ரயில்வே தொழினுட்ப வல்லுநர்கள் வேலைநிறுத்தம் செய்து வருகின்றனர்.ரயில்வே தொழினுட்ப வல்லுநர்கள் போராட்டம் செய்து வருகின்றனர். மேலதிக நேரப் பிரச்சினையை முன்வைத்து, ரயில்வே தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் ரயில்வே தொழில்நுட்ப உதவியாளர்கள் இன்று (26) காலை முதல் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். இன்று காலை 7 மணி முதல் 24 மணிநேர அடையாள வேலைநிறுத்த போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக இலங்கை பொதுஜன ரயில்வே ஊழியர் சங்கத்தின் செயலாளர் நதீர மனோஜ் தெரிவித்தார். தங்கள் பிரச்சினை குறித்து அதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்பட்ட போதிலும், இதுவரை எந்த தீர்வும் கிடைக்கவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
Blog
பஸ் கட்டணக் குறைப்பு இன்று அறிவிக்கப்படும்
பஸ் கட்டணக் குறைப்பு இன்று அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பேருந்து கட்டணங்களை 2.5 சதவீதத்தால் குறைக்க எடுக்கப்பட்ட முடிவின்படி, திருத்தப்பட்ட பேருந்து கட்டணங்கள் இன்று அறிவிக்கப்படும் என்று தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. குறைந்தபட்ச பேருந்து கட்டணத்தில் எந்த மாற்றமும் இருக்காது என்று ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். இதற்கிடையில், ஜூலை 1 ஆம் திகதி முதல் செயல்படுத்தப்பட உள்ள இந்தக் கட்டண திருத்தத்திற்கு பேருந்து உரிமையாளர் சங்கங்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்துள்ளன.
இன்றும் மழை பெய்ய வாய்ப்பு
நாட்டின் சில பகுதிகளில் இன்றும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. மேல், சப்பிரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி , மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும். சில இடங்களில் சுமார் 50 மில்லிமீற்றர் வரையிலான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அனுராதபுரம், மாத்தளை ஆகிய மாவட்டங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும். ஊவா, கிழக்கு மாகாணங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமெனவும் வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. மத்திய மலைநாட்டின் மேற்குப் பகுதிகள், வடக்கு, வடமத்திய, வடமேல் மாகாணங்கள் திருகோணமலை, ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் அவ்வப்போது மணிக்கு 30-40 கிலோமீற்றர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும். இடியுடன் கூடிய மழையுடன் தற்காலிகமாக பலத்த காற்று, மின்னல் தாக்கத்தால் ஏற்படும் ஆபத்துகளைக்…
ஐநா ஆணையாளர் செம்மணி சென்றார்
யாழ். செம்மணி அணையா விளக்கு போராட்டக் களத்திற்கு சென்று நிலைமைகளை ஐ.நா.மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் பார்வையிட்டதுடன், செம்மணி அணையா விளக்கு போராட்ட இடத்தில் மலர் தூவி கற்பூர தீபமிட்டு அஞ்சலி செலுத்தினார். குறித்த பகுதிக்கு சென்ற ஐ.நா.மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க், செம்மணி மனிதப்புதைகுழிப் பகுதியை பார்வையிட்டதுடன், போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பாதிக்கப்பட்ட மக்களின் குறைகளையும் கேட்டறிந்துகொண்டார். குறித்த பகுதிக்கு சென்ற ஐ.நா.மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க், செம்மணி மனிதப்புதைகுழிப்பகுதியை பார்வையிட்டதுடன் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பாதிக்கப்பட்ட மக்களுடன் கலந்துரையாடினார்.
