பாராளுமன்றத் தேர்தலில் ஜேவிபி பெருவெற்றி!

பாராளுமன்றத் தேர்தலில் ஜேவிபி பெருவெற்றி!

பாராளுமன்றத் தேர்தலில் ஜேவிபி பெருவெற்றி!: நடந்து முடிந்த பாராளுமன்ற பொதுத் தேர்தலில் மக்கள் விடுதலை முன்னணி (ஜேவிபி) தலைமையிலான தேசிய மக்கள் சக்தி 159 உறுப்பினர்களைப் பெற்று பெருவெற்றியடைந்துள்ளது. மக்களின் 68 இலட்சத்து 63186 வாக்குகள் மூலம் 141 உறுப்பினர்களையும் தேசியப் பட்டியல் மூலம் 18 உறுப்பினர்களையும் பெற்றுக்கொண்டுள்ளது. இதில் 12 பேர் பெண்களாவர். அதில் தமிழர்கள் மூவரும் அடங்குகின்றனர். சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி 19 இலட்சத்து 68716 வாக்குகளைப் பெற்று 35 உறுப்பினர்களையும் தேசியப் பட்டியல் ஊடாக ஐந்து உறுப்பினர்களையும் பெற்றுக்கொண்டுள்ளது. ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான புதிய ஜனநாயக முன்னணி, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகியன தலா மூன்று உறுப்பினர்களைப் பெற்றுக்கொண்டுள்ளன. இலங்கை தமிழரசுக் கட்சி எட்டு உறுப்பினர்களைப் பெற்றுக்கொண்டுள்ளது. பாராளுமன்றத் தேர்தலில் ஜேவிபி பெருவெற்றி அடைந்திருக்கும் சூழலில் முன்னாள் அமைச்சர்கள்,…

வடக்கில் மக்களின் சுதந்திரம் நிலைநாட்டப்படும்

பாப்பரசர் மறைவுக்கு ஜனாதிபதி இரங்கல்:

வடக்கில் மக்களின் சுதந்திரம் நிலைநாட்டப்படும் என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இன்று யாழ்ப்பாணத்தில் தெரிவித்தார். தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் இராணுவத்தினரின் வசம் உள்ள நிலங்கள் விடுவிக்கப்படும் எனவும் ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்க யாழ்ப்பாணத்தில் உறுதியளித்துள்ளார். யாழ்ப்பாணம் பாஷையூரில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் ஜனாதிபதி உரையாற்றினார். வடபகுதி தமிழர்கள் உண்மையான சுதந்திரத்தை அனுபவிப்பதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். பல வருடங்களாக மூடப்பட்டிருந்த வீதி சமீபத்தில் திறக்கப்பட்டுள்ளது, தனியார் நிலங்கள் கட்டம் கட்டம் விடுவிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். வடக்கில் மக்களின் சுதந்திரம் நிலைநாட்டப்படும் என்பதை உறுதிசெய்வதற்கான நடவடிக்கைகளைப் பாதுகாப்புத் தரப்பினருடன் பேசி மேற்கொள்வதாகத் தெரிவித்த ஜனாதிபதி, வட மாகாத்திற்கே உரிய கைத்தொழிற்துறைகளை மேம்படுத்த நடவடிக்கை எடுப்பதாகவும் கூறினார். வடபகுதி மீனவர்கள் தமது கடல் பிராந்தியத்தில் சுதந்திரமாக மீன்பிடிப்பதற்கான உரிமை…

