டிஜிற்றல் திரையால் பிரசாரம் செய்யமுடியாது!

டிஜிற்றல் திரையால் பிரசாரம் செய்ய முடியாது

டிஜிற்றல் திரையால் பிரசாரம் செய்யமுடியாது! : எந்த ஒரு மாவட்டத்திலோ அல்லது நகரத்திலோ டிஜிற்றல் திரையைப் பயன்படுத்தி தேர்தல் பிரசாரம் செய்வது சட்டவிரோதமானது என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அவ்வாறான பிரசார நடவடிக்கைகள் இடம்பெறுமாயின் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்குமாறு தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். டிஜிற்றல் திரையால் பிரசாரம் செய்யமுடியாது! என்பதுடன் எந்தவொரு வேட்பாளரும் தேவையற்ற செல்வாக்கின் ஊடாக வாக்குகளைப் பெற முயற்சித்தால் அது தொடர்பில் சம்பந்தப்பட்ட மாவட்ட தேர்தல் அலுவலகத்திற்கோ அல்லது பொலிஸ் நிலையத்திற்கோ அறிவிக்குமாறும் சமன் ஸ்ரீ ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, பாராளுமன்றத் தேர்தல் தொடர்பில் கிடைக்கப்பெற்ற தேர்தல் முறைப்பாடுகளின் எண்ணிக்கை 869 ஆக அதிகரித்துள்ளது. வன்முறைச் செயல்கள் தொடர்பான 8 முறைப்பாடுகள் அவற்றில் அடங்குவதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஆணைக்குழுவிற்கு நேற்று மட்டும் 78 முறைப்பாடுகள்…

ஒற்றையாட்சியை நிராகரிக்கும் ஒரே அணி

ஒற்றறையாட்சியை நிராகரிக்கும் ஒரே கட்சி

ஒற்றையாட்சியை நிராகரிக்கும் ஒரே அணி: தமிழ் தேசிய மக்கள் முன்னணி மாத்திரமே ஒற்றையாட்சியை நிராகரிக்கும் ஒரே கட்சி என்று அக்கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். முன்னணியின் வன்னி மாவட்ட வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் ஞாயிற்றுக்கிழமை (27) மாலை 4.30 அளவில் மன்னார் நகரசபை மண்டபத்தில் இடம்பெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த திரு. கஜேந்திரகுமார் பொன்னம்பலம், ஒற்றையாட்சியை நிராகரிக்கும் ஒரே அணி தமது கட்சி மாத்திரமே என்றும் இதுபற்றி வேறு எந்த ஒரு கட்சியும் உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கவில்லை என்றும் குறிப்பிட்டார். நாட்டில் இடம்பெற்ற யுத்தம் முடிவடைந்து 15 வருடங்கள் கடக்கின்றன. இந்தப் 15 வருடங்களில் எமது மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். வடக்கு கிழக்கில் பாதிக்கப்பட்ட மக்கள் நாளாந்தம் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இவர்களின் ஒரு போராட்டத்திலாவது ஜே.வி.பி கலந்து கொண்டுள்ளதா?.வடக்கு கிழக்கில் காணாமல்…

அடுத்தாண்டு மாகாண சபைத் தேர்தல்

அடுத்தாண்டு மாகாண சபைத் தேர்தல்

அடுத்தாண்டு மாகாண சபைத் தேர்தல்: நடைபெறவுள்ள பாராளுமன்றப் பொதுத் தேர்தலைத் தொடர்ந்து மாகாண சபைத் தேர்தலையும் அதனைத் தொடர்ந்து உள்ளூராட்சிமன்றத் தேர்தலையும் நடத்த நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். பெரும்பாலும் இந்தத் தேர்தல்கள் அடுத்தாண்டு நடைபெறும் என்று ஜனாதிபதி தெரிவித்தார். இரத்தினபுரியில் இன்று நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய ஜனாதிபதி, மாகாண சபைத் தேர்தலையும் உள்ளூராட்சி மன்றத்தேர்தலையும் நடத்தி, மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாகக் குறிப்பிட்டார். மாகாண சபைத் தேர்தலும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலும் இடைநிறுத்தப்பட்டு நீண்டகாலமாகியும் அதனை நடத்துவதற்கு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்று அரசியல் கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன. மலைக்குருவி