சுபான்ஷு சுக்லா விண்வெளிப் பயணம் ஆரம்பம்
சுபான்ஷு சுக்லா விண்வெளிப் பயணம் ஆரம்பம் உற்சாகமாக நடைபெற்றது. விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா, இந்திய வரலாற்றில் விண்வெளிக்குச் செல்லும் இரண்டாவது நபராவார். அவர், புதன்கிழமை (ஜூன் 25) அமெரிக்காவின் ஃபுளோரிடா மாநிலத்தில் இருக்கும் கென்னடி விண்வெளி நிலையத்திலிருந்து ஸ்பேஸ்எக்ஸ் ஃபேல்கன் 9 விண்கலத்தில் விண்வெளிக்குப் புறப்பட்டார். அவரின் சாதனையை இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத் தலைநகர் லக்னோவில் மக்கள் விமரிசையாகக் கொண்டாடினர். சுபான்ஷு சுக்லா லக்னோவில் பிறந்து உத்தரப் பிரதேசத்தின் அல்காஞ்ச் நகரின் சிட்டி மான்டிசோரி பள்ளியில் கல்வி பயின்றவர். அவர் ஈடுபட்டுள்ள ஏக்சியொம் 4 விண்வெளிப் பயணத்தின்போது விண்கலம் வெற்றிகரமாகப் பாய்ச்சப்பட்டது நேரடியாக ஒளிபரப்பானதைக் கண்டு மக்கள் கொண்டாட்டத்தில் திளைத்தனர். குழுத் தலைவர் கேப்டன் சுக்லாவுக்கு முன்பு, 1984ஆம் ஆண்டில்தான் மற்றோர் இந்தியரான ராக்கேஷ் சுக்லா விண்வெளிக்குச் சென்றார். மேலும், அனைத்துலக விண்வெளி நிலையத்துக்குப்…
போரா மாநாட்டையொட்டி கொழும்பில் விசேட போக்குவரத்து
போரா மாநாட்டையொட்டி கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. போரா மாநாடு இன்று(25) கொழும்பு கோட்டையில் உள்ள டி.ஆர்.விஜயவர்தன மாவத்தையில் அமைந்துள்ள கண்காட்சி மற்றும் மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இந்த மாநாடு 25 மற்றும் 27 முதல் ஜூன் 05 வரை நடைபெறவுள்ளது. அதற்கமைய குறித்த தினங்களில் காலை 7:00 முதல் இரவு 10:00 மணி வரை மருதானை டார்லி வீதி, காமினி சுற்றுவட்டத்திலிருந்து டி.ஆர். விஜயவர்தன மாவத்தைக்கு கொள்கலன் வாகனங்கள், கல், மணல் ஏற்றப்பட்ட டிப்பர் வாகனங்கள் உள்ளிட்டவற்றின் நுழைவு மட்டுப்படுத்தப்படும் என பொலிஸார் அறிவித்துள்ளனர். அதேபோல் 27 முதல் ஜூன் 05 வரை காலை 07:00 முதல் காலை 11:30 வரை மற்றும் பிற்பகல் 03:00 முதல் இரவு 10:00 மணி வரையும் பம்பலப்பிட்டி போரா முஸ்லிம் பள்ளிவாசலில் போரா மாநாடு நடைபெறவுள்ளது. பம்பலப்பிட்டி…
இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது
இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் உறுதியளித்துள்ளது. அடுத்த இரண்டு மாதங்களுக்கு தேவையான எரிபொருள் முன்பதிவுகள் ஏற்கனவே உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அதன் தலைவர் டி.ஜே. ராஜகருணா தெரிவித்தார். “பொதுமக்களுக்கு தெரிவிக்க விரும்புவது, அடுத்த இரண்டு மாதங்களுக்கு எரிபொருள் தேவைக்காக எவ்வித பிரச்சினையும் இல்லாமல் முன்பதிவுகள் செய்யப்பட்டு உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. எந்தவொரு காரணத்திற்காகவும் இந்நாட்டில் அடுத்த இரண்டு மாதங்களுக்கு எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது. பிரச்சனை என்னவென்றால், எரிபொருள் எந்த இடங்களிலிருந்து வருகிறது என்பதுதான். அதற்கு பிறகு, போரின் தாக்கம் உள்ளதா என்பதை பரிசீலிக்க வேண்டும்,” என்றார். மேலும், தற்போதைய நிலையில், சட்டவிரோதமாக எரிபொருள் கையிருப்பு வைப்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என டி.ஜே. ராஜகருணா கூறினார். “எங்களிடம் உள்ள அறிக்கைகளின்படி, ஒக்டேன் 92 பெற்றோல் பெருமளவு இறக்குமதி செய்யப்படுவது போர் நடக்கும் பிராந்தியத்திலிருந்து அல்ல. அவை…
