தொழிலாளர்களுக்கு வீடு கட்ட கரண்டியைக் கையிலெடுத்த அமைச்சர்கள்

தொழிலாளர்களுக்கு வீடு கட்ட கரணடியைக் கையிலெடுத்த அமைச்சர்கள்.

இடம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு வீடு கட்ட கரண்டியைக் கையிலெடுத்த அமைச்சர்கள் பண்டாரவளை கபரகலை தோட்டத்தில் வரலாறு படைத்துள்ளனர்.

இதுநாள் வரை மலையகம் கண்டிராத அரசியல் மாற்றம் இது என்கிறார்கள் நெட்டிசன்கள். மண்சரிவில் வீடுகளையும், உடைமைகளையும் இழந்த பூனாகலை – கபரகலை தோட்ட மக்கள் செயலிழந்துள்ள மாக்கந்தை தேயிலைத் தொழிற்சாலையில் கடந்த ஆட்சியாளர்களால் தற்காலிகமாகத் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

எவ்வித வசதிகளுமற்ற அந்த அகதி முகாமில் நாதியற்றவர்களாகப் பாதிக்கப்பட்டவர்கள் கைவிடப்பட்டிருந்த மக்களுடன் மாபெரும் இந்த சிரமதானப் பணியில், பெருந்தோட்ட, சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்தியாரத்ன, பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப், பாராளுமன்ற உறுப்பினர்களான கிட்ணன் செல்வராஜ், அம்பிகா செமுவேல், ரவீந்திர பண்டார ஆகியோரும் இணைந்து கொண்டனர்.

அத்துடன், இலங்கை இராணுவத்தினர், ஓய்வு பெற்ற முப்படையினர், அரச உத்தியோகத்தர்கள், பிரதேச மக்கள் என்று பலரும் இச்சிரமதானப் பணிக்கு ஒத்துழைப்பு வழங்கினர்.

Author

Related posts