மக்களுக்கு சேவையாற்ற எதிர்க்கட்சியாலும் முடியும் என்று இரத்தினபுரி பிரதேச சபைத் தேர்தலில் ஹப்புகஸ்தன்னை வட்டாரத்தில் பொதுஜன ஐக்கிய முன்னணியின் கதிரைச் சின்னத்தில் போட்டியிடும் கே. பாபு கண்ணன் தெரிவித்தார்.
பிரதேச மக்களுக்கு சேவையாற்ற ஆளும் கட்சியே உள்ளூராட்சி மன்றங்களிலும் ஆட்சிக்கு வர வேண்டும் என்ற கூற்றை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் பாபு கண்ணன் கூறினார்.
ஹப்புகஸ்தன்னையில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும்போது பாபு கண்ணன் இவ்வாறு கூறினார்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் சார்பில் பொதுஜன ஐககிய முன்னணியில் ஹப்புகஸ்தன்னை வட்டாரத்தில் போட்டியிடும் பாபு கண்ணன் மேலும் உரையாற்றுகையில்:
நான் போட்டியிடும் வட்டாரத்தில் ஆளும் கட்சிவெற்றி பெற்றால் மாத்திரமே மக்களுக்கு சேவையாற்ற முடியும் என்று சிலர் பொய்ப்பிரசாரம் செய்கிறார்கள். மக்களுக்குச் சேவையாற்ற பிரதேச சபைகளில் ஆளுங்கட்சியால் மாத்திரமல்ல. எதிர்க் கட்சியாலும் சிறந்த சேவையாற்ற முடியும். எல்லா உறுப்பினர்களுக்கும் தேவையான நிதி ஒதுக்கப்படும். எனக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பக்கபலம் இருக்கிறது. ஆகவே, ஹப்புகஸ்தன்னை வட்டாரத்தில் மக்களுக்கு சேவையாற்ற எதிர்க்கட்சியாலும் முடியும். என்னாலுவும் சிறந்த சேவையை மக்களுக்கு ஆற்ற முடியும் என்றார்.
இந்தக் கூட்டத்தில் பொதுஜன ஐக்கிய முன்னணி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆகியவற்றின் ஆதரவாளர்களும் பொதுமக்களும் கலந்துகொண்டனர்.
- ஜே. லக்ஷ்மிதாசன்
காணி நிலம் வேண்டும் தேமசக்தி!
