நாடு முழுவதும் 62வீதம் வாக்குப்பதிவு இடம்பெற்றிருப்பதாகத் தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 07 மணிக்கு ஆரம்பமாகி மாலை 4:00 மணிக்கு நிறைவடைந்தது.
இதற்கமைய, தேர்தல் மாவட்டங்கல் பலவற்றில் மாலை 04 மணி வரையலான வாக்குப்பதிவு வீதம் 60 % ஐ தாண்டியுள்ளது.
4 மணி வரை பதிவான வாக்குப்பதிவு வீதம் பின்வருமாறு,
மன்னார் – 70%
திருகோணமலை – 67%
பொலன்னறுவை – 64%
அநுராதபுரம் – 64%
காலி – 63%
திகாமடுல்ல – 63%
மாத்தளை – 62%
மட்டக்களப்பு – 61%
மொனராகலை – 61%
களுத்துறை – 61%
வவுனியா – 60%
பதுளை – 60%
நுவரெலியா – 60%
முல்லைத்தீவு – 60%
இரத்தினபுரி- 60%
கிளிநொச்சி – 60%
கேகாலை – 58%
மாத்தறை- 58%
புத்தளம் – 55%
கொழும்பு- 52%
நாடு முழுவதும் 62வீதம் வாக்குப்பதிவு இடம்பெற்றிருப்பதாக இதன் மூலம் உறுதிசெய்துகொள்ள முடியும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.
2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (06) மாலை 4:00 மணிக்கு நிறைவடைந்துள்ள நிலையில் வாக்கு எண்ணும் பணிகள் ஆரம்பமாகியுள்ளன.
2025 ஆண்டுக்கான உள்ளூராட்சி மன்றத் தேர்தல் இன்று (06) காலை 7:00 மணிக்கு நாடு முழுவதும் 13,759 வாக்களிப்பு மத்திய நிலையங்களில் ஆரம்பமானது.
வாக்குப்பதிவு மாலை 4:00 மணிக்கு நிறைவடைந்த நிலையில், 5,783 மத்திய நிலையங்களில் வாக்கு எண்ணும் பணிகள் மேற்கொள்ளப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
339 உள்ளூராட்சி மன்றங்களுக்காக இந்தத் தேர்தல் நடைபெற்றது. இதற்காக 1 கோடியே 71 இலட்சத்து 56,338 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனர்.
இந்த முறை தேர்தலில், அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்களிலிருந்து 75,589 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இவர்களில் 8,287 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர்.