கொழும்பு தாமரைக் போபுரத்தைப் பார்வையிடச் சென்ற மாணவி ஒருவர் போபுரத்தின் மேலிருந்து வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த மாணவி சர்வதேச பாடசாலையொன்றில் கல்வி கற்பவர் என்று விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
மாணவி தவறி வீழ்ந்தாரா அல்லது தற்கொலை செய்துகொண்டாரா என்பதைக் கண்டறிய பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.