சீனப்பிரதமர் விஜயத்தால் பாகிஸ்தான் தலைநகர் பாதுகாப்புக்காக முடக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் சீனப் பிரதமர் தலைமையில் சர்வதேச மாநாடு நடைபெறுவதால் அந்நகரில் போக்குவரத்தை கட்டுப்படுத்தி பாதுகாப்பை பலப்படுத்த அந்நாட்டு அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக சீனப் பிரதமர் லீ கியான் இன்று பாகிஸ்தான் வந்தடைந்தார்.
11 ஆண்டுகளுக்குப் பிறகு சீனப் பிரதமர் ஒருவர் பாகிஸ்தானுக்கு வந்திருப்பது சிறப்பம்சமாகும்.
இஸ்லாமாபாத் நகருக்கு மூன்று நாள்கள் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் மாநாட்டையொட்டி நகரில் உள்ள பாடசாலைகள், வணிக நிறுவனங்கள் ஆகியன மூடப்பட்டுள்ளன.
மேலும், நகரின் பாதுகாப்பை பலப்படுத்த பொலிசாரும் பாதுகாப்பு படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.
