கொழும்பு – கட்டுநாயக்க நெடுஞ்சாலையின் ஒரு வழிப் பாதையைத் தற்காலிகமாக மூடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அவ்வப்போது மேற்கொள்ளப்படும் பராமரிப்புப் பணிகள் காரணமாக இவ்வாறு பாதையை மூடுவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இம்மாதம் முழுவதும் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, நெடுஞ்சாலையின் ஒரு வழிப்பாதை மட்டும் திறக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.