வெடிகுண்டு மிரட்டலால் பயணிகள் பீதி!

விஸ்டாரா விமானத்திற்குவெடிகுண்டு மிரட்டல்

வெடிகுண்டு மிரட்டலால் பயணிகள் பீதி! : இந்திய விமானங்களுக்குத் தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படுவதால் பயணிகள் மத்தியில் விமானப் பயணம் செய்வதில் பீதி ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. நேற்று மாலை வரை சுமார் இருபது விமானங்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. விஸ்டாரா விமான நிறுவனத்துக்குச் சொந்தமான ஒரு விமானம் வெடிகுண்டு மிரட்டலால் பயணிகள் பீதி அடைவதற்கு முன்னதாகக் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. இந்த விமானம் தரையிறக்கப்படுவதற்குப் பத்து நிமிடங்களுக்கு முன்னர் விமானிக்கு அநாமதேய தொலைபேசி அழைப்பு மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனால், சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பிற்கும் அறிவிக்கப்பட்டுப் பாதுகாப்பாக விமானம் தரையிறக்கப்பட்டது. பயணிகள் உடனடியாக வெளியேற்றப்பட்டுக் கடும் சோதனை நடத்தப்பட்டது. குண்டு செயலிழக்கும் பிரிவினரும் விரைந்து வந்து தேடுதல் நடத்தியபோதிலும் குண்டு எதுவும் அகப்படவில்லை. அந்த விமானத்தில் 96 பயணிகளும் விமானச் சிப்பந்திகளும்…

வாகன வரிஅனுமதிப்பத்திரம் இலகுவாகப் பெறலாம்

வாகன வரிஅனுமதிப்பத்திரம்

வாகன வருமானவரி அனுமதிப்பத்திரம் இலகுவாகப்பெற வழிசெய்யுமாறு அமைச்சர் விஜித்த ஹேரத் அதிகாரிகளுக்குப் பணிப்பு விடுத்துள்ளார். வாகன வருமானவரி அனுமதிப்பத்திரங்களைப் பெற்றுக்கொள்வதில் மேல் மாகாணத்தை ஏனைய மாகாணங்களுடன் இணைக்குமாறு அமைச்சர் விஜித ஹேரத் உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனைத் தெரிவித்துள்ளது. வாகன வரிஅனுமதிப்பத்திரம் இலகுவாகப் பெற்றுக்கொள்வதில் மக்கள் எதிர்நோக்கும் பிரதான பிரச்சினை மாகாணங்களுக்கிடையிலான தொடர்பின்மை எனவும், அது நடைமுறைப்படுத்தப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருந்த போதும் மிகவும் அத்தியாவசியமான மாகாணமான மேல் மாகாணத்திற்கு இது இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை எனவும் குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. வாகன வரிஅனுமதிப்பத்திரம் பெறுவது குறித்து மக்களிடம் இருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக அமைச்சு தெரிவித்துள்ளது. , மேல் மாகாணத்தை ஏனைய மாகாணங்களுடன் இணைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளுக்கு உரிய திணைக்களங்களுக்கு…

ஹமாஸ் தலைவர் சின்வார் கொல்லப்படவில்லை

ஹமாஸ் தலைவர் சின்வார்

ஹமாஸ் தலைவர் சின்வார் கொல்லப்படவில்லை என்று அவ்வமைப்பினர் தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டு அக்டோபர் ஏழாந்திகதி இஸ்ரேலில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்டவர் எனக் கருதப்படும் ஹமாஸ் தலைவர் சின்வார், காஸாவில் இஸ்ரேலியப் படைகளால் கொல்லப்பட்டதாக அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் காட்ஸ் உறுதி செய்துள்ளார். ஆனால், இது தவறான செய்தி என்றும், தங்கள் தலைவர் உயிருடன் இருப்பதாகவும் ஹமாஸ் படையினர் தெரிவித்துள்ளனர். இஸ்ரேலிய எல்லைக்குள் நுழைந்து பலஸ்தீன நாட்டை சேர்ந்தச் ஹமாஸ் படையினர் நடத்திய தாக்குதலில் ஏராளமானோர் கொல்லப்பட்டனர். பலர் பணயக் கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக ஹமாஸ் மீது போரை தொடங்கியது இஸ்ரேல். இருதரப்பிலும் மாறி மாறி தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில் தங்கள் இராணுவம் நடத்திய அதிரடித் தாக்குதலில் மூன்று முக்கியமான தலைகள் கொல்லப்பட்டு உள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்பு படை…

ஐந்துமில்லியன் டொலர் இலஞ்சம் தந்தார்கள்

ஐந்துமில்லியன் டொலர் இலஞ்சம்

தான் பிரதமராக இருந்தபோது தனக்கு ஐந்துமில்லியன் டொலர் இலஞ்சம் தந்தார்கள் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். தனது அரசாங்கத்திலிருந்த கனிஷ்ட அமைச்சர் ஒருவரின் கணவர் சிங்கப்பூர் வர்த்தகர் ஒருவருடன் ஐந்து மில்லியன் டொலர் இலஞ்சம் பாராளுமன்றத்திற்குக் கொண்டு வந்து தனது மேசையின் மீது வைத்ததாகவும் தான் அதனை மறுத்துவிட்டதாகவும் சந்திரிகா தெரிவித்துள்ளார். உடனடியாகப் பணத்தை எடுத்துக்கொண்டு போகுமாறும் “உம்மை நான் கைது செய்திருக்க வேண்டும் “என்றும் எச்சரித்து அனுப்பியதாகவும் முன்னாள் ஜனாதிபதி கூறியுள்ளார். கொழும்பில் நடைபெற்ற பட்டயக்கணக்காளர்களின் 45ஆவது தேசிய மாநாட்டில் கலந்துகொண்டு சந்திரிகா உரையாற்றினார். ஒரு செயற்றிட்டம் ஒன்றைப் பெறுவதற்காகத் தனக்கு ஐந்து மில்லியன் டொலர் இலஞ்சம் கொடுக்க முயற்சிக்கப்பட்டதாகக் கூறிய சந்திரிகா, முடிந்தவரை கொள்ளையடியுங்கள், ஆனால், சிக்கிக்கொள்ள வேண்டாம் என்று தனது எம்பிமாருக்கு அறிவுரை கூறிய ஒரு ஜனாதிபதியும் நமது…

