புதிதாக தெரிவு செய்யப்பட்ட இரத்தினபுரி மாநகர சபையின் முதல்வர் கே.ஏ.ஆர்.இந்திரஜித் கட்டுக்கம்பளை 18 ஆம் திகதி புதன்கிழமை இன்று தமது கடமைகளை உத்தியோக பூர்வமாக ஏற்றார்.
இரத்தினபுரி மாநகர சபையிலுள்ள முதல்வரின் உத்தியோகபூர்வ அலுவலகத்தில் அவர் கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்
இதற்கு முன்னதாக இதுவரை காலமும் நகரசபைக்கும் அதன் நிர்வாக நடவடிக்கைகளுக்கும் பொறுப்பாக இருந்த மாநகர சபை ஆணையாளரிடமிருந்து அதற்குரிய சாவியை உத்தியோகபூர்வ புதிய முதல்வர் இந்திரஜித் பெற்றுக் கொண்டார்
இந்நிகழ்வில் சர்வ மதகுருமார்களும் நகர சபை உறுப்பினர்கள், ஊழியர்கள் பலரும் கலந்து கொண்டனர்.