தமிழர்களின் பிரச்சினைகள் பிரித்தானிய உயர்ஸ்தானிகரிடம் எடுத்துரைப்பு

தமிழர்களின் பிரச்சினைகள் பிரித்தானிய உயர்ஸ்தானிகரிடம் எடுத்துரைப்பு

தமிழர்களின் பிரச்சினைகள் பிரித்தானிய உயர்ஸ்தானிகரிடம் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்ட்ரூ பற்றிக் அவர்களை நேற்று 19ஆம் திகதி பிரித்தானிய உயர்ஸ்தானிகரின் உத்தியோகபூர்வ இல்லமான கொழும்பில் அமைந்துள்ள வெஸ்ட் மின்ஸ்ரர் ஹவுசில் பிராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் சந்தித்து உரையாடினார். இதன் போது வடக்கு மற்றும் கிழக்கில் தமிழ் மக்கள்எதிர்கொள்ளும் பிரச்சனைகள் தொடர்பில் ஆராயப்பட்டது அதில் முக்கியமாக மாகாண சபைத் தேர்தல் தொடர்பிலும் , அரசியல் கைதிகள், செம்மணி, காணிப்பிரச்சனைகள், இராணுவத் தலையீடு தொடர்பிலும், நடந்து முடிந்த ஹர்த்தால் பற்றியும் கலந்துரையாடப்பட்டது. அதனுடன் அரசின் வட கிழக்குக்கான வேலைத்திட்டங்கள் தொடர்பிலும் ஆராயப்பட்டது.

தேசபந்து தென்னக்கோன் சிஐடியினரால் கைது

தேசபந்து தென்னக்கோன் சிஐடியினரால் கைது

முன்னாள் பதில் பொலிஸ் மாஅதிபராகக் கடமையாற்றிய தேசபந்து தென்னக்கோன் சிஐடியினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். 2022 கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கு எதிராக நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின்போது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாகவே அவரைக் குற்றப் புலனாய்வுத் திணைக்கள (சிஐடி) உத்தியோகத்தர்கள் இன்று கைதுசெய்தனர். தென்னக்கோனை அவரது இல்லத்தில் வைத்துப் பொலிஸார் கைதுசெய்தனர்.

கற்களைப்போட்டுப் பாதையை மூடிய கல்நெஞ்சு கணக்கப்பிள்ளை!

கற்களைப்போட்டுப் பாதையை மூடிய கல்நெஞ்சு கணக்கப்பிள்ளை!

தோட்டத்தில் வாழும் மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பாதையில் பயணிக்கக் கூடாது என்று கற்களைப்போட்டுப் பாதையை மூடிய கல்நெஞ்சு கணக்கப்பிள்ளை! பற்றிய தகவல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள மறே தோட்ட ராஜமலை பிரிவில் உள்ள கணக்கப்பிள்ளையே இவ்வாறு அக்கிரமம் புரிந்துள்ளதாகப் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இந்தப் பாதை மூடப்பட்டதால், பாடசாலை மாணவர்கள், பொதுமக்கள், பயணிகள், முதியோர்கள், நோயாளிகள் பாரிய அசெகரியங்களை எதிர்நோக்குகின்றனர். கடந்த பல ஆண்டுகளாகப் பாவனையில் இருந்த குறுக்கு வீதியை தோட்ட நிர்வாகம் மூடியதால், சுமார் பத்து நிமிடத்தில் செல்லும் தூரத்தை இரண்டு கிலோ மீட்டர் தூரம் சுற்றி வர வேண்டி உள்ளது எனவே, கடந்த காலங்களில் இருந்தது போல் குறுக்கு வீதியைத் திறந்து உதவ வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். இராஜமலை பிரிவில் வெளிக்கள உத்தியோகத்தர் (கணக்கப்பிள்ளை) ஒருவரே…

