ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் அமைச்சர் நிமல் சிறிபால அணியினர் கைச்சின்த்தை விட்டுவிட்டுச் சிலிண்டர் சின்னத்திற்கு மாறியுள்ளனர்.
எதிர்வரும் பொதுத் தேர்தலில் தமது அணி சிலிண்டர் சின்னத்தில் போட்டியிடும் என்று முன்னாள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
நிமல் சிறிபால டி சில்வாவின் அணியினர் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் சிலிண்டர் சின்னத்தில் சுயேச்சையாகப் போட்டியிட்ட ரணில் விக்கிரமசிங்கவை ஆதரித்தனர்.