்டாரா விமானத்திற்குவெடிகுண்டு மிரட்டல்

வெடிகுண்டு மிரட்டலால் பயணிகள் பீதி! : இந்திய விமானங்களுக்குத் தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படுவதால் பயணிகள் மத்தியில் விமானப் பயணம் செய்வதில் பீதி ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. நேற்று மாலை வரை சுமார் இருபது விமானங்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. விஸ்டாரா விமான நிறுவனத்துக்குச் சொந்தமான ஒரு விமானம் வெடிகுண்டு மிரட்டலால் பயணிகள் பீதி அடைவதற்கு முன்னதாகக் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. இந்த விமானம் தரையிறக்கப்படுவதற்குப் பத்து நிமிடங்களுக்கு முன்னர் விமானிக்கு அநாமதேய தொலைபேசி அழைப்பு மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனால், சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பிற்கும் அறிவிக்கப்பட்டுப் பாதுகாப்பாக விமானம் தரையிறக்கப்பட்டது. பயணிகள் உடனடியாக வெளியேற்றப்பட்டுக் கடும் சோதனை நடத்தப்பட்டது. குண்டு செயலிழக்கும் பிரிவினரும் விரைந்து வந்து தேடுதல் நடத்தியபோதிலும் குண்டு எதுவும் அகப்படவில்லை. அந்த விமானத்தில் 96 பயணிகளும் விமானச் சிப்பந்திகளும்…

வாகன வரிஅனுமதிப்பத்திரம் இலகுவாகப் பெறலாம்

வாகன வரிஅனுமதிப்பத்திரம்

வாகன வருமானவரி அனுமதிப்பத்திரம் இலகுவாகப்பெற வழிசெய்யுமாறு அமைச்சர் விஜித்த ஹேரத் அதிகாரிகளுக்குப் பணிப்பு விடுத்துள்ளார். வாகன வருமானவரி அனுமதிப்பத்திரங்களைப் பெற்றுக்கொள்வதில் மேல் மாகாணத்தை ஏனைய மாகாணங்களுடன் இணைக்குமாறு அமைச்சர் விஜித ஹேரத் உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனைத் தெரிவித்துள்ளது. வாகன வரிஅனுமதிப்பத்திரம் இலகுவாகப் பெற்றுக்கொள்வதில் மக்கள் எதிர்நோக்கும் பிரதான பிரச்சினை மாகாணங்களுக்கிடையிலான தொடர்பின்மை எனவும், அது நடைமுறைப்படுத்தப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருந்த போதும் மிகவும் அத்தியாவசியமான மாகாணமான மேல் மாகாணத்திற்கு இது இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை எனவும் குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. வாகன வரிஅனுமதிப்பத்திரம் பெறுவது குறித்து மக்களிடம் இருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக அமைச்சு தெரிவித்துள்ளது. , மேல் மாகாணத்தை ஏனைய மாகாணங்களுடன் இணைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளுக்கு உரிய திணைக்களங்களுக்கு…