ஜனாதிபதி மாலைதீவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளார்.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று (28) காலை மாலைதீவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு அங்குப் பயணமானார்.
மாலைதீவு ஜனாதிபதி முகமது முய்சுவின் அழைப்பின்பேரில் ஜனாதிபதி இந்த விஜயத்தை மேற்கொள்கிறார்.
ஜனாதிபதி எதிர்வரும் 30ஆம் திகதி வரை மாலைதீவில் தங்கியிருப்பார்.
இந்த விஜயத்தின்போது இருநாட்டு தலைவர்களும் இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுகிறார்கள்.
இரு தரப்பினதும் பரஸ்பர ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்காக சில புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் ஏற்படுத்திக்கொள்ளப்படவுள்ளன.
இலங்கைக்கும் மாலைதீவுக்குமிடையில் முறையான இராஜதந்திர உறவுகள் ஏற்பட்டு இவ்வருடத்துடன் 60 ஆண்டுகள் பூர்த்தியாகும் நிலையில் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ விஜயம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
ஜனாதிபதி மாலைதீவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளும் தருணத்தில் வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் விஜித ஹேரத், சிரேஷ்ட அரச அதிகாரிகள் பலரும் இணைந்துள்ளனர்.