சிங்கப்பூர் விமானத்தில் குண்டுப் புரளி

சிங்கப்பூர் விமானத்தில் குண்டுப் புரளி

அமெரிக்கா செல்லாமல் கனடாவில் தரையிறக்கம் சிங்கப்பூர் நோக்கிப் பறந்து கொண்டிருந்த “Air India Express” விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாகச் செய்தி வந்ததை அடுத்து பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டதாக சிங்கப்பூர் அதிகாரிகள் கூறுகின்றனர். சம்பந்தப்பட்ட விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக விமான நிறுவனத்துக்கு மின்னஞ்சல் செய்தி வந்ததாக சிங்கப்பூர் பாதுகாப்பு அமைச்சர் Ng Eng Hen தெரிவித்துள்ளார். அதன்படி, நாட்டின் இரண்டு போர் விமானங்கள் உதவியுடன், Air India விமானம் மக்கள் தொகை குறைந்த பகுதிக்கு வழிகாட்டப்பட்டது. பின்னர் Changi விமான நிலையத்தில் விமானம் தரையிறக்கப்பட்டு, தீவிர சோதனை நடத்தப்பட்டு, வெடிபொருட்கள் எதுவும் சிக்கவில்லை. ஆனால் அதே விமான நிறுவனத்திற்குச் சொந்தமான மற்றொரு விமானம் அமெரிக்காவின் சிகாகோவிற்கு பறந்து கொண்டிருந்தது மற்றும் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட அச்சுறுத்தல் காரணமாக கனடாவில் தரையிறங்கியது.

கடவுச்சீட்டு வழங்கும் பணிகள் வழமைக்கு

கடவுச்சீட்டு விநியோகம் வழமைக்குத் திரும்பியது

கடவுச்சீட்டு வழங்கும் பணிகள் எதிர்வரும் திங்கட்கிழமை (21) முதல் வழமை போன்று ஆரம்பிக்கப்படும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (15) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் இதனைத் தெரிவித்தார். கடந்த 11ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இது தொடர்பில் கலந்துரையாடி முடிவு எடுக்கப்பட்டதாக அமைச்சர் தெரிவித்தார். விமான சாகசத்தைப் பார்க்க வந்தவர் உயிரிழப்பு

கொழும்பு பாடசாலைகளுக்கு நாளையும் விடுமுறை

தாமரைக் கோபுரம்

சீரற்ற காலநிலை காரணமாக கொழும்பு கல்வி வலயத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளும் மூடப்படுவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

கொழும்பு திரும்பிய றியாத் விமானம்

கொழும்பில் இருந்து ரியாத் நோக்கிச் சென்ற UL 265 என்ற விமானம், தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதை அடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மீண்டும் கொழும்பிற்கு பாதுகாப்பாகத் திரும்பியதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் உறுதிப்படுத்தியுள்ளது. இன்று மாலை இந்த விமானம் எந்தவித அசம்பாவிதமும் இன்றி பாதுகாப்பாக விமானம் தரையிறங்கியுள்ளதுடன், அனைத்து பயணிகளுக்கும் ஹோட்டல் தங்குமிடம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருவழிப் பாதையானது கட்டுநாயக்க நெடுஞ்சாலை

பதில் பொலிஸ் மாஅதிபருக்கு அங்கீகாரம்

2நாளில் விசாரிக்க பணிப்புரை

பதில் பொலிஸ் மா அதிபராக சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் பிரியந்த வீரசூரியவை நியத்தமைக்கு அரசியலமைப்புப் பேரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. புதிய ஜனாதிபதி நியமிக்கப்பட்டதன் பின்னர் முதன்முறையாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் அரசியலமைப்பு பேரவை இன்று (08) கூடியபோதே அது இடம்பெற்றுள்ளது. பதில் பொலிஸ் மா அதிபர் ஒருவர் 14 நாட்களுக்கு மேல் பதவியில் இருந்தால் அரசியலமைப்பு சபையின் அனுமதி பெறப்பட வேண்டும். அந்த வகையில் ஜனாதிபதி அநுரகுமார நியமித்த பதில் பொலிஸ் மாஅதிபரை அரசியலமைப்புப் பேரவை அங்கீகரித்துள்ளது.

ஒருவழிப் பாதையானது கட்டுநாயக்க நெடுஞ்சாலை

கட்டுநாயக்க நெடுஞ்சாலை

கொழும்பு – கட்டுநாயக்க நெடுஞ்சாலையின் ஒரு வழிப் பாதையைத் தற்காலிகமாக மூடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அவ்வப்போது மேற்கொள்ளப்படும் பராமரிப்புப் பணிகள் காரணமாக இவ்வாறு பாதையை மூடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இம்மாதம் முழுவதும் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, நெடுஞ்சாலையின் ஒரு வழிப்பாதை மட்டும் திறக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.