பஸ் விபத்தில் 22 இராணுவத்தினர் காயம்

பஸ் விபத்தில் 22 இராணுவத்தினர் காயம்

பஸ் விபத்தில் 22 இராணுவத்தினர் காயம்: நிட்டம்புவ – கிரிந்திவெல வீதியில் இன்று (21) இடம்பெற்ற விபத்தில் 22 இராணுவ வீரர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

நிட்டம்புவவிலிருந்து கிரிந்திவெல பகுதிக்கு இராணுவத்தினரை ஏற்றிச் சென்ற பஸ் வண்டி எதிரே வந்த லொறி ஒன்றுடன் விபத்து நேர்ந்ததாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் பஸ் சாரதி உள்பட 22பேர் காயமடைந்து வத்துப்பிட்டிவல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுள் 20பேர் சிகிச்சை பெற்று வெளியேறியதாவும் இராணுவ சாரதியும் மற்றொரு வீரரும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Author

Related posts