அடுத்தாண்டு மாகாண சபைத் தேர்தல்

அடுத்தாண்டு மாகாண சபைத் தேர்தல்

அடுத்தாண்டு மாகாண சபைத் தேர்தல்: நடைபெறவுள்ள பாராளுமன்றப் பொதுத் தேர்தலைத் தொடர்ந்து மாகாண சபைத் தேர்தலையும் அதனைத் தொடர்ந்து உள்ளூராட்சிமன்றத் தேர்தலையும் நடத்த நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

பெரும்பாலும் இந்தத் தேர்தல்கள் அடுத்தாண்டு நடைபெறும் என்று ஜனாதிபதி தெரிவித்தார்.

இரத்தினபுரியில் இன்று நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய ஜனாதிபதி, மாகாண சபைத் தேர்தலையும் உள்ளூராட்சி மன்றத்தேர்தலையும் நடத்தி, மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாகக் குறிப்பிட்டார்.

மாகாண சபைத் தேர்தலும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலும் இடைநிறுத்தப்பட்டு நீண்டகாலமாகியும் அதனை நடத்துவதற்கு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்று அரசியல் கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன.

மலைக்குருவி

Author

Related posts