கண்டி மாவட்டம் பன்விலை பிரதேச சபை ஐக்கிய மக்கள் சக்தி வசமானது. வியாழக்கிழமை இடம் பெற்ற சபை ஒன்று கூடலில் மேலதிக இரண்டு ஆசனங்களால் பன்விலை பிரதேச சபை ஆட்சியை ஐக்கிய மக்கள் சக்தி கைப்பற்றியது.மொத்தமாக 6 ஆசனங்களைப் பெற்றுக் கொண்டது.
ஐக்கிய மக்கள் சக்திக்கு ஆதரவாக சர்வஜன பலய (1 ஆசனம்) பொது ஜன ஐக்கிய முன்னணி (1 ஆசனம்) ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன (1 ஆசனம் ) ஆகிய கட்சிகள் வாக்களித்தன இதன்போது 9 ஆசனங்களோடு ஐக்கிய மக்கள் சக்தி பன்விலை பிரதேச சபை ஆட்சியை கைப்பற்றியது.
கடந்த 19 வருடங்களின் பின்னர் இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தி பன்விலை பிரதேச சபை ஆட்சியை கைப்பற்றிக்கொண்டது.5 ஆசனங்களைப் பெற்ற தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ( 2 ஆசனங்கள்) வாக்களித்து.
சபையின் தலைவராக 9 வாக்குகளைப் பெற்று மேலதிக இரு வாக்குகளால் ஐக்கிய மக்கள் சக்தியின் பிஹில்ல கங்கானமகே அனுரஷாந்த வாக்கெடுப்பின்போது தெரிவு செய்யப்பட்டார்.எதிர்த்துப் போட்டியிட்ட தேசிய மக்கள் சக்தியின் பந்துல பண்டார ரட்ணாயக 7 வாக்குகளைப் பெற்றுக்கொண்டார்.
சபையின் உப தலைவராக பொது பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த மஞ்சுள தேசப்பிரிய வீரசிங்க 9 வாக்குகளைப் பெற்று 2 மேலதிக வாக்குகளால் தெரிவு செய்யப்பட்டார்.
இவரோடு போட்டியிட்ட இலங்கை தொழிலாளர் காங்கிரஸைச் சேர்ந்த
V.S.அரியநாயகம் 7 வாக்குகளைப் பெற்றுக் கொண்டார்.
புசல்லாவை நிருபர் நவநீதன்