மத்திய மாகாண அதிகாரிகள் மஸ்கெலியாவுக்குச் சுற்றுலா

மத்திய மாகாண அதிகாரிகள் மஸ்கெலியாவுக்குச் சுற்றுலா

மத்திய மாகாண அதிகாரிகள் மஸ்கெலியாவுக்குச் சுற்றுலா மேற்கொண்டனர். மத்திய மாகாண ஆணையாளர், துணை ஆணையாளர் மற்றும் உத்தியோகஸ்த்தர்கள் சுற்றுலா நிமித்தம் 02.08.2025 அன்று மஸ்கெலியாவுக்கு வருகைதந்திருந்தார்கள். இதன் போது மஸ்கெலியாவில் காணப்படும் ஒரு சில குறைகளை சுட்டிகாட்டியிருந்தோம். முடிந்தளவு நிவர்த்தி செய்து தருவதாக அவர்கள் அறிவித்தார்கள். இந்த நிகழ்வினை மஸ்கெலியா, அம்பகமுவ பிரதேசசபை தவிசாளர்கள், உறுப்பினர்கள், செயலாளர் மற்றும் உத்தியோகஸ்த்தர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்கள். மவுசாகலை நீர்த்தேக்க பகுதியில் உள்ள சமன் தேவாலயத்திற்கு வழிபடச் சென்ற வேளையில் மரக்கன்றுகளும் நாட்டப்பட்டன.

லக்ஸபானவில் நீர் மட்டம் உயர்வு: வான் கதவு திறப்பு

லக்ஸபானவில் நீர் மட்டம் உயர்வு: வான் கதவு திறப்பு

தொடர் மழை காரணமாக லக்சபான நீர் மின் நிலைய பகுதியில் உள்ள நீர் அணையின் வான் கதவு திறப்பு. நேற்று இரவு முதல் தொடர்ந்து கன மழை பெய்தது வருவதால் நுவரெலியா மாவட்டத்தில் உள்ள அனைத்து நீர் தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக உயர்ந்து வருகிறது. குறிப்பாக லக்சபான நீர் மின் நிலைய பகுதியில் உள்ள நீர் அணையில் இருந்து தற்போது வான் கதவு ஒன்று மூன்று அங்குலம் திறந்து விட பட்டு உள்ளது என நீர் மின் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதன் காரணமாக தாழ் நிலப் பகுதியில் உள்ள அனைத்து மக்களும் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். தொடர்ந்து அதிக மழை பெய்யும் பட்சத்தில் ஏனைய வான் கதவுகள் திறந்து விட வாய்ப்பு உள்ளது என அவர் மேலும்…

சாமிமலையில் வெள்ளத்தால் போக்குவரத்து பாதிப்பு

சாமிமலையில் வெள்ளத்தால் போக்குவரத்து பாதிப்பு

தொடர்ந்து பலத்த மழை காரணமாக சாமிமலை கவரவலை சந்தி பகுதியில் வெள்ளம். மத்திய மலைநாட்டில் நுவரெலியா மாவட்டத்தில் மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் நேற்று இரவு முதல் கனத்த மழை பெய்தது வருகிறது. இதன் காரணமாக சாமிமலை கவரவலை சந்தி பகுதியில் கடும் வெள்ளம் ஏற்பட்டு வாகன போக்குவரத்து தடைப்பட்டது. மேலும் கவரவலை கிரகத்தில் உள்ள பல இல்லங்களில் வெள்ள நீர் புகுந்தது உள்ளது.இதன் காரணமாக அப் பகுதியில் உள்ள அனைத்து மக்களும் பாரிய அசௌகரியங்களுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் கவணம் செலுத்தி அம் மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இன்று இடியுடன் மழை பெய்யும்

இன்றும் மழையுடன் கூடிய காலநிலை நிலவும்

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று (03) வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மற்றும் குருநாகல் மாவட்டங்களிலும் பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்தப் பகுதிகளில் சில இடங்களில் 75 மில்லி மீட்டருக்கும் அதிகளவான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும். மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும். இடியுடன் கூடிய மழையுடன் தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கத்தால் ஏற்படும் ஆபத்துகளைக் குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

