வடக்கில் மே 29இல் போராட்டம் வெடிக்கும் என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ. சுமந்திரன், அரசாங்கத்தை எச்சரித்துள்ளார். வட பகுதி மக்களின் காணிப் பிரச்சினையைத் தீர்க்க மே 28 வரை காலக்கெடு கொடுத்துள்ள சுமந்திரன், தவறினால் 29ஆம் திகதி பாரிய போராட்டம் வெடிக்கும் என்று எச்சரித்துள்ளார். யாழ்ப்பாணம் வடமராட்சி ஊடக இல்லத்தில் நேற்று மாலை ஊடகச் சந்திப்பை நடத்தி அவர் இந்த எச்சரிக்கையை விடுத்தார். வடக்கில் மக்களின் காணி சுவீகரிப்புக்கான வர்த்தமானி மீளப்பெறப்படுவதை அரசு மே 28 ஆம் திகதிக்கு முன் உறுதி செய்ய வேண்டும். தவறினால், வடக்கில் மே 29இல் போராட்டம் ஆரம்பமாகும். அந்தப் போராட்டம் நாட்டை மட்டுமல்ல உலகையே உலுக்குமளவுக்கு முன்னெடுக்கப்படும். வடக்கின் கரையோரப் பிரதேசங்களில் வாழுகின்ற மக்கள் சுனாமியால் பாதிக்கப்பட்டும், பல தடைவைகள் இடம்பெயர்ந்த…
Blog
மின்சாரக் கட்டணம் 18.3வீதம் அதிகரிக்கும்
மின்சாரக் கட்டணம் 18.3வீதம் அதிகரிக்கும் வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எதிர்வரும் ஜூன் மாதத்திலிருந்து டிசம்பர் மாதம் வரையிலான காலப்பகுதிக்கு 18.3 வீத கட்டண அதிகரிப்பை மேற்கொள்ள பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் இலங்கை மின்சார சபை அனுமதி கோரியிருக்கின்றது. எனினும், பொது மக்களின் கருத்தை அறிந்து ஜூன் முதல் வாரத்தில் தனது பதிலை அளிக்க பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தீர்மானித்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிவனொளிபாத மலை யாத்திரை நிறைவு
சிவனொளிபாத மலை யாத்திரை நிறைவு: சிவனொளிபாத மலை யாத்திரை பருவகாலம் வெசாக் பௌர்ணமி தினமான இன்றுடன் முடிவடைகிறது. இன்று காலை சிவனொளிபாத மலையிலிருந்து சிலை உள்ளிட்டவற்றை எடுத்துச் செல்லும் ஊர்வலம் சிவனொளிபாத மலை அடிவாரத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்டதாக மாவட்ட பௌத்த விவகார ஒருங்கிணைப்பு அதிகாரி வணக்கத்திற்குரிய மொரஹேல சுகதஜோதி தேரர் தெரிவித்துள்ளார். சிவனொளிபாத மலை யாத்திரை காலம் கடந்த டிசம்பர் மாதம் 14 ஆம் திகதி தொடங்கியது.
பஸ் விபத்தில் 21பேர் உயிரிழப்பு
பஸ் விபத்தில் 21பேர் உயிரிழப்பு: கொத்மலை ரம்பொடை கெரண்டிஎல்ல பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது. இவ்விபத்து குறித்து சபாநாயகர் மற்றும் போக்குவரத்து பிரதி அமைச்சர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். கதிர்காமத்திலிருந்து குருநாகல் நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்துக் சபைக்கு சொந்தமான பஸ் ஒன்று, நுவரெலியா – கம்பளை பிரதான வீதியில் கொத்மலை ரம்பொட கெரண்டிஎல்ல பகுதியில் சுமார் 100 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்தவர்களில் 21 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்தநிலையில், உயிரிழந்த 21 பேரின் உடல்களும் கொத்மலை பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன. உயிரிழந்தவர்களில் 5 பெண்கள் மற்றும் 12 ஆண்கள் உள்ளடங்குவதாகவும், பஸ் சாரதியும் விபத்தில் உயிரிழந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து இன்று அதிகாலை 4:30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இந்த பஸ்ஸில் சுமார்…
ஹற்றன் மாணிக்கப்பிள்ளையார் முத்தேர் பவனி
ஹற்றன் மாணிக்கப்பிள்ளையார் முத்தேர் பவனி மேளதாள இசை முழங்க மிகச் சிறப்பாக நடைபெற்றது. நுவரெலியா மாவட்டத்தின் மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றான ஹட்டன் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தின் சித்திரா பௌர்ணமி தினத்தினை முன்னிட்டு முத்தேர் திருவிழா மேளதாள இசை முழங்க, பக்த அடியார்களின் அரோகரா பக்தி பரவசத்துடன் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. தேர் பவனி ஆலயத்தில் நடைபெற்ற திரவிய அபிசேகம் வசந்த மண்டப பூஜை உள் வீதி உலா வருதல் ஆகியன இடம்பெற்று தேர் திருவிழா ஆரம்பமானது. இந்தத் தேர் பவனி ஹட்டன் மல்லியைப்பூ சந்தி வரை சென்று மீண்டும் திரும்பி ஹட்டன் புறநகர் வழியாக எம்.ஆர்.டவுன் வரை சென்று பிரதான வீதியூடாக இன்று ஆலயத்தினை வந்தடைந்தது. கடந்த 02ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான சித்திரா பௌரணமி தேர் திருவிழா, நேற்று முன்தினம் கங்கை நீர்…
சிவானந்த ராஜா சிஐடியில் முறைப்பாடு