ஈரான் மீதான தாக்குதலுக்குக் கண்டனம்

ஈரான் மீதான தாக்குதலுக்குக் கண்டனம்

ஈரான் மீதான தாக்குதலுக்குக் கண்டனம்: ஈரானின் இராணுவத் தளங்களை இலக்குவைத்து இஸ்ரேல் இன்று நடத்திய விமானத் தாக்குதலுக்குப் பல நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. அதேநேரம், அமெரிக்காவும் பிரித்தானியாவும் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலை நியாயப்படுத்தியுள்ளன. தன்னைத் தற்காத்துக்கொள்ளும் உரிமை இஸ்ரேலுக்கு உள்ளது என்று அந்த நாடுகள் தெரிவித்துள்ளன. இஸ்ரேல் இன்று நடத்திய தாக்குதலில் சுமார் 20 இராணுவத் தளங்கள் இலக்கானதாகவும் இருவர் கொல்லப்பட்டதாகவும் ஈரானிய பாதுகாப்புப் படைத் தலைமையகம் தெரிவித்துள்ளது. எனினும், இஸ்ரேலின் தாக்குதலை முறியடித்துவிட்டதாகவும் ஈரான் படையினர் தெரிவித்துள்ளனர். இஸ்ரேலின் தாக்குதலையடுத்து ஈரான் வான்பரப்பின் பாதுகாப்பு முறைமை செயற்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன், ஈரான், ஈராக் விமான சேவைகள் அனைத்தும் இரத்துச்செய்யப்பட்டன. ஈரான் மீதான தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்து ஓமான், ஈராக், பாகிஸ்தான், மலேசியா, சவூதி ஆரேபியா, ஐக்கிய அரபு இராச்சியம் உள்ளிட்ட நாடுகள் அறிக்கை வெளியிட்டுள்ளன. இஸ்ரேலின் ஆத்திரமூட்டும்…

ஜனாதிபதியுடன் ஈரான் தூதுவர் சந்திப்பு

ஜனாதிபதியுடன் ஈரான் தூதுவர் சந்திப்பு

ஜனாதிபதியுடன் ஈரான் தூதுவர் சந்திப்பு: ஈரான் தூதுவர் கலாநிதி அலிரேஷா டெல்கோஷ் (Dr. Alireza Delkhosh) நேற்று (25) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவைச் சந்தித்தார். ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்றமைக்கு மனப்பூர்வமாக வாழ்த்து கூறிய அவர், ஈரான் ஜனாதிபதி மசூத் பெசஷ்கியானின் (Masoud Pezeshkian) விசேட வாழ்த்துச் செய்தியையும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் கையளித்தார். ஜனாதிபதியுடன் ஈரான் தூதுவர் சந்திப்பு நடத்தியபோது தற்போதைய பொருளாதார, அரசியல் நிலைமைகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது. இலங்கையின் தற்போதைய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஜனாதிபதி விளக்கமளித்தார். இலங்கைக்கு வரும் சுற்றுலா பிரயாணிகளினதும் பொது மக்களினதும் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாகவும், நாட்டுக்குள் பாதுகாப்பான சூழலை உறுதிப்படுத்த அர்ப்பணிப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். இலங்கைக்கும் ஈரானுக்கு மிடையில் காணப்படும் நீண்டகால இருதரப்பு தொடர்புகள் குறித்து இதன்போது நினைவுகூறப்பட்டது. பல துறைகள் ஊடாக…

எல்பிட்டி பிரதேச சபைத் தேர்தல்

எல்பிட்டி பிரதேச சபைத் தேர்தல்

எல்பிட்டி பிரதேச சபைத் தேர்தல் இன்று நடைபெறுகிறது. காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுத் தலைவர் ஆர். எம். ஏ.எல்.ரத்நாயக்க குறிப்பிட்டார். 29 உறுப்பினர்களை தெரிவுசெய்வதற்காக அங்கீகரிக்கப்பட்ட 08 அரசியல் கட்சிகளும் சுயேச்சைக் குழு ஒன்றும் போட்டியிடும் எல்பிட்டி உள்ளூராட்சி மன்றத் தேர்தல் இன்று (26) காலை 7.00 மணிக்கு ஆரம்பமானது. இந்த தேர்தலில் 48 வாக்களிப்பு நிலையங்களில் வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இதில் வாக்களிக்க 55,643 வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளனர். ஈஸ்டர் தாக்குதலுக்கு அரசியல் தொடர்பில்லை

