மலையக மக்களின் மொழி தமிழா?

சந்திக்கடை சிவராமு

சுந்தரம்: அன்னே வனக்கம்!

சிவராமு: வாடா சுந்தரம். இவ்ளோ நாள் எங்க போன? அதென்னடா அன்னே வனக்கம் னு சொல்ற?

சுந்தரம்: என்ன அன்னே வனக்கம் சொன்னாலும் கோவப்படுரிங்க?

சிவராமு: வணக்கம் சொல்லணும் தான். ஆனால், நீ சொன்னது வணக்கமும் இல்ல. அண்ணனும் இல்லை. ஓ நீங்க எல்லாம் தமிழ் இல்லைதானே. நோ பிராப்ளம்.

சுந்தரம்: என்ன நான் தமில் இல்லயா? மோடி வந்த நேரம் தமில்ல பெனர் இல்லைனு நான் தான் மொத மொதல்ல பேஸ்புக்ல போட்டேன். தெரியுமா உங்களுக்கு?

சிவராமு: தமிழ்ல பெனர் இல்லைனு நீ ஏன் கவலைப்படணும்? தமிழாக்களே சும்மா இருக்கும்போது!

சுந்தரம்: ஏன் நான் சொல்லக்கூடாதா, அப்ப நான் யாரு?

சிவராமு: நீ தமிழ் இல்லைடா. நாலாஞ்சாதி. அதாவது மலையக மக்கள். உன் மொழி மலை. இல்லைனா தமில். நொட் தமிழ்.

சுந்தரம்: அன்னே, உங்களுக்கு என்ன பைத்தியம் கியத்தியம் பிடிச்சிருக்கா? தமிலுக்கு உயிரயும் குடுப்பேன் நான். நீங்க என்னா இந்த யாழ்ப்பாணத்தாய்ங்க மாதிரி வெட்டிப் பேசுரீங்க? எனக்குப் புடிக்கல.

சிவராமு: அப்படி இல்லடா! இலங்கையில சிங்களம், தமிழ், முஸ்லிம் அப்படின்னு இருக்கு. இப்ப உங்கள நாலாஞ்சாதியில சேர்த்து மலையக மக்கள்னு சொல்லுறாங்க. அதாவது நாலாவது சாதி மலையக மக்கள். அப்ப நீங்க தமிழுக்குள்ள வர மாட்டீங்க. நாலாஞ்சாதி. தமிழ் தெரியாத காட்டு வாசி. தோட்டக்காட்டான். மலையக மக்கள். கந்துரட்டமினிஸ்ஸு. பிசசைக்காரன், பேமானி, புறம்போக்கு. அடிமை. சுரணை கெட்ட ஜென்மம். தமிழ் பேசத் தெரியாத நாதாரி. இன்னும் சொல்லணுமா?

சுந்தரம்: அன்னே நம்ம ரெண்டு பேருக்கும் 25 வருச உறவிருக்கு. ஒரு நாளும் நீங்க இப்படி கேவலமாகப் பேசல. நமக்கு 200 வருச வரலாறு இருக்கு.

சிவராமு: அட மானங்கெட்ட நாயே! அந்த உரிமையிலதான் பேசுறன். 200 வருசம் வரலாறு உனக்கு. எனக்கு 2500 வருசம். ஏன்டா பின்னுக்கு யோசிக்கிற பரதேசி. முன்னுக்கு உள்ளத யோசி. 200 வருசம் பிச்சை எடுத்தோம்னு சொல்லிச் சொல்லியே இன்னும் பின்னுக்குப் போகாதீங்கடா. இன்றைக்கு நிலையிலை வாழுங்க. ஒழங்காத் தமிழ பேசுங்க. தமிழனா வாழுங்க. கூலித் தமிழ்னு ஒருத்தன் எழுதினான் அந்த மாதிரி பேசாதீங்க. தமிழப் பேசுங்க. இந்த நாட்டிலை சிங்களவங்களுக்கு அடுத்ததா தமிழ் மக்கள். அந்த வரிசைக்குள்ள வாங்க. நாலாஞ்சாதியா நாசமாப் போகாதீங்க.

சுந்தரம்: அன்னே.. எனக்கு தலையை சுத்துது. நாளைக்கு வாறன் விபரமா சொல்லுங்க.இப்ப எனக்கு இந்த சாமான்களக் குடுங்க. பொண்டாட்டி பார்த்துக்கிட்டு இருப்பா…..

தொடரும்……..

Author