திருமணத்திற்குச் செல்லவிருந்த பிள்ளை ஆற்றில் வீழ்ந்து மரணம் அடைந்த சம்பவமொன்று கொட்டகலைப் பகுதியில் நேற்று இடம்பெற்றுள்ளது.
திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டெவோன் நீர் வீழ்ச்சிக்கு நீர் ஏந்திச் செல்லும் கொட்டகலை ரொசிட்ட பகுதியில் உள்ள ஆறு ஒன்றில் விழுந்த நான்கு வயது பிள்ளையே சடலமாக மீட்கப்பட்டுள்ளது.
திருமண நிகழ்ச்சி ஒன்றுக்குச் செல்லவிருந்த நிலையில், தனது மகளை தயார் நிலையில் வைத்து விட்டுப் பிள்ளையின் தாய் தயாராகி கொண்டிருந்த வேளை, பிள்ளை வீட்டின் அருகிலிருந்த ஆற்றில் தவறுதலாக விழுந்து நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் நேற்று (26)) இடம்பெற்றுள்ளது.
பின்னர் பிள்ளையைத் தேடும் நடவடிக்கையில் பொலிஸார், பொதுமக்கள் இணைந்து ஈடுபட்ட போது சுமார் மூன்று மணித்தியாலங்களுக்கு பின்னர் நீரில் அடித்து செல்லப்பட்ட பிள்ளை சடலமாக மீட்கப்பட்டுக் கொட்டகலை பிரதேச வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
சடலமாக மீடகப்பட்ட பிள்ளை கொட்டகலை ரொசிட்டா தோட்டத்தைச் சேர்ந்த நான்கு வயதுடைய கிரேக்சிக்கா நெகோமி என அடையாளம் காணப்பட்டுளார்.
சடலம் சட்டவைத்திய அதிகாரியின் பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை திம்புள்ள பத்தனை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.