இந்திய நீர்மூழ்கிக் கப்பல் இலங்கைக்கு

இந்திய நீர்மூழ்கிக் கப்பல் இலங்கைக்கு

இந்திய நீர்மூழ்கிக் கப்பல் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. இன்று (10) காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த ‘INS Vela’ நீர்மூழ்கிக் கப்பலை இலங்கை கடற்படையினர் வரவேற்றதாக கடற்படை தெரிவித்துள்ளது. இந்தியக் கடற்படையின் 67.5 மீட்டர் நீளம் கொண்ட இந்த நீர்மூழ்கிக் கப்பலில் 53 பணியாளர்கள் உள்ளனர். ‘INS Vela’ என்ற நீர்மூழ்கிக் கப்பல் வரும் 13ஆம் தேதி தீவில் இருந்து புறப்பட உள்ளது. இந்திய நீர்மூழ்கிக் கப்பல் இலங்கைக்கு வந்திருக்கும் காலகட்டத்தில், இரு நாட்டு கடற்படைகளுக்கு இடையேயான நட்புறவை மேம்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பல நிகழ்ச்சிகளில் அதன் ஊழியர்கள் பங்கேற்க உள்ளனர். இந்திய கடற்படையினர் குழு நாட்டின் முக்கிய இடங்களை பார்வையிடுவதற்காக பல பகுதிகளுக்குச் செல்லவும் திட்டமிட்டுள்ளதாக கடற்படை மேலும் தெரிவித்துள்ளது. பலாலி-அச்சுவேலி வீதி திறந்துவைப்பு

பலாலி-அச்சுவேலி வீதி திறந்துவைப்பு

பலாலி-அச்சுவேலி விதி திறந்துவைப்பு

பலாலி-அச்சுவேலி வீதி திறந்துவைப்பு: யாழ்ப்பாணம் பலாலி – அச்சுவேலி பிரதான வீதி ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் பணிப்புரையின் கீழ் சுமார் 34 வருடங்களுக்கு பின்னர் இன்று (01) திறந்து வைக்கப்பட்டது. முப்பது வருடகால யுத்தம் காரணமாக இந்த பிரதான வீதி மூடப்பட்டது. யுத்தம் நிறைவடைந்து 15 வருடங்களுக்கு மேலாகியும் இதுவரை இந்த வீதி பொது மக்களின் பாவனைக்காக திறக்கப்படவில்லை. பலாலி-அச்சுவேலி வீதி திறந்துவைப்பு இன்று வைபவரீதியாக நடைபெபற்றது. இந்த வீதியை திறப்பது தொடர்பில் வடமாகாண மக்கள் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வந்தனர். கடந்த ஒக்டோபர் 22 ஆம் திகதி ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் ஆளுநர்களுக்குமிடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகனும் இது தொடர்பில் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த வீதியை திறப்பது தொடர்பிலுள்ள பாதுகாப்பு நிலைமைகள் குறித்து ஆராய்ந்து தேவையான நடவடிக்கை எடுக்குமாறு…

வேலை நிறுத்தம் முடிவுக்கு வரும்

வேலை நிறுத்தம் முடிவுக்கு வரும்

வேலை நிறுத்தம் முடிவுக்கு வரும்: தற்போது ஆங்காங்கே எட்டிப்பார்க்க முயற்சிக்கும் தொழிற்சங்க வேலை நிறுத்தப் போராட்டங்கள் எதிர்வரும் நவம்பர் 14 ஆம் திகதிக்குப் பின்னர் முடிவுக்கு வரும் என்று தேசிய மக்கள் சக்தியின் முக்கியஸ்தர் லக்ஷ்மன் நிபுணராச்சி தெரிவித்துள்ளார். வேலைநிறுத்தங்கள் காரணமாக நாடு எதிர்நோக்கும் விரும்பத்தகாத அனுபவங்கள் நவம்பர் 14ஆம் திகதிக்குப் பின்னர் முடிவுக்கு வரும் எனவும், இதுவே இந்த மாற்றக் காலம் எனவும் லக்ஷ்மன் நிபுணாராச்சி தெரிவித்துள்ளார். கஸ்பாவ நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் உரையாற்றினார். இன்று பிறக்கும் குழந்தைகளுக்கு இன்னும் 10 முதல் 15 ஆண்டுகளில் வேலைநிறுத்தம் என்றால் என்ன என்று கூட சொல்லித்தர வேண்டிய நிலை வரும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வேலை நிறுத்தம் முடிவுக்கு வரும் காலம் நெருங்கி வருவதாகத் தெரிவித்த நிபுணாராச்சி: “எங்கள் நாடு மிகவும் விரும்பத்தகாத…