விமான நிலையத்தில் சாரதி அனுமதிப்பத்திரம்

விமான நிலையத்தில் சாரதி அனுமதிப்பத்திரம்

வெளிநாட்டிலிருந்து வருவோருக்கு விமான நிலையத்தில் சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கும் நடைமுறை இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நாட்டிற்கு வருகை தரும் வெளிநாட்டினருக்குத் தேவையான சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கான கருமபீடம் ஒன்று இன்று (03) முதல் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் திறக்கப்படும் என்று மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்க தெரிவித்துள்ளார். வேரஹெரவில் உள்ள மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் அலுவலகத்தில் இதுவரை பணிகள் மேற்கொள்ளப்பட்டாலும், சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக இன்று முதல் கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தில் இந்தப் பணிகள் தொடங்கப்படும் என்று அவர் கூறினார். நாட்டிற்கு வருகை தரும் வெளிநாட்டினர் பெரும்பாலும் கட்டுநாயக்க விமான நிலையம் அல்லது அருகிலுள்ள இடங்களில் இருந்து வாகனங்களை வாடகைக்கு எடுத்து தங்கள் பயணங்களின் போது தாங்களாகவே சாரதிகளாக செயல்படுவதாகவும், இதற்காக மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டிகள் மற்றும்…

ரஷ்யாவிலும் ஜப்பானிலும் சுனாமி எச்சரிக்கை

ரஷ்யாவிலும் ஜப்பானிலும் சுனாமி எச்சரிக்கை

சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து ரஷ்யாவிலும் ஜப்பானிலும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 8.0 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ரஷ்யாவின் பெட்ரோபாவ்லோவ்ஸ்க்-கம்சாட்ஸ்கியிலிருந்து சுமார் 85 மைல் தொலைவில், 19 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்த மையம் மேலும் குறிப்பிட்டுள்ளது. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ஹவாய், அலாஸ்காவின் அலூடியன் தீவுகளின் சில பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அத்துடன், ஜப்பானின் கடலோரப் பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளதுடன், கடல் அலைகள் 1 மீட்டர் வரை உயரக்கூடும் என்றும் எதிர்வு கூறப்பட்டுள்ளது. பூகம்பத்தின் ஆரம்ப கட்ட அளவின் அடிப்படையில், பரவலான ஆபத்தான சுனாமி அலைகள் சாத்தியமாகும்” என்று பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தின் மையப்பகுதி ரஷ்யாவின் தூர கிழக்கில் உள்ள கம்சட்கா தீபகற்பத்தின் கடற்கரையில் அமைந்துள்ளது.

இலங்கை- மாலைதீவு இருதரப்பு ஒப்பந்தங்கள்

இலங்கை- மாலைதீவு இருதரப்பு ஒப்பந்தங்கள்

இலங்கைக்கும் மாலைதீவுக்குமிடையில் பல்வேறு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன. உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு மாலைதீவு சென்றுள்ள ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவுக்கும் மாலைதீவு ஜனாதிபதி கலாநிதி மொகமது முய்சுவுக்கும் இடையிலான சந்திப்புக்குப்பின்னர் ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன. மாலைதீவு சார்பில் அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சர் கலாநிதி அப்துல்லா கலீல், இலங்கையின் சார்பில் வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் ஆகியோர் ஒப்பந்தங்களைப் பரிமாறிக்கொண்டனர். நேற்றுக்காலை மாலைதீவு சென்றடைந்த ஜனாதிபதியை மாலைதீவு ஜனாதிபதி உற்சாகமாக வரவேற்றார். அதனைத் தொடர்ந்து மாலைதீவு ஜனாதிபதி மாளிகையில் இரு நாட்டுத் தலைவர்களும் சந்தித்துப் பேசினர்.