நீர்த்தேக்கத்தில் வீழ்ந்த மாணவனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது

நீர்த்தேக்கத்தில் வீழ்ந்த மாணவனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது

அட்டை கடித்ததால் வடிந்த இரத்தத்தைக் கழுவச் சென்றபோது நீர்த்தேக்கத்தில் வீழ்ந்த மாணவனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

ஹற்றன் நகருக்கு நீர் வழங்கும் சிங்கமலை நீர்த்தேக்கத்தில் நேற்று தவறி வீழ்ந்த 17 வயது மாணவனைத் தேடும் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டன.

அரங்கலை கடற்படை சுழியோடிகளின் முயற்சியால் இன்று (09) மதியம் மாணவனின் சடலம் மீட்கப்பட்டது.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட மாணவன் கொட்டகலை கேம்பிரிட்ஜ் கல்லூரியில் கல்வி கற்கும் 17 வயது ராம் மூர்த்தி தமிழ் மாறன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இந்த ஆண்டு சாதாரண தரப் பரீட்சையை முடித்துவிட்டு, தேர்வு முடிவுகளுக்காகக் காத்திருந்த மாணவன் சக மாணவர்களுடன், கணினி வகுப்புகளுக்குச் செல்வதாகக் கூறி, நீர்த்தேக்கத்திற்குப் புகைப்படம் எடுக்க சென்றுள்ளார்.

பின்னர் அவர் அட்டை கடிக்குள்ளானதால் காலில் காயம் ஏற்பட்டதாகவும், இரத்தத்தைக் கழுவ நீர்த்தேக்கத்தில் இருந்த பாறையில் ஏறியபோது நீர்த்தேக்கதில் விழுந்ததாகவும் சக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

மாணவனின் பெற்றோர் வெளிநாடு சென்றுள்ளதாகவும், சடலம் பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா ஆதார வைத்தியசாலைக்கு சிறப்பு தடயவியல் நிபுணரிடம் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

கௌசல்யா, கொட்டகலை

Author

Related posts