சிவானந்த ராஜா சிஐடியில் முறைப்பாடு: கொட்டாஞ்சேனை மாணவியை சக மாணவர்கள் முன்னிலையில் அவமானப்படுத்தியதாகக் கூறப்படும் தனியார் கல்வி நிலைய உரிமையாளர் என். சிவானந்த ராஜா சிஐடியில் முறைப்பாடு செய்துள்ளார். தனக்கும் மாணவியின் தற்கொலைக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்றும் வேண்டுமென்றே சிலர் திட்டமிட்டுத் தம் பெயருக்கு அபகீர்த்தியை ஏற்படுத்துவதாகவும் சிவானந்த ராஜா தனது முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார். தனது பெயருக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில், ஒரு குழுவினர் வேண்டுமென்றே பிரசாரங்களை மேற்கொள்வதாகவும், அதற்கு உரிய விசாரணை நடத்தப்பட வேண்டுமெனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். உயிரிழந்த மாணவி உடல்நலக் குறைவுடன் வகுப்புக்களுக்கு வந்திருந்ததாகவும், மாணவியின் பெற்றோரை அழைத்து, அவர் உடல்நலம் தேறிய பின்னர் வகுப்புகளில் பங்கேற்குமாறு மட்டுமே அறிவுறுத்தியதாகவும் அவர் தெரிவித்தா தனது புகைப்படங்களைப் பயன்படுத்தி சமூக ஊடகங்களில் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்படுவதால் தான் மன உளைச்சலுக்கு ஆளாகியிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.…
கொட்டாஞ்சேனை ஆசிரியருக்கு கட்டாய விடுமுறை
கொட்டாஞ்சேனை ஆசிரியருக்கு கட்டாய விடுமுறை: கொட்டாஞ்செனையில் 16 வயது மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்துடன் தொடர்புடைய, கொழும்பு பம்பலப்பிட்டி ஆசிரியர் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ளார். மாணவியைத் துஷ்பிரயோம் செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள இந்த ஆசிரியர் கட்டாய லீவில் அனுப்பப்பட்டு விசாரணை நடைபெறுவதாகக் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. உயிரிழந்த மாணவிக்கு நீதிகோரி கொழும்புவில் நேற்று பெற்றோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
போர்ப் பதற்றத்தால் போட்டிகள் ஒத்திவைப்பு
போர்ப் பதற்றத்தால் போட்டிகள் ஒத்திவைப்பு: இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக தற்போது இடம்பெற்றுவரும் 2025 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டித் தொடர் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. இந்த கடினமான காலங்களில் இந்தியாவுடன் நிற்க இந்திய கிரிக்கெட் வாரியம் விரும்புவதாகவும், எனவே ஐபிஎல் போட்டி காலவரையின்றி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் பிசிசிஐ அதிகாரி ஒருவர் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக போர் பதற்றம் அதிகரித்துள்ளதால் ஐபிஎல் தொடரை நிறுத்தி வைப்பது குறித்து பிசிசிஐ ஆலோசனை கூட்டம் நடத்தியது. இந்தக் கூட்டத்தில் பிசிசிஐ தலைவர் உட்பட பல்வேறு அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் நாட்டில் நிலவும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு எஞ்சிய…
விமானப்படை கெலி விபத்தில் அறுவர் பலி
விமானப்படை கெலி விபத்தில் அறுவர் பலி யானதாக விமானப் படை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயிற்சி முடித்து வெளியேறும் வைபத்தில் பங்குபற்றிய பெல் 212 கெலிகொப்டர் மாதுறுஓயா ஆற்றில் வீழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்தச் சந்தர்ப்பத்தில் 12 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக முன்னர் அறிவிக்கப்பட்டது. எனினும், விமானப் படை வீரர்கள் உட்பட அறுவர் உயிரிழந்துவிட்டதாக விமானப் படைய வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் தெரிவிக்கப்ப்டுள்ளது. இந்தச் சம்பவம் இன்று காலை 6.45 அளவில் இடம்பெற்றுள்ளது. இன்று காலை 6.45 அளவில் இடம்பெற்ற இந்தச் சம்பவம் பற்றி முழுமையாக ஆய்வு நடத்த ஒன்பது பேர் கொண்ட குழுவொன்றை விமானப் படைத் தளபதி நியமித்துள்ளார்.
நாடு முழுவதும் 62வீதம் வாக்குப்பதிவு
நாடு முழுவதும் 62வீதம் வாக்குப்பதிவு இடம்பெற்றிருப்பதாகத் தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 07 மணிக்கு ஆரம்பமாகி மாலை 4:00 மணிக்கு நிறைவடைந்தது. இதற்கமைய, தேர்தல் மாவட்டங்கல் பலவற்றில் மாலை 04 மணி வரையலான வாக்குப்பதிவு வீதம் 60 % ஐ தாண்டியுள்ளது. 4 மணி வரை பதிவான வாக்குப்பதிவு வீதம் பின்வருமாறு, மன்னார் – 70%திருகோணமலை – 67%பொலன்னறுவை – 64%அநுராதபுரம் – 64%காலி – 63%திகாமடுல்ல – 63% மாத்தளை – 62%மட்டக்களப்பு – 61% மொனராகலை – 61%களுத்துறை – 61%வவுனியா – 60%பதுளை – 60%நுவரெலியா – 60%முல்லைத்தீவு – 60% இரத்தினபுரி- 60%கிளிநொச்சி – 60%கேகாலை – 58% மாத்தறை- 58%புத்தளம் – 55% கொழும்பு- 52% நாடு முழுவதும் 62வீதம்…