ஈஸ்டர் தாக்குதலுக்கு அரசியல் தொடர்பில்லை

வாக்குமூலம் வழங்க நான் தயார்

ஈஸ்டர் தாக்குதலுக்கு அரசியல் தொடர்பில்லை: உயிர்த்த ஞாயிறு தாக்குதலை அரசியலுடன் தொடர்புபடுத்த வேண்டாம் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இந்த் சம்பவம் பற்றிய விசாரணை அறிக்கை பற்றித் தற்போது எழுந்திருக்கும் சர்ச்சையை அடுத்து ரணில் விக்கிரமசிங்க அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். சர்ச்சையை ஏற்படுத்திய உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான செய்திகள் ஜனாதிபதித் தேர்தலின் போது தமக்குக் கிடைத்ததாகவும், ஆனால் அந்தச் சம்பவத்தை அரசியலுடன் இணைக்கத் தயங்கியதன் காரணமாக அவற்றைப் பகிரங்கப்படுத்தவில்லை என்றும் முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேலும் குறிப்பிடுகையில்; “இலங்கையின் எட்டாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக நான் பதவியேற்ற பின்னர், கத்தோலிக்க ஆயர் பேரவையின் தலைவர் அருட்தந்தை ஹரோல்ட் அந்தோனி பெர்னாண்டோவின் வேண்டுகோளுக்கு இணங்க உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான ஆணைக்குழு அறிக்கைகளை அவரிடம் கையளித்தேன். அதன் பின்னர்,…

தாக்குதல் நடத்தவிருந்த இருவர் கைது

தாக்குதல் நடத்தவிருந்த இருவர் கைது

தாக்குதல் நடத்தவிருந்த இருவர் கைது: அறுகம்பேயில் இஸ்ரேல் பிரஜைகள் மீது தாக்குதல் நடத்தவிருந்ததாகச் சந்தேகிக்கப்படும் இருவரைக் கைதுசெய்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவினர் சந்தேக நபர்கள் இருவரைக் கைதுசெய்துள்ளதாகப் பொலிஸார் கூறினர். இஸ்ரேல் பிரஜைகள் மீது அறுகம்பேயில் தாக்குதல் நடத்தப்படவிருப்பதாக இந்தியப் புலனாய்வுப் பிரிவினர் தகவல் வழங்கியிருந்தனர். இதனையடுத்துப் புலனாய்வுப் பிரிவினர் உஷார்படுத்தப்பட்டு விசாரணைகள் நடைபெற்று வந்தன. அதன் விளைவாகவே தாக்குதல் நடத்தவிருந்த இருவர் கைது செய்யப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர். அமெரிக்கத் தூதரகம் தமது பிரஜைகளுக்கு எச்சரிக்கை விடுக்கும முன்பே இலங்கை நடவடிக்கையில் இறங்கியிருந்ததாகத் தெரிவித்த பொலிஸார், கைதுசெய்யப்பட்டவர்கள் இலங்கையர்கள் என்றும் அதில் ஒருவர் ஈராக்கைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிட்டுள்ளனர். அறுகம்பேயில் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருப்போர் பற்றிப் பெயர் விபரங்களுடன் முழுமையான தகவல்களை இந்தியப் புலனாய்வுப் பிரிவினர் வழங்கியிருப்பதாகவும் மேலும் தெரியவருகிறது. மலைக்குருவி

பெண்களுக்கு முக்கியத்துவம் வழங்காத தமிழரசு

பெண்களுக்கு முக்கியத்துவம் வழங்காத தமிழரசு

பெண்களுக்கு முக்கியத்துவம் வழங்காத தமிழரசு கட்சிக்குப் பெண்களிடம் வாக்கு கேட்பதற்கு எந்தத் தார்மிக உரிமையும் கிடையாது என அக்கட்சியின் கொழும்புக்கிளை முன்னாள் செயலாளரும், தமிழ் மக்கள் கூட்டணியின் யாழ் மாவட்ட வேட்பாளருமான திருமதி மிதிலா ஶ்ரீபத்மநாதன் தெரிவித்துள்ளார். தமிழ் மக்கள் கூட்டணியின் வேட்பாளர் அறிமுகம் இன்றைய தினம் சனிக்கிழமை யாழில் இடம்பெற்றது. அப்போது மிதிலா ஶ்ரீபத்மநாதன் கருத்து தெரிவித்தார். பெண்களுக்கு முக்கியத்துவம் வழங்காத தமிழரசு கட்சிக்குள் இந்த விடயமாகப் பல நாள் குரல் எழுப்பியும் எந்தப் பயனும் ஏற்படவில்லை. மாற்றம் என்பது பெண்களில் இருந்து ஆரம்பிக்கப்பட வேண்டும். பெண்களில் மாற்றம் இல்லாது சமூகத்தில் மாற்றம் ஏற்படாது. சமூகத்தில் மாற்றம் இல்லாது எதனையும் செய்ய முடியாது. வீட்டில் இருக்கும் பெண்களின் உழைப்பு மொத்த உற்பத்தியில் சேர்த்துக் கொள்ளப்படுவதில்லை. அதே போல தான் சமூகமும் பெண்கள் வீட்டில் சும்மா இருக்கிறார்கள்…