பலாங்கொடை பிரதேச சபைத் தலைவர் இராஜினாமா செய்துள்ளார். தேசிய மக்கள் சக்தியின் சார்பில் தெரிவான இவர், பதவியேற்ற ஒரு மாதத்திற்கும் குறைவான காலப்பகுதியில் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
பிரதேச சபைத் தலைவர் டி. ரஞ்சித் உதயகுமார தனிப்பட்ட காரணங்களுக்காகப் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.
அவரது வெற்றிடத்திற்குத் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினராகவும் தலைவராகவும் ஆரியதாச கம எத்திகே நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் சபரகமுவ மாகாண சபையின் முன்னாள் உறுப்பினராவார்.