பொதுத்தேர்தல் தபால்மூல வாக்களிப்பு இன்று

பொதுத்தேர்தல் தபால்மூல வாக்களிப்பு இன்று

பொதுத்தேர்தல் தபால்மூல வாக்களிப்பு: பொதுத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு இன்று ஆரம்பமாகிறது. மாவட்ட செயலகங்கள், தேர்தல்கள் ஆணைக்குழு அலுவலகங்கள், பொலிஸ் பரிசோதகர் அலுவலகங்கள் உள்ளிட்ட அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் இன்று தபால் மூல வாக்குகளை அளிப்பதற்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. தபால்மூல வாக்களிப்பு இன்று முதல் எதிர்வரும் நவம்பர் நான்காம் திகதிவரை நடைபெறும். முப்படை முகாம்கள், அனைத்து அரச நிறுவனங்களிலும் தபால் மூல வாக்குகளை நவம்பர் மாதம் முதலாம் திகதியும் 4ஆம் திகதியும் அளிக்க முடியும். உரிய நாள்களில் தபால் வாக்களிக்க முடியாத வாக்காளர்கள், தாங்கள் பணிபுரியும் மாவட்டத்திலுள்ள மாவட்ட தேர்தல்அலுவலகங்களில் வாக்களிக்க முடியும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. பொதுத்தேர்தல் தபால்மூல வாக்களிப்பு இன்று நடைபெறும்போது நிறுவன அடையாள அட்டையைப் பயன்படுத்த முடியாது என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க கூறியுள்ளார். டிஜிற்றல் திரையால் பிரசாரம்…

காஸ் தட்டுப்பாடு ஓரிருநாளில் நீங்கும்

காஸ் தட்டுப்பாடு ஓரிருநாளில் நீங்கும்

காஸ் தட்டுப்பாடு ஓரிருநாளில் நீங்கும்: விநியோகத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சினை காரணமாக லாஃப்ஸ் எரிவாயு நிறுவனத்தின் பல பகுதிகளிலும் தற்போது தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக லாஃப்ஸ் எரிவாயு நிறுவனத்தின் தலைவர் டபிள்யூ.கே.எச்.வேகபிட்டிய தெரிவித்துள்ளார். மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் நிலைமை காரணமாக லாஃப்ஸ் நிறுவனத்தினால் இறக்குமதி செய்யப்பட்ட எரிவாயு கையிருப்பு நாட்டுக்கு வருவதில் ஏற்பட்ட தாமதம் மற்றும் லாஃப்ஸ் நிறுவனத்தின் பிரதான முனையம் வெள்ளத்தில் மூழ்கியமை இதற்கு காரணமாக அமைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும், லாஃப்ஸ் நிறுவனத்தினால் இறக்குமதி செய்யப்பட்ட எரிவாயு கையிருப்புடன் வந்த சரக்குக் கப்பல் நேற்று (28) ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. எனவே, காஸ் தட்டுப்பாடு ஓரிருநாளில் நீங்கும் என்று திரு. வேகப்பிட்டிய தெரிவித்துள்ளார். இதன்படி, எதிர்வரும் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குள் நாடளாவிய ரீதியில் எரிவாயு கையிருப்பு விநியோகிக்கப்படும் என லாஃப்ஸ் எரிவாயு நிறுவனத்தின்…

டிஜிற்றல் திரையால் பிரசாரம் செய்யமுடியாது!

