காசாவில் தொடர்ந்தும் பலஸ்தீனர்கள் படுகொலை

காசாவில் தொடர்ந்தும் பலஸ்தீனர்கள் படுகொலை

காசாவில் தொடர்ந்தும் பலஸ்தீனர்கள் படுகொலை செய்யப்பட்டு வருகின்றனர்.

இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்கள் மற்றும் துப்பாக்கிச் சூட்டில் பெரும்பாலானோ உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

காசா பகுதியில் உள்ள கான் யூனிஸ் பகுதியில் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களில் ஐந்து பேர் கொல்லப்பட்டனர். கடந்த 24 மணித்தியாலத்தில் நூற்றுக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

மத்திய காசா பகுதியில் உள்ள சலாஹுதீன் சாலையில் ஐக்கிய நாடுகள் சபையால் கொண்டு வரப்பட்ட உதவி லாரிகளில் இருந்து உணவு பெற காத்திருந்த மக்களை குறிவைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 14 பேர் கொல்லப்பட்டதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Author

Related posts