அதிவேக நெடுஞ்சாலைகளில் அட்டைகளைப் பயன்படுத்தலாம்

அதிவேக நெடுஞ்சாலைகளில் அட்டைகளைப் பயன்படுத்தலாம்

அதிவேக நெடுஞ்சாலைகளில் அட்டைகளைப் பயன்படுத்தலாம்: அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் போது வங்கி அட்டைகளைப் பயன்படுத்தி பணம் செலுத்த அனுமதிக்கும் நடவடிக்கை மே 1 ஆம் திகதி முதல் செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (11) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் போது debit மற்றும் credit அட்டைகளைப் பயன்படுத்தி பணம் செலுத்த முடியும்.

கொட்டாவை, கடவத்தை சந்திப்புகளில் இது ஏற்கனவே ஒரு முன்னோடித் திட்டமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க மேலும் தெரிவித்தார்.

Author

Related posts