டிஜிற்றல் திரையால் பிரசாரம் செய்ய முடியாது

டிஜிற்றல் திரையால் பிரசாரம் செய்யமுடியாது! : எந்த ஒரு மாவட்டத்திலோ அல்லது நகரத்திலோ டிஜிற்றல் திரையைப் பயன்படுத்தி தேர்தல் பிரசாரம் செய்வது சட்டவிரோதமானது என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அவ்வாறான பிரசார நடவடிக்கைகள் இடம்பெறுமாயின் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்குமாறு தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். டிஜிற்றல் திரையால் பிரசாரம் செய்யமுடியாது! என்பதுடன் எந்தவொரு வேட்பாளரும் தேவையற்ற செல்வாக்கின் ஊடாக வாக்குகளைப் பெற முயற்சித்தால் அது தொடர்பில் சம்பந்தப்பட்ட மாவட்ட தேர்தல் அலுவலகத்திற்கோ அல்லது பொலிஸ் நிலையத்திற்கோ அறிவிக்குமாறும் சமன் ஸ்ரீ ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, பாராளுமன்றத் தேர்தல் தொடர்பில் கிடைக்கப்பெற்ற தேர்தல் முறைப்பாடுகளின் எண்ணிக்கை 869 ஆக அதிகரித்துள்ளது. வன்முறைச் செயல்கள் தொடர்பான 8 முறைப்பாடுகள் அவற்றில் அடங்குவதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஆணைக்குழுவிற்கு நேற்று மட்டும் 78 முறைப்பாடுகள்…

காங்கேசன்துறை ரயில் சேவை மீண்டும்

காங்கேசன்துறை ரயில் சேவை மீண்டும்

காங்கேசன்துறை ரயில் சேவை மீண்டும்: மாகோவுக்கும் அனுராதபுரத்திற்கும் இடையிலான தண்டவாளப் புனரமைப்புப் பணிகள் நிறைவடைந்துள்ளதால், இன்று முதல் (28) கொழும்புக்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான ரயில் சேவை மீண்டும் ஆரம்பமாகிறது. ரயில் சேவை ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் தினமும் வடக்கு புகையிரதப் பாதையில் புகையிரதம் பயணிக்கும் என்றும், புகையிரதக் கடவைகளைப் பயன்படுத்தும் பொதுமக்கள் மிகவும் அவதானமாகச் செயல்படுமாறும் புகையிரதத் திணைக்களம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. காங்கேசன்துறை ரயில் சேவை மீண்டும் ஆரம்பிக்கப்படுவதால் அந்தப் புகையிரத நேர அட்டவணைக்கு அமைய, இந்தியாவின் பரிசாக 22 ரயில் இயந்திரங்கள்

எல்பிட்டி பிரதேசசபை ஜேவிபி வசமானது!

எல்பிட்டி பிரதேச சபை ஜேவிபி வசமானது

எல்பிட்டி பிரதேசசபை ஜேவிபி வசமானது!: காலி மாவட்டத்தின் எல்பிட்டி பிரதேச சபைத் தேர்தலில் ஜேவிபி தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அமோக வெற்றியீட்டியுள்ளது. நேற்று (26) நடைபெற்ற எல்பிட்டி பிரதேச சபைத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ முடிவுகள் நேற்று இரவு வெளியாகின. அதன்படி, எல்பிட்டி பிரதேசசபை ஜேவிபி வசமானது! விபரம் வருமாறு:- தேசிய மக்கள் சக்தி – 17,295 வாக்குகள் – உறுப்பினர்கள் 15 ஐக்கிய மக்கள் சக்தி 7,924 வாக்குகள் – உறுப்பினர்கள் 06 ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 3,957 வாக்குகள் – உறுப்பினர்கள் 03 பொதுஜன எக்சத் பெரமுன – 2,612 வாக்குகள் – உறுப்பினர்கள் 02 சுயேச்சைக்குழு 1 – 2,568 வாக்குகள் – உறுப்பினர்கள் 02 பொதுஜன ஐக்கிய சுதந்திர முன்னணி – 1,350 வாக்குகள் – உறுப்பினர்கள் 01 தேசிய…