மனித உரிமை ஆணையாளர் சபாநாயகர் சந்திப்பு
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையாளர் சபாநாயகர் சந்திப்பு நடைபெற்றுள்ளது. கட்சித் தலைவர்களுடன் அவர் சந்திப்பு நடத்தினார். உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் (Volker Türk) நேற்று (24) பாராளுமன்றத்தில் சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்னவை சந்தித்தார். இதன்போது பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர மற்றும் உதவிச் செயலாளர் நாயகம் ஹன்ஸ அபேரத்னவும் கலந்துகொண்டனர். இந்த சுமூகமான கலந்துரையாடலின் போது, சபாநாயகர் இலங்கை பாராளுமன்றத்திற்கு ஆணையாளரை வரவேற்றார். இலங்கையில் அண்மையில் நடைபெற்ற தேர்தல்கள் வன்முறை சம்பவங்கள் இல்லாமல், மக்களை பிளவுபடுத்தும் இன அரசியலை உறுதியாக நிராகரிப்பதை பிரதிபலிக்கக்கூடிய வகையில் சுதந்திரமாகவும், நியாயமாகவும், அமைதியாகவும் நடத்தப்பட்டதாக சபாநாயகர் சுட்டிக்காட்டினார். உண்மையான நல்லிணக்கம் ஒவ்வொரு தனிநபரின் இதயத்திலிருந்தும் ஆரம்பிக்க வேண்டும் என்றும், மக்களால்…
காற்றில் பறந்தது டிரம்பின் பேச்சு: ஈரான் இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்
காற்றில் பறந்தது டிரம்பின் பேச்சு என்பதைப்போல ஈரானும் இஸ்ரேலும் மீண்டும் தாக்குதல் நடத்துகின்றன. இஸ்ரேலும் ஈரானும் போர் நிறுத்தம் செய்ய இணக்கம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்திருந்தார். அவரது அறிவிப்பை இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாஹு, ஈரானிய வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அரோக்கி ஆகியோர் உறுதிப்படுத்தியிருந்தனர். எனினும், போர் நிறுத்தத்தை மீறி இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருவதாக இஸ்ரேல் தெரிவித்திருக்கிறது. அதனால், ஈரான் மீது முழு அளவில் தாக்குதல் நடத்துமாறு தமது படைகளுக்குத் தளபதி உத்தரவிட்டுள்ளார். எனினும், இந்தத் தகவலை ஈரான் மறுத்துள்ளது. இஸ்ரேல்தான் முதலில் தாக்குதலைத் தொடங்கியதாகவும் அதன்படி பதில் தாக்குதலை நடத்துவதாகவும் ஈரான் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இரவு ஏழு மணிவரை யுத்த நிறுத்தத்திற்கு இணக்கம்
ஈரான் இஸ்ரேல் போர் நிறுத்தம் உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்காலிக போர் நிறுத்தம் அமுல்படுத்தப்படுவதாக இரு நாடுகளும் உறுதிப்படுத்தியுள்ளன. இரு நாடுகளும் போரை முடிவுக்குக் கொண்டுவர இணக்கம் தெரிவித்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்திருந்தார். எனினும், அவரது அறிவிக்குப் பின்னரும் இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. இந்த நிலையில், சற்று நேரத்திற்கு முன்னர் இரு நாடுகளும் தற்காலிகமாக இன்று இரவு ஏழு மணி வரை போர் நிறுத்தம் செய்வதாக இரு நாடுகளும் அறிவித்துள்ளன. இதனையடுத்து இஸ்ரேல் வான்பரப்பை மீண்டும் திறந